எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !

சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !

தோளிலே சுமந்து சென்றாய்
சுகமுடன் பணியைச் செய்தாய்
ஆதாலால் அந்த மல்லி
அனைவரின் வசமாய் ஆச்சு
சிறு கதை மன்னனாக
சிறந்து நீ விளங்கினாலும்
பெரு மனங் கொண்டதாலே
பிரபலம் ஆகி விட்டாய்

சரிவெலாம் வந்த போதும்
சலிப்பிலா உள்ளங் கொண்டு
நிலைபெற உறுதி பூண்ட
நீயென்றும் நிலைத்து வாழ்க
கண்ணீரைக் கொண்டு நீயும்
கதைபல எழுதி நின்றாய்
தண்ணீரைக் காட்டித் தானே
தகைவுடை பரிசைப் பெற்றாய் !

உண்மையாய் உழைத்து நின்றாய்
ஊருக்கு வேரும் ஆனாய்
உன்னலம் துறந்து நின்றாய்
உயர்ந்து நீ இருக்கின்றாயே
விண்ணிலே நிலவாய் நின்று
வெளிச்சத்தை காட்டி நாளும்
மண்ணிலே எழுத்தை ஆண்டு
மதிப்பினைப் பெற்று விட்டாய் !

மல்லிகையை வளர்த் தெடுத்த
வல்லவனே நீ வாழ்க
நல்லதமிழ் எழுதி நிற்கும்
நாயகனே நீ வாழ்க
எல்லையிலாப் புகழ் பெற்று
என்றுமே நீ வாழ்க
எழுத்துலகில் ஜீவா நீ
என்றுமே வாழ்க வாழ்க !

நடந்தலைந்து நீ தந்த
நல்ல தமிழ் ஏடெமக்கு
நல்விருந்தாய் இருந் தமையை
நாம் மறக்க மாட்டோமே
தெரிந் தெடுத்து வைத்தபெயர்
சிறந் தோங்கி நிற்கிறது
வரம் பெற்ற ஏடாக
மல்லிகையும் மணக்கிறது !

மல்லிகைப் பந்தல் போட்டு
வளர்த்தனை பலரை நாளும்
கள்ள மில் செயலினாலே
கற்றவர் புகழ நின்றாய்
நல்லதோர் ஏடாய் நாளும்  
மல்லிகை வளரச் செய்தாய்
நாட்டிலே உள்ளார் நெஞ்சில்
நாயகன் ஆகி விட்டாய் !

மல்லிகை மணக் கிறது
மன மெல்லாம் மகிழ்கிறது
செல்லு கின்ற இடமெல்லாம்
ஜீவாவைப் பார்க் கின்றோம்
நல்ல தொரு ஏடுதந்த
நற்ற மிழன் ஜீவாவே
எல்லை யிலா இன்பமுடன்
என்றுமே நீ வாழ்க !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R