கவிதை படிப்போமா?தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும்
தொழில் நம்முடையதென மறந்து போனார்.
எந்திர எச்சில் பெற
எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.
எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி
எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.
தடாலடியாக தேசம் இமாலயத்தைக் கத்தியென சுருட்டித்
தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டது.
தவறி விழுந்த தலையில் பறக்கும்
சின்ன மலைத் தொடர்கள் இரத்தத்தில் நனைகின்றன.
ஒரு முதலாளி நீதிமன்றத்தை நொறுக்கி வீசி விளையாடுகிறார்
மீட்பர் பாராட்டிப் பிழைத்திருந்தார்.
துண்டுதுண்டாய் தேசத்தை எடுத்து பெட்டியில்
மூடி வைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள்.
அண்டை தேசத்தில் மீட்பருக்கு ஒரு சிலை வான் தொடுகிறது
மீட்பர் பிணந்தின்னி கழுகுகள் மீதேறியபடி அண்டை தேசமெங்கும்
சுற்றி திரிந்து முதலாளிகளின் கையொப்பங்களை வேட்டையாடுகிறார்.
வீட்டிலிருந்த எறும்புகள் உரிமைக்காக விடுதலையைப் பரிமாறிக் கொள்கின்றன.
புரட்சியென்றவுடன் எறும்புகள் தம் வயிறு குலுங்க நகைக்கின்றன.
எதிர்ப்பின் மியுசியம் மூங்கில் மரம் போல் துரித பிரம்மாண்டம் கொள்கிறது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R