வாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ' நான் ஓர் அனாதை' என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது! அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார்? என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்ப டிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் இயங்கிக்கொண்டே இருந்தவர். கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர - விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன். அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ' கலைக்கேசரி' ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன். வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன். அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார். அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை, தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா, பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர். அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். பின்னாளில் இலங்கை வானொலியில் இணைந்து நிகழ்ச்சிகள் தயாரித்தார். செய்திகளை வாசித்தார். இவ்வாறு அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அவர்தேடிய மூலதனம். அதுவே அவரை தொலைக்காட்சியிலும் பிரவேசிக்கத்தூண்டியது. இலங்கையில் முதல் முதலில் 1979 இல் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் I.T.N. ( Independent Television Network) தொடங்கப்பட்டபோது செய்தி மஞ்சரியில் செய்திகளை தொகுத்துவழங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கும் தமிழ் செய்தியாளரானார். சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவையெல்லாம் அவர் நேசித்த - சார்ந்திருந்த ஊடகத்துறை பணிகள்.
1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்கு அவர் குடிபெயர்ந்த பின்னர் காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதற்கு முன்னர் 1976 இல் அவரை தமிழ்த்திரைப்படத்தில் கண்டோம். காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாக தோன்றினார். அதிலும் தனித்துவிடப்பட்ட பாத்திரமே அவருக்கு கிடைத்திருப்பது தற்செயல்தான். மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாக சீதனம் தரக்கூடிய நிலையில்லாதமையால் திருமணம் தள்ளிப்போகும் பரிதாபத்திற்குரிய பாத்திரம். சங்கீதம் பயிலும் அந்தச்சகோதரி பாத்திரம், " பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்... காத்திருப்பார் கண்ணனை" என்ற பாடலுக்கு வீணையை மீட்டியவாறு வாயசைக்கும்.
எங்கள் தாயகம் இனவாத நெருப்பில் கருகத்தொடங்கியவேளையில் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் அகதிமுகாம்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் செல்லவேண்டிய துர்ப்பாக்கியம் தோன்றியது. பிரதம ஆசிரியர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். தகவல் அமைச்சிலும் ஈரானிய தூதுவராலயத்திலும் பணியாற்றிய கமலா தம்பிராஜா, மற்றும் பத்திரிகையாளர்கள், மேகமூர்த்தி, கனக அரசரத்தினம், சோமசுந்தரம் ராமேஸ்வரன், டீ.பி.எஸ். ஜெயராஜ் ,விளம்பர விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், விளம்பர விநியோகப்பிரிவில் பணியாற்றிய வர்ணகுலசிங்கம், புனிதா பழனிச்சாமி பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன், உட்பட அச்சுக்கோப்பாளர்கள் சிலரும் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள். அதனால் கனடாவில் "வீரகேசரி குடும்பம்" என்ற அமைப்பும் அவர்களால் உருவாகி அவ்வப்போது ஒன்றுகூடல்களும் சந்திப்பு விருந்துகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.
தம்பிராஜா, 1991ஆம் ஆண்டு டொரன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியிலும் 2001ஆம் ஆண்டு அங்கு ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியிலும் , தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலியவற்றிலும் பணியாற்றியவர் என்பதை அறியமுடிகிறது. அவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா டொரன்ரோவில் நடந்த தமிழர் செந்தாமரை பத்திரிகையின் ஆண்டுவிழா ஒன்றுகூடலில் சந்தித்தேன். அன்றைய நாளை மறக்கவே முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பின்னர், வீரகேசரி குடும்பத்தினர் அன்று ஒன்றுகூடியிருந்தோம். வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம், அலுவலக நிருபர் (அமரர்) கனக. அரசரத்தினம், துணை ஆசிரியர் மேகமூர்த்தி, விளம்பரப்பிரிவிலிருந்த வர்ணகுலசிங்கம், விளம்பர- விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் ஆகியோருடன் கமலா தம்பிராஜாவும் எம்முடன் அமர்ந்திருக்க கடந்து சென்ற பசுமையான காலங்களை நனவிடை தோய்ந்தோம்.
2008 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி பிறந்த புத்தாண்டு தினமன்று இரவு இராப்போசன விருந்துக்காக தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். அன்று அவரது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிப்பணிகளில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். " இலங்கையில் I.T.N. தொலைக்காட்சியில் முதல் முதலில் செய்திமஞ்சரியில் தமிழில் செய்தி வாசித்த போது குறைந்த வளங்களே இருந்ததாகவும், தலைப்புச்செய்திகளை முதலில் மனப்பாடம் செய்துகொண்டு முன்னாலிருக்கும் கெமராவைப்பார்த்து பேசவேண்டியிருந்ததாகவும், காண்பிக்கப்படும் 'டைட்டில் கார்ட்களை' வெளியே ஓவியர்கள் மூலம் வரைந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இத்தனைக்கும் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் அந்த செய்தி மஞ்சரிக்கு கிடைத்த சன்மானம் அப்பொழுது 60 ரூபாய்தான்" எனச்சொல்லிவிட்டு கலகலவென சிரித்தார். இவ்வாறு அன்றைய இராப்போசனம் கலகலப்பாகவே நிறைவடைந்தது. இச்சந்திப்பில் நண்பர் வர்ணகுலசிங்கம் - சரோஜினி தம்பதியரும் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியாவிலிருந்து நான் எடுத்துச்சென்ற எனது நூல்கள் சிலவற்றையும் கொடுத்தேன். நாம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழா தொடர்பான படங்கள், செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தைப்பார்த்துவிட்டு, தனக்கும் ஒரு விழாவிற்கு வந்துகலந்துகொள்ளவேண்டும்போலிருக்கிறது என்ற அவர், இங்கு தனக்குத்தெரிந்தவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு விசாரித்தார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. அவருடன் இலங்கையில் பணியாற்றிய சிலர் மற்றும் அவரது ஆசிரியை ஆகியோர் இங்கு இருக்கிறார்கள்.
அன்றைய சந்திப்பில் எடுத்த ஒளிப்படங்களையும், கமலா தம்பிராஜா ரூபவாஹினியில் செய்தி வாசிக்கும் தொலைக்காட்சி படத்தையும் நண்பர் வர்ணகுலசிங்கம் நான் கனடாவை விட்டு புறப்படும்பொழுது ஒரு இறுவட்டில் பதிவுசெய்து தந்தார். கமலா கனடாவில் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும், அந்த இறுவட்டையே கணினியில் பதிவிறக்கிப்பார்த்து கலங்கினேன். அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடியிருக்கின்றேன். பின்னர் தொடர்பாடல் குறைந்தது. அவர் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொண்டதும் காரணம். அவர் பின்னாளில் கனடாவில் மூத்த பிரஜைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு, உள்நாடு சுற்றுலா செல்லும் குழுவிலும் அங்கம் வகித்து வழிகாட்டியாகவும் பயணித்துக்கொண்டிருந்தவர். அவர் பற்றிய நினைவுகள் சாசுவதமானவை. எமது வீரகேசரி குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம். அவர் செல்வியாகவே வாழ்ந்து விடைபெற்றுவிட்ட எங்கள் சகோதரி. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems