மனக்குறள் 9 & 10

மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!

இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!

எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!

வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!

இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!

வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!

சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !

கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!

கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!

பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!

எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது


மனக்குறள்-10 பாரதியின் பாதை

அறம்பொருள் இன்பம் அகத்துள் இருநூல்
பகர்பத்தும் எட்டும் தொகை!

வீடுபேற் றொடுசேர்ந்து ஒன்றும் பதினெட்டும்
ஏர்பதி னெண்கீழ் நூல் !

பாட்டுக் கொருபுலவன் பாரதி என்றுநா
மக்கல் உரைத்தார் மதிப்பு !

பாரதி என்கவே பார்த்துச் சமஸ்தானம்
தேர்ந்தெடுத்தார் பட்டம் தெளிந்து !

நீடுதுயில் நீக்கவந்த மாபுலவ னேயென்கப்
பாரதியைத் தானுரைத்தார் பார்!

புதுக்க விதையென்ற பொங்குகவி யிட்டுப்;
படைத்த முதற்கவிஞன் பார் !

சுயசரிதை ஆக்கிச் செறிந்த உரையில்
புதியநடை யிட்டார் புகல்!

ஷெல்லிதாசன், காளிதாசன் உத்தம சீடனுடன்
சாவித்திரி யும்ஆனார் சால் !

இந்தியா, சுதேசமித்(தி)ரன் சக்கர வர்த்தினியாம்
என்றேடு கள்இட்டார் என்ப!

குருவாய் நிவேதிதா, நெல்லையப்பர் தானும்
உருவானார் சீடர் உணர்!

- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R