சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


 

சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 3 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..!

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

வைகாசி மாதம் பிறந்தது
வசந்த காலமும் மலர்ந்தது
பூக்கள் பழங்கள் சொரிந்தன
பறவைகள் பாடிக் களித்தன.

தென்றல் காற்றும் வீசியது
தோப்பில் குயில்கள் கூவின
காக்கைகள் அழகாய்க் கூடுகள்
கட்டியே முட்டைகள் இட்டன.

கூடு கட்டத் தெரியாத
குயிலும் பார்த்தே இருந்தது
தன்னைப் போன்ற காக்கையென
தானும் நினைத்துக் கொண்டது.

காக்கை வெளியே பறக்கையிலே
கள்ளத் தனமாய்க் கூட்டினிலே
குயிலும் முட்டை இட்டதுவே
காக்கையும் அடை காத்ததுவே.

குஞ்சுகள் பொரித்து வந்திடவே
காக்கையும் இரையை ஊட்டியதே
எல்லாக் குஞ்சும் தனதெனவே
எண்ணிக் காக்கை வளர்த்ததுவே..

காக்கைக் குஞ்சுகள் கரைந்திடவே
குயிலின் குஞ்சுகள் கூவினவே
காக்கையும் அறிந்து கொண்டதுவே
குயிலின் செயலைப் புரிந்ததுவே..

வளர்ந்த குயிற் குஞ்சுகளை
வெளியே காகம் துரத்திடவே
இறக்கை விரித்துப் பறந்தனவே
இரையைத் தேடி மகிழ்ந்தனவே.

கீதம் பாடும் குயிலுக்கோ
குஞ்சை வளர்க்கத் தெரியவில்லை
இயலாதோர்க்கு உதவி செய்தால்
எல்லோர் வாழ்வும் சிறந்திடுமே.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R