வாசிப்போம்

என்னிடமிருக்கும்
அனைத்தையும்
அளந்துவிட்டுச் சென்ற
என்னவளாய் இருந்தவளுக்கு
இந்தக் கவிதை படையல்.

மணமான பிறகும்
இன்னும் மனமாகாமலே
காலத்தைத் தள்ளும்
சமூகச் சட்டகத்தில்
இடம்பிடித்த
புதுவிதத் தம்பதிகள்
நாம்.

மணவுறவு இல்லை
மனவுறவும் சரியில்லை.
இடையில் ஊசலாடும்
உடற்பசிக்குச் சோறில்லை.

காதலையும் காமத்தையும்
ஒன்றுச்சேர்க்க முயல்கிறேன்
உன்னிடத்தில்.
கடமையும் காத்திருத்தலையும்
ஒன்றுச்சேர்க்க முயல்கிறாய்
என்னிடத்தில்.

காலம் ஓடுகிறது.
காதல் கலங்குகிறது.
காமம் கரைகிறது.

நாட்கள்
வாரங்களாகுகின்றன.
வாரங்கள்
மாதங்களாகுகின்றன.
மாதங்கள்
வருடங்களாகுகின்றன.

இதோ!
புது வருடப் பிறப்பும்
வந்துவிட்டது.
இனியும்
நாம் பிரிந்தே
இருக்க வேண்டிய
நாட்களும்
வாரங்களும்
மாதங்களும்
வருடங்களும்கூட
தொலைத் தூரத்தில்.

இது
விதி விளையாட்டா?
இல்லை
சதி விளையாட்டா?
இது
என் விளையாட்டா?
இல்லை
உன் விளையாட்டா?

ஒத்துக்கொள்கிறேன்
தப்புச் செய்தவன்
நான் தான்.
தெரியாமல்
தப்பும் செய்தவனும்
நான்தான்.

ஒத்துக்கொள்கிறாய்
தெரியாமல்
தப்புச் செய்தவள்
நான் தான்.
தெரிந்தும்
தப்புச் செய்கிறவளுள்
நான்தான்.

நானா? நீயா? போட்டியில்
விஜய் டி.வி
நீயா? நானா? கோபிநாத்தே
குழம்புவார்
யார் பக்கம் சாய்வதென்று.

தயவுசெய்து
என்னிடம் சேர்ந்து விடு.
தயவு தாட்சணையின்றி
சேர்ந்து விடுகிறேன்
உன்னிடம்.

ஒன்றாய் வாழ்வோம்.
இல்லையேல்
ஒன்றுபட்டுப் பிரிவோம்.
என்னுடைய முடிவு
உன் வாழ்வின் தொடக்கம்.
உன்னுடைய முடிவு
என் வாழ்க்கையின் தொடக்கம்.

போதும்
போதும்
நமக்குண்டான
தலைகணம்.

மீட்டிக் கொள்வோம்
விவாகத்தை
அல்லது
முடித்துக் கொள்வோம்
விவாகரத்தை.

இ-மெயில்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R