எழுத்தாளர் குரு அரவிந்தன்ஏப்ரில் 2, 2017  ஞாயிற்றுக் கிழமை இகுருவி வருடாந்த விழாவில் இகுருவி இதழின் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘கனடா தமிழர் வரலாறு’ ( Canadian Tamils' History) என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பு,  நூல் வடிவமாக வெளியிடப்பட்டது. இந்த இகுருவி விழாவில் இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், இலங்கையில் இருந்து சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

குரு அரவிந்தனின் ‘கனடா தமிழர் வரலாறு’ நூல் வெளியிடப்பட்ட போது சிறப்புப் பிரதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ரொறன்ரோ நகராட்சி மன்ற உறுப்பினர் நீதன் சண் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வெளிவந்த இந்த நூலில் குரு அரவிந்தனனின் ‘பிறீடம் இஸ் பிறி இன் கனடா’  என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. கனடாவின் 150 வது பிறந்த தினத்தை 2017 இல் கொண்டாடும் கனடிய அரசு பல்கலாச்சார சமூகங்களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட கதைகளில் தமிழ் சமூகத்தைப் பிரதிபலிக்கும் குரு அரவிந்தனின் கதையும் 150 கதைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 150 வது பிறந்த தினத்தைக் கனடிய அரசுகொண்டாடும் இந்த வேளையில் தமிழர்களின் புலம் பெயர்ந்த வரலாற்றை, அவர்களின் கடந்த 40 வருடகால பங்களிப்பைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் முடிந்த அளவு இடம் பெறற்றிருக்கின்றன. கனடா தமிழர் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R