அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள், வேலணையூரவர்கள், புங்குடுதீவு ஊரவர்கள், வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா உறுப்பினர்கள், வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள், வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் ,   புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள், யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள், கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள், மற்றும் கனடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள்- கனடிய தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள்- தமிழ் உணர்வாளர்கள் ஆகிய அனைத்துத் தமிழ் உறவுகளே

எனதருமைத் தந்தையும், ஈழத் தமிழ்ப் பேரறிஞருமான  தமிழ்ப்பேரன்பர் வித்துவான் க வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும், அதையொட்டிய ஆறு நூல்கள், மூன்று குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவையும், வரும் 27.07.2019 சனிக்கிழமை, கனடா - ரொரன்றோவிலுள்ள அய்யப்பன் கோயில் மண்டபத்தில்( Iyappan Temple Hall,  635 Middlefield Road, Scarbirough, Ontario, M1V 5B8) , கனடாவிலுள்ள எனது தாய் மாமன்மாரின் பிள்ளைகள், வேலணை ஊரவர்கள் , புங்குடுதீவு  ஊரவர்கள், எனது யாழ் இந்து நண்பர்கள்  அவர்களின் ஆதரவுடன் கொண்டாடவுள்ளேன்.

இவ் விழாவிற்கு நீங்கள் உங்கள் உறவுகளுடன் குடும்பமாக வந்து, கலந்து  கொண்டு சிறப்பிக்க வேண்டுமென , வேந்தனாரின் தமிழ் உணர்வின் பேரால், அன்போடும் , உரிமையோடும் அழைப்பு விடுகின்றேன். இத்துடன் இந்த விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். இதனை நீங்கள் உங்கள் நண்பர்களுடன்- தமிழ் அறிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி , பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

மீண்டும்  உங்கள் அனைவரையும் 27.07.2019 நடக்கவிருக்கும் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு, மாலை 4.45 மணிக்குப் பிந்தாமல் வந்து, நிகழ்வுகள் சரியாக 5 மணிக்குத் தொடங்க ஒத்துழைக்கும்படி, அன்புடனும் , பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

" வில்லிற்கு வீரன் யாரெனில் விஜயனாகும்
விறல் தமிழ் சொல்லிற்கு வேந்தன் யார்? வேந்தனார்."


நன்றி.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்
இலண்டன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R