முகவரி.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி

கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.
oo

வாழ்வு முழுதும்...

கெட்ட வார்:த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின்  கிண்ணமே  அவள் வாழ்வு முழுதும்.

ஆட்டம் ஏன்!!

பெரிய மனிதக் கடலில்
நரி போன்ற திமிங்கிலங்கள்
செரிக்கச் செரிக்கக் குட்டிமீன்களை
அரித்து அரித்து உண்டன.

மனிதப் பாறைகளும் பார்த்தபடி
அநியாயங்களை வெகுவாக  இரசித்தபடி
குறியான போதை பெருகியது
வெறியாக உலகை மிரட்டுகிறது.

உயிர் பிளக்கும் அநியாயம்
துயரம் வார்த்தைகளும் ஊமையானது.
உயர்ந்து கடலலைகள் அடித்தது.
அயர்ச்சியின்றி அனைத்துமடங்கியது! மௌனம்!!

30-7-2019

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R