ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

நாட்டுக்காக  நான்
கொடுக்கின்றேன் :  உயிர் !
வீட்டுக்காக  நாடு
கொடுக்கிறது  சம்பளம் !

கூலிக்கு  மாரடிக்கும்
கூட்டம்  என்றுகூட ,
குறை  சொல்வோர் வாழும்
குவலயத்தில்  நாங்கள்….

கூலியைப்  பெற்று
வேலியைக்  காக்க…. எங்களின்,
வாலிபத்  துடிப்பை
வழங்கிக்  கொண்டிருக்கின்றோம் !

அடிக்கடி  உன்னை
வாட்டி  வதைக்கின்ற  நோய்…. !
நடக்க  முடியாமல்
படுத்துக் கிடக்கும்  அப்பா….!!
பற்றாக்  குறைகாட்டும்
அவரது  பென்சன்  பணம்…. !!!
திருமண  வயதை  எட்டி
தினமும்  பெருமூச்சுடன்
சீர்குலைந்த  பதுமைகளாகத்
தங்கைகள்  இருவரும்….!!!!
சேவல்  கூவி  எழுப்புகின்றதோ
இல்லையோ :  தினசரி
பூபாளம்  இசைத்திடும்
கடன்காரர்  வரிசை….!!!!!    

கேட்டுக்  கேட்டுக்
காது   புளித்ததால்  தான்
கேளாத  தூரத்துக்குப்
போய்விட்டேன்  என்று
எண்ணிவிடாதே  அம்மா !

இவையெல்லாம் : எங்களை
வளர்ப்பதற்காக  நீங்கள்
பட்டுக்கொண்ட  வடுக்களின்
வலிகள்  அல்லவா !

அறிவேன்  அம்மா !
நாளை  திருமணச்  சந்தையில்
விற்பனையாகப்  போகின்ற
என் உடன்   பிறப்புகள்…..

அவர்கள்  வாழப்போகின்ற
இல்லங்கள் : அனைத்திலேயும்
இந்தக்  கடன்  சாக்கடை
நாற்றம்  வேண்டாம் : நல்ல
சந்தன  வாடை  வீசட்டும்!

தன்னைத்  தேய்த்து
பிறருக்கு  வாசனை  கொடுக்கும்
சந்தனக்  கட்டையாய் நான்
சமர்ப்பணம்  ஆகுகின்றேன் ! 

படித்தவன் : பட்டம்  பெற்றவன்
பார்வையானவன் : ஆனாலும்,
பயனற்றவனாக  அன்று நான்
தெரு சுற்றும்  வேளையில்,
கிட்டப் போனாலும்  எட்டிச் சென்ற
சுற்றங்கள் : பேசக்கூசிய
நண்பர்  கூட்டங்கள்……

அனைவரும்  இன்று,
தொட்டுத்  தொட்டு உறவு சொல்லி
ஒட்டி  ஒட்டி  வருவதை,
உந்தன்  கடிதந்தான்
உரைத்ததே  அம்மா !

வரவேற்போம் : ஆனால்
வளைக்கரம்  கொடுக்க வேண்டாம் !
புன்னகைப்போம் : ஆனால்
போற்றித்  துதிக்க  வேண்டாம் !

நாட்டுக்காக  உயிரைவிடும்
எங்களை : நாளை  இங்கு
நாய்களும்  நரிகளும்
அடக்கம்  செய்தாலும்,
உங்கள்  தேவைக்கேனும்
நாலுபேர்  இருக்கட்டும் !

யுத்தமுனையில்  கேட்கின்ற
பேரிகையின்  முழக்கங்கள்
ரத்த  நாளங்களை
உடைப்பெடுக்க  வைத்தாலும்,
என்  சித்தத்தைக்  குளிர்விப்பது….
என் தங்கைகளுக்காக  ஒலிக்கின்ற
கெட்டி மேளங்கள்  தானம்மா !

நான்  திரும்பவும் : வருகின்றேனோ
இல்லையோ : தங்கைகளிடம்
சொல்லி   வையம்மா…..
பிறக்கப் போகின்ற : மருமக்கள்
ஒவ்வொருவரை : இந்திய
மண்ணுக்காகத்  தரும்படி !

ஆலமரத்தின்  நிழலில்
ஆயிரம்  ஜீவன்கள்
இளைப்பாறினாலும் : அதனின்
அடியினில்,  ஆணிவேர் ஒன்று
ஆதாரம்  தருகிறதல்லவா!

யுத்தங்கள்  வேண்டாம் என்று,
யோகிகள்  சொல்லக் கூடும் !
ஆனால் …. சுட்டுச்  சுட்டு
வந்து ஆறும் : காயத்தின்
அடையாளங்கள்  தான்
சுதந்திரத்தின்  பெருமையினைச்
சொல்லாமல்  நினைக்க வைக்கும்….

மரம்  இருக்கும்  காலம்வரை
அதற்கு : உரமும் இருக்க
வேண்டும்  என்பது,
உனக்குத்  தெரியாததல்ல!

நன்றியுள்ள  ஜீவன்
நாய்கூட : தனக்கு
இரண்டு  குட்டிகளே பிறந்தாலும்,
முதல் குட்டியைத்  தனக்கு
பத்திய  உணவாக்குவதில்லையா ?
அதுபோல  இந்நாட்டின்,
நன்றியுள்ள  தாய்க்குலங்கள்
நாடுவாழத்  தம்குட்டி…. ஒன்றைத்
தருதல் : தவறல்லவே !

இத்துடன்  முடிக்கின்றேன் !
அதோ  எதிரிகளின்,
பீரங்கி  முழக்கங்கள் : எங்களை
உக்கிர மாக்குகின்றன !
தாய், தந்தை, தங்கை  உறவுகள்,
அவுட்-அப்  போக்கஸாய்
எடுத்த புகைப்படம் போல,
கண்ணை விட்டுப்  போகிறதே !

சா(ர்)ப்  போக்கஸில் : நமது
துருப்புக்களின்  வரிசையே
தெரிகின்றது !

வாழ்ந்தாலும்  சரி,
மார்பில்  துளைபட்டு,
வீழ்ந்தாலும்  சரி,
உன்   மகனை,
நாளை  இம்மண்….
சான்றோன்  என்றே
சாற்றுகின்ற  மொழிகேட்டு,
ஈன்ற  பொழுதைவிட,
பெரிதுவக்கப்  போறவளே….!
பரந்து  விரிந்த
பாரத  மாதா
இரந்து  என்னை
அழைப்பதன்  முன் : நான்
விரைந்து  செல்கின்றேன்  அம்மா !

வந்தே  மாதரம்….!
வந்தே  மாதரம்….!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R