- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -

புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

தன்னம்பிக்கையும் குறிக்கோளும்
நமக்கு இருந்தால் - இந்த
தரணியை நாம் வெல்லலாம்.
சமூக அக்கறையோடு போரிடலாம்
சகமக்களின் மதிப்பை நாம்பெறலாம்
ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்வோம்
பேரின்ப வாழ்க்கையை நாம் தருவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

சாதி மதமற்ற சமூகம் செய்வோம்
சமத்துவ வாழ்வை நாம் பெருவோம்
முதலாளித்துவத்தை வேர் அறுப்போம்
ஊழலற்ற சமுகத்தை நாம் உருவாக்குவோம்
விவசாயத்தைக் காத்திடுவோம்
நல்லுலகில் வாழ வழிச்செய்வோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

தீவிரவாதத்தை வேர் அறுப்போம்
இந்த தேசத்தை நாம் காப்போம்
தமிழின பண்பாட்டை கட்டிக் காப்போம்
தமிழ் விடுதலையடைய நாம் பாடுபடுவோம்
புது சரித்திர சமூகத்தை  நாம் படைப்போம்
புத்துலகம் அடைய நாம் விறைவோம்
இரண்டாயிரத்து இருபதை நமதாக்குவோம்;
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R