மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும். இவ்விழாவில் பிரதம அதிதிகளாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்,  கொடகே புத்தக நிறுவன அதிபர் சிரிசுமன கொடகே, தேவி ஜீவலர்ஸ் என்.எஸ். வாசு, சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியச் செயலாளர் கமல் பெரேரா, ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார். மேமன்கவியின் ''மனிதநேய நேசகன்'' மணிவிழா மலரின்  சிறப்புப் பிரதியினை தேவி ஜூவலர்ஸ் அதிபர்   என். எஸ். வாசு பெற்றுக் கொள்வார். நூல்களுக்கான அறிமுகவுரையை கெக்கிராவ ஸூலைஹா மேற்கொள்வார். வாழ்த்துரைகளை டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், கமல் பெரேரா, பத்மா சோமகாந்தன், கே.எஸ்.சிவகுமாரன், தமிழ்நாடு வளரி கவிதை ஆசிரியர் அருணாசுந்தரராசன் ஆகியோர் முன் வைப்பார்கள். வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பினையும் மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திர பதிரன நிகழ்த்துவார். ஏற்புரையையும் நன்றியுரையும் மேமன்கவி நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் சகல கலை இலக்கிய நெஞ்சங்கள் கலந்துக் கொள்ளுமாறு  வேண்டிக் கொண்டதுடன், பூமாலைகளையும், பொன்னாடைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் கலை இலக்கிய நண்பர்கள்  பணிவுடன் வேண்டுகிறார்கள்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R