சித்திரைப்புத்தாண்டு!

மானிடம் மலர்க! மண்ணின்
மனிதமும் மலர்க! தெய்வ
வானியல் வருக! மாந்தர்
மறைமொழி வருக! நற்றாள்
பூநிறைத் தழகு கொள்ளும்
புதுவயல் வருக! கன்று
பால்நிறை மடியை முட்டிப்
பருகியே திளைப்ப தாக!

செந்தமிழ் சிறப்ப தாக
சிந்தியல் செழிப்ப தாக
எந்தையர் தமிழர் நாவில்
இறைமொழி துதிப்ப தாக
விந்தைகள் உலகப் பந்தின்
விருட்சமும் வளர்வ தாக
அந்தகர் விழிகள் வெட்டி
அகிலமும் காண்ப தாக!

இத்தனை யுகங்கள் போயும்
இப்புவி மறந்த நேசம்
சித்திரைத் தினமென் றாரச்
செகத்தினில் மலர்வ தாக!
மத்தியில் சமுதா யத்துள்
வாழ்வெட்டுத் தீயர் வீழ்க!   
நத்துகள் முடிக! நாற்றின்
நந்நிலம் பொலிவ தாக!

கவியெனப் பதர்கள் இல்லாக்
காவியம் பிறப்ப தாக
புவியோடும் தமிழாள் நின்று
பூமுகம் சிலிர்ப்ப தாக
அவியொடும் வேள்வி ஏற்றும்
அற்புதம் நிகழ்வ தாக
குவிமுகில் மகளிர் வாழ்வு
கொழுநனைப் பெறுவ ராக!

வஞ்சராய் அழித்த தீயோர்
வாழ்வினில் அழிவ தாக
அஞ்சிடும் படியோர் வாழ்வு
அளித்திடும் அரக்கர் மாள்க!
வஞ்சியாய்த் தமிழாய்ப் போற்றும்
மண்ணெலாம் குவிவ தாக
துஞ்சிடும் மனிதர் துள்ளும்
சித்திரை மலர்க! வாழ்க!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R