'ரோஜா' ஆனந்த்பழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர் ஆனந்தின் பிரிவு கனடா தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வீரியத்துடன் ரொறன்ரோவில் இலக்கிய முன்னெடுப்புகளில் முன்னின்றவர். அதன்பின் மொன்றியலுக்குச் சென்று அங்கும் இலக்கிய சேவைகளை முன்னின்று தொடர்ந்து செய்தவர். 1990 களில் கனடாவில் இருந்து வெளிவந்த ரோஜா என்னும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து பலருடைய ஆக்கங்களை வெளியிட்டவர். வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் இலக்கிய ஈடுபாடுகாரணமாக மிகச் சிறப்பாக அந்த இதழ்களை வடிவமைத்திருந்தார். எனது சிறுகதைகளும் சில அந்த இதழ்களில் வெளிவந்து பல வாசகர்களையும் சென்றடைந்தன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் ஆரம்பகாலத்தில் இவர் அங்கத்தவராக இருந்தார்.

எனது முதல் நாவலான ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற போராட்ட சூழலில் எழுதப்பட்ட முதல் நாவலுக்கு, மிக அழகான அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்தது இவர்தான். முதல் பதிப்பு கனடாவிலும், இரண்டாவது பதிப்பு சென்னை, மணிமேகலைப்பிரசுர வெளியீடாகவும் வெளி வந்தது. மொன்றியலில் இருந்து வெளிவந்த இருசு பத்திரிகையின் ஆசிரியராக இவர் இருந்தபோது, இருசு பத்திரிகைக்குத் தொடர்கதை ஒன்று எழுதித்தரும்படி கேட்டிருந்ததால், ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற தொடரை எழுதியிருந்தேன். பின்பு மணிமேகலைப் பிரசுரத்தால் அந்தத் தொடர் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. எனது சிறுகதைகள் சிலவற்றைத் தெரிவு செய்து, தானே குரல் கொடுத்து இசையும் கதையுமாக அலையோசை வானொலியில் ஒலிபரப்பியிருந்தார். ‘இங்கேயும் ஒரு நிலா’ என்ற தலைப்பில் அந்தக் கதைகள் ஒலிப்புத்தகமாக வெளிவந்தன. ஆரம்ப காலங்களில் ரோஜா இதழ், அலையோசை வானொலி, இருசு பத்திரிகை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் கனடிய தமிழ் வாசகர்களை எனக்கு உருவாக்கித்தந்த பெருமை நண்பர் ஆனந்திற்கும் உண்டு.

நல்ல இதயம் படைத்த நண்பரின் பிரிவுத் துயரில் அவரது குடும்பத்தவருடன் இணைந்து, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக நாங்களும் பங்கு பற்றுகின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

குரு அரவிந்தன்
தலைவர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
14-6-2020


ரோஜா சஞ்சிகையின் பக்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R