- தம்பா (நோர்வே) -எல்லாக் கிளிக்கூண்டுகளையும்
எல்லாக் குருவிக்கூண்டுகளையும்
திறந்து வையுங்கள்.
அவை வானத்தின் எல்லைகளை
முகர்ந்து பார்க்கட்டும்.

எந்த உயிரினமும் சிறைகளின்
நிழலைக்கூட பார்த்துவிடக்கூடாது.

எல்லாக் குதிரைகளின் லயங்களையும்
எல்லா மாடுகளின் தொழுவங்களையும்
திறந்து வையுங்கள்.
அவை வனத்தின் எல்லைகளை
தகர்த்து பார்க்கட்டும்.

சுதந்திரக்காற்றும் சுவாசப்பையின்
எல்லைகளுக்குள் சுருங்கிவிடுவதில்லை.
சூரியனைத் தொட்டெறிக்கும்
எல்லைகளும் கட்டைவிரல்
கணக்கினுள் கனிந்துவிடுகிறது.

ஆனாலும் பதிலுக்கு
குதிரைகளின் லயங்களிலும்
மாடுகளின் தொழுவங்களிலும்
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளை அடைத்துவிடுங்கள்.  ஆனாலும் பதிலுக்கு
கிளிக்கூண்டுகளிலும்
குருவிக்கூண்டுகளிலும்  
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளின் குழந்தைகளை
அடைத்து தனிமைப்படுத்தி விடுங்கள்.

ஏனெனின்
லயங்களும், தொழுவங்களும்
கிளிக்கூண்டுகளும், குருவிக்கூண்டுகளும் 
தவறியும் பிரிவின்
துயரத்தை அறிந்துவிடக்கூடாது.

பூமாதேவியின் வகுக்கப்பட்ட
எல்லைகளை
நிந்தனை செய்துவிடாதே. 
உலகத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட
தேசமென மனம்கொள்!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R