நீர்வை பொன்னையன்காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், தாயகத்தில் வாழ்ந்த 90 வயதான எழுத்தாள நண்பரின் மறைவும் இதைத்தான் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. அவரது ஆக்கங்களை மாணவப்பருவத்தில் படிக்க நேர்ந்ததால் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டேன். எமது முன்னோடிகளான ஏனைய எழுத்தாளர்களைப் போல அவரிடமும் ஒரு தனிப்பட்ட எழுத்துநடை இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் எனது முதலாவது கதை வெளிவந்து எனக்கு தளம் அமைத்துக் கொடுத்ததுபோலவே அவரது முதலாவது கதைக்கும் ஈழநாடு தளமமைத்துக் கொடுத்திருந்தது. நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப்பெற்றார். அதன்பின் கல்கத்தா சென்று பட்டப்டிப்பை நிறைவேற்றினார். இவரது மேடும் பள்ளமும், ஜென்மம், காலவெள்ளம், பாஞ்சான், வந்தனா போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கன.

சிறந்த எழுத்தாளர்களும், தரமான எழுத்துக்களும் குறைந்து வரும் இக்காலத்தில் சாகித்ய ரத்னா விருது பெற்ற இவரது இழப்பு ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R