குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!காலத்துக்காலம் நாடுகளில் இலக்கியக் குழுக்கள் இயங்கும். இவற்றின் பின்னால் இவற்றின் சீடர்கள் இணைந்து இவர்களின் அங்கீகாரத்துக்காக அலைவார்கள். ஆதரவாகச் செயற்படுவார்கள். பதிலுக்கு இவர்கள் சீடப்பிள்ளைகளின் படைப்புகள் அவை எத்தகையவையாகவிருந்தபோதும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் அங்கீகாரம். இதுதான் இதன் பிரதான நோக்கம். இக்குழுக்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் & சஞ்சிகைகளைக் கைகளில் போட்டுக்கொள்வார்கள். அவையும் இக்குழுக்களின் பிதாமகர்களைத் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். இவை போன்ற இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் முன்பு பலமாக இருந்தது. ஆனால் இன்று இணையத்தின் வருகை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வருகை அவ்வகையான ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்து விட்டது. இணையத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வாசகர்களை இலகுவாக எழுத்தாளர்கள் அணுக முடிகின்றது.

கனடாவைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள குழுக்களில் முக்கியமானது மூன்று குழுக்களின் கூட்டிணைப்பு. 'அன்னை -இல்லம்' பத்திரிகை, 'நேரம்'சஞ்சிகை மற்றும் 'தமிழ்-விருது' ஆகிய குழுக்கள் இணைந்து கூட்டுக் குழுவாக இயங்குகின்றன. இக்குழுக்களில் இணைந்து முனைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் தீவிரமாக இயங்குகின்றார்கள். இவர்கள் தம் குழுக்களைச் சாராதவர்களின் படைப்புகளை வாசிப்பதில்லை. அவை பற்றிக் கதைப்பதோ , எழுதுவதோ இல்லை.

எழுத்தாளர்களே! முதலில் இக்குழு மனப்பான்மையை விட்டு வெளியே வாருங்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டியது போதும். இருப்பு சிறிது. இதற்குள் இவ்வகை ஆட்டம் எதற்கு? விருதுகளுக்காக , அங்கீகாரத்துக்காக அலையாதீர்கள். உங்கள் படைப்புகளே உங்கள் பலம். உங்கள் படைப்புகள் மூலம் உங்களை நிலை நிறுத்துங்கள். உங்களுக்குக் குழுக்களின் தயவோ , அரவணைப்போ தேவையில்லை. நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். இணையத்தை நன்கு பயன்படுத்துங்கள். உங்கள் படைப்புகளை எல்லைகளைக் கடந்து வாசகர்களிடம் கொண்டு சேருங்கள். பயனை எதிர்பாராதீர்கள். உங்கள் படைப்புகளில் சிறப்பிருப்பின் அவை நிச்சயம் உங்களை நிலை நிறுத்தும். உங்கள் படைப்புகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையெனில் இலக்கியக் குழுக்களை நாடுங்கள்.

ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள். பாரதியாருக்குப் பெரிதாக யாரும் விருதுகளைக் கொடுத்ததில்லை. ஆனால் இன்று அவரது படைப்புகளை வைத்துப் பலர் விருதுகள் பெறுகின்றார்கள். முனைவர் பட்டம் பெறுகின்றார்கள். பாரதியாரை முன் மாதிரியாகக் கொண்டு வாழுங்கள்; வாசியுங்கள்; சிந்தியுங்கள்; எழுதுங்கள். அவற்றால் நிச்சயம் மானுடர்கள் பயனடைவார்கள்; இன்புறுவார்கள்.


முகநூலில் மேற்படி பதிவுக்கு இடப்பட்ட எதிர்வினைகள்:

Noel Nadesan:  Canada got this kind of literature engineers. I know .

Sivakumary Jeyasimman: Agree

Sreeno Sri Sreesu:  1993 இலேயே(19 June,1993) மொன்றியலிருந்து ரொறொன்ரோ வந்து, கனடாவின் முதலாவது தமிழ் இலக்கிய அமைப்பான 'கனடா தமிழ் எழுத்தாளர் இணைய'த்தை உருவாக்கியவன்.(FOUNDING SECRETARY) தொடர் வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை..!! எட்டாந்தர எழுத்தாளர்கள் தான் மௌலி சூட்டப்படுகிறார்கள்..!! சந்தோஷமென்றால் சரி..!!

Rajes Bala: Well said.

SK Rajen காலத்திற்கேற்ற பதிவு. தைத்திருநாளுக்கு முதல் நாளில் பழையனவற்றைப் புறத்திலிருந்து மாத்திரமல்ல அகத்திலிருந்தும் அகற்றி புதிய எண்ணங்களை மனதில் பதித்து ஒழுகுதல் யாவர்க்கும் நன்றே!

Thuvaraka Thavaththurai : Correct

Tam Sivathasan: Another form of organized crime, as old as prostitution ;)

Balachandran Muthaiah: Tam Sivathasan could be “as same as..’

Siva Sivapalan : அருமையான கருத்துகோள்????????

Akathiyan Tholkapiyan : அரசியலென்பது ஒரு அரச முறைமைச் செயற்பாடு என்பதனைக் கடந்து அதுவே அனைத்து மானிட வாழ்வியல் தில்லு முல்லுகளுக்கான கோட்பாடாகி விட்டது , அரசியல் சித்து விளையாட்டுகள் தெரியாததனால் தான் அன்று பாரதியின் இழப்பு வீடு வெறும் பதின்நான்கு பேருடன் ஒப்பேறியது , இன்று அவன் எழுத்து உலகாள்கிறது.. திறமையே வெற்றியின் உண்மையான திறவுகோல்... நல்ல பார்வை...!

கணன் சுவாமி:  படைப்பை அடிப்படையாக வைத்து எதுவும் இங்கு இல்லை என்பது தான் பிசகு. படைப்பாளி என்ற ஒரு ஆட்டிபிஷல் முத்திரையை வைத்து சாகசத்தை நிகழ்த்த முடியாது என்பது படைப்பாளிகள் என்று சொல்பவர் பலருக்கு தெரிவதில்லை.!

Manoharan Periyasamy Manoharan Periyasamy: பாரதியாரை முன்மாதிரியாக வைத்து வாழுங்கள்.வாசியுங்கள்.சிறப்பு நண்பரே...

Alex Paranthaman: கருத்தாழம்மிக்க பதிவு. வரவேற்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R