துளசி பாலமுரளிஎன் சகோதரன் எழுத்தாளர் பாலமுரளி (கடல்புத்திரன்) - காஞ்சனா தம்பதியினரின் புத்திரி செல்வி துளசி பாலமுரளி 8.7.2019 அன்று  தனது இருபத்து மூன்றாவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கினார். மருத்துவரின் கவனக்குறைவினால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட துளசி  இதுநாள் வரை இருப்புக்கான தனது போராட்டத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு வந்தார். தனக்குரியதோர் உலகினில் வாழ்ந்தபோதினும் சுற்றியிருந்த அனைவருக்கும் இன்பத்தையே தந்து வந்தார். அவ்வப்போது புன்னகை மலர அனைவரையும் நோக்கும் துளசியின் முகம் நினைவிலென்றும் நிழலாடும். தன்னால் முடிந்தவரை இருப்புக்காகப் போராடிய துளசி பற்றிய நினைவுகள் அனைவர்தம் நெஞ்சங்களிலும் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

இவரது ஈமச்சடங்குகள்  Highland Funeral Home - Scarborough Chapel இல் ஜூலை 11, 2019 காலை நடைபெற்றன. பின்னர் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, St. John's Norway, 256 Kingston Rd., Toronto ON M4L 1S7  என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது பற்றிய விரிவான விபரங்களுக்கு: https://www.arbormemorial.ca/highland-scarborough/obituaries/miss-thulasi-balamuraly/36225/  துளசி பாலமுரளியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. முகநூலில் இது பற்றிய தகவலறிந்து தமது அஞ்சலியினைத் தெரிவித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.


-செல்வி துளசி பாலமுரளியின் பிரிவை எண்ணிக் கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் எழுதிய அஞ்சலிக் கவிதை . -

துளசி மீண்டும் வரமாட்டாளா?

- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

மனக்குறள் 9 & 10

மலர்தலை உலகம் மன்பதை சிறக்கும்
வளர்கலை அறிவம் வையகம் ஆக்கும்

புலர்பொழு தொன்றில் பூத்திட நின்ற
மலர்மகள் துளசி மலர்ந்திடக் கண்டோம்!

எழுத்துல கத்தொடும் இயம்பிடும் மானுடம்
பழுத்தவோர் மடியினிற் பாங்கினள் ஆயினும்

வழுத்திய மான்மகள் வைத்தியம் வதையுற
அழுத்திய தாம்பிழை ஆக்கினர் என்பதும்

இறைவத் தொடும்பிழை என்பதாய் நினைந்து
மறையைத் தொழுகிறோம் மனத்தவள் சிறகில்

அன்பினால் அறைந்த அற்றைப் பொழுதில்
என்பினால் நினைந்து இதயம் துடிக்கிறோம்!

மென்மகள் துளசி மேன்மைகொள் பூவின்
கன்னலாம் மொழியும் கவர்ந்திடும் சிரிப்பும்

சின்னமாய் இருக்கும் தெய்வமொன் றாக
அன்னமாய் வந்தொரு அகிலமே தருகவே!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R