வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

 

தொடர்ந்து பேச
நான் திராணியற்று,
அவனுடைய பேச்சில்
சிறைப்பட்டுக் கொண்டேன்.

எங்கும் கேட்டிறாத செய்திகளை
என்னிடம் ஒன்றுவிடாமல்
அவனுக்குத் தெரிந்த மொழிநடையில்,
அவனுக்குத் தெரிந்தவரை
பேசிக்கொண்டே இருந்தான்.

முதலில் அவனது பேச்சானது
பிறப்பை முன்னிருத்தியிருந்தது.

மனிதப் பிறப்பின்
இரகசியங்களை மிகவும்
சிலாகித்து பேசினான்.

ஒரு கட்டத்தில்
மனிதர்கள்
மண் புழுவிற்குக்கூட
ஒப்பாக அறுகதையற்றவர்கள் என்கிற
அவனது விமரிசனத்தைக் கண்டு
அதிர்ச்சியடைந்தேன்.

அவனது பேச்சை
அல்லது
விமரிசனத்தை
மறுதளித்து
நான் பேசத் துவங்கும் முன்,
அவன் தனது காதுகளிரண்டை
மூடிக்கொண்டான்.

எனக்குக் கோபம்
உச்சத்தில் ஏறியது.

மெளனத்தைக் கலைத்து
மீண்டும் பேச்சைத் துவங்கலாமா?
அல்லது
மெளனத்துடனே இருந்துவிடலாமா?
என்று நிதானமிழந்து
அவனுக்கு ஏட்டிக்குப் போட்டியாக,
நான்
மனிதர்களில் மீது வைத்திருந்த
அபிப்பிராயத்தை
அகர வரிசைப்படி
ஒன்றுவிடாமல்
அவன் முன்வைத்தேன்.

இம்முறையும்
காதுகளோடு கண்களையும்
அவன் மூடிக்கொண்டது
என்னையே
உதாசினப்படுத்தியதுபோல்
இருந்தது.

அவனே
என் மெளனத்தைக் கலைத்து
இறப்புக் குறித்து பேசுகிறேன்
கேட்க,
நீ தயாராக இருக்கிறாயா?
என்று வினைவினான்.

எனது நாவின் பதிலை
எதிர்ப்பார்க்காமல்
அவனது நாவு
அவனுக்கு இசைத்தபோது,
நானும்
எமது புலன்களும்
களவாடப்பட்டிருந்தோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R