- தம்பா (நோர்வே) -கடவுளை
எப்போதும் தேடியதுமில்லை
கடவுளை
எப்போதும் நிந்தித்ததுமில்லை.

எப்போது
சினகூகனுக்குள் புகுந்து
கத்தியால் குத்திக் கிழிக்கப்படுகிறதோ
அப்போது
நான் யூதனாக உணர்கிறேன்
எப்போது மசூதிகளுக்குள்
இயந்திர துப்பாக்கிகள் துவம்சம் செய்கிறதோ
அப்போது
நான் இசுலாமியனாக உணர்கிறேன்.
எப்போது
தேவாலயங்களின் மீது
விமான குண்டுகள் வீழ்கிறதோ
அப்போது
நான் கிறிஸ்த்தவனாக உணர்கிறேன்.
எப்போது
கோவில்களை பீரங்கிகள்
மிதித்து சிதிலங்களாக்குகிறதோ
அப்போது
நான் இந்துவாக உணர்கிறேன்.
எப்போது
விகாரைகளை தற்கொலை குண்டுகள்
அழித்து போடுகிறதோ
அப்போது
நான் பௌவுத்தனாக உணர்கிறேன்.

எப்போது
மனங்கள் பாறைகளாக உறைந்து கடினப்படுகிறதோ
அப்போது
உயிர்கள் உமிபோல் காற்றில் கரைந்து போகின்றன.

எம்மை
காக்க காத்திருக்கும் கடவுளாரே
உங்களை ஆராதிக்க கேள்விப் பூவொன்று
`மனிதனை மனிதன் அழித்துக் கொள்ள
ஆயிரம் மதங்கள் உண்டு,
ஆனால் மனிதனை மனிதன் அணைத்து கொள்ள
மதங்கள் எப்போது தோன்றப் போகிறன?´


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R