எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள், பேராசிரியர்களை அதிக அளவில் கொண்ட பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?

* இலங்கைத் தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் * ஆய்வுக் கட்டுரைகள்..
* இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலகட்டத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்
* இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைதமிழ் இலக்கியத்தின் ஏனைய இலக்கியப்போக்குகளான பிரபஞ்ச யதார்த்தவாதம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைச் சிறுபான்மைத்தமிழரின் குரலினை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கை மலையகத்தமிழர்களின் இலக்கியம்  பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத் தமிழ் முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்து ஆற்றிய பங்கு பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை நினைவு கூர்ந்து எழுத்தப்பட்ட ஆக்கங்களைப்பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.

இவற்றைப்பற்றித் தெரிந்தவர்கள் அறியத்தரவும், ஆனால் இவற்றையெல்லாம் தனித்திருந்து ஒருவர் சாதித்துள்ளார். இவர் வெளியிட்ட மல்லிகை சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களிலிருந்து இவை அனைத்தையும் உருவாக்க முடியும்.

அட்டைபட ஓவியங்களாக்கி எழுத்தாளர்களைக் கெளரவப்படுத்தியுள்ளார். பல நூல்களைத் தனது மல்லிகைப்பந்தல் வாயிலாக வெளியிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகமோ அல்லது அங்கு பணி  புரிந்த பேராசிரியர்களோ இவர் ஆற்றிய அளவுக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருப்பார்களா? குறிப்பிடத்தக்க சிலர் இவ்விதம் செய்திருப்பார்கள்.

இவ்விதமான சாதனைக்குரியவர்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் பெரும்பாலான போக்குகளைப் பிரதிபலிக்கும் எழுத்துகளைத் தாங்கி மல்லிகை வந்துள்ளது. பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, மத வேறுபாடுகளைக் கடந்து, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, வர்ண வேறுபாடுகளைக் கடந்து படைப்புகளைத் தாங்கி வெளியான சஞ்சிகை மல்லிகை. புத்தக வெளியீடு, சஞ்சிகை வெளியீடு இவற்றுடன் புனைகதை, கட்டுரை எனப் பங்களிப்பு செய்தவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவரது பிறந்த தினம் ஜூன் 27. அவரை நன்றியுடன் நினைக்கும் இத்தருணத்தில் யாழ் பல்கலைக்கழகம் ஏன் இவருக்குக் கெளரவக் கலாநிதி பட்டமளித்துக் கெளரவம் செய்யக்கூடாது என்றொரு கேள்வியும் கூடவே எழுந்தது. அவர்கள் செய்ய வேண்டிய பலவற்றை இவர் ஒருவரே தனியாகச் செய்திருக்கின்றார். அந்தப் பங்களிப்புக்காகவாவது யாழ் பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ கலாநிதி பட்டமளித்துக் கெளரவிக்கலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R