கவிதை படிப்போமா?அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையது
அங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்
இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்
நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை என
நகரமே எப்போதும் பரபரப்போடு இருக்கும்
துப்பாக்கி குண்டுகள் விரையும் போது முத்தமிடும் காட்சியையும்
முத்தமிடும் போது ஆண்குறிகள் வெட்டுபடும் காட்சியையும் அவர்கள் தீட்டுவார்கள்
அந்த நகரத்தில் பெரேட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்
பகலின் இரத்தத்தை கோப்பையில் ஊற்றி குடிப்பவன் பெரேட்
அவன் தான் அந்த நகரத்தை கேன்வாஸில் உருவாக்கினான்
ஒருகணம் அவன் யோசித்திருக்ககூடும் பெரேட் ஆகிய நான் இருப்பது ஓவியத்திற்குள்ளா
நீலப்பெண் பனிக்கால நாய் போல மஞ்சள் ஆணுடன் பிணைவதை அவன் தீட்டியிருக்கிறான்
சிவப்பு நிற பெருங்கடலின் மீது ஊறும் எறும்புக்கப்பலில்
அந்த எறும்புக் கப்பலில் இருக்கும் நீலப்பெண்னின் உதடுகளில்
புரோட்டான் நியுட்ரான் மேற்கொண்ட காதலை தீட்டியிருக்கிறான்
அந்த நியுட்ரானின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை பற்றித் துல்லியமாக தீட்டியிருக்கிறான்
எங்கோ அட்ரீனல் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிகிறது
காட்டுத்தீயைப் போல கற்பனையை வாளியில் அள்ளி அணைக்க முயற்சிக்கிறார்கள்
அது பெரேடின் வீடு தான்
ஓவியத்திற்குள் இருக்கிறது கற்பனையின் கனவுகளின் கையொப்பங்கள் பல
வெளியே என்ன இருக்கிறது என கேட்டால் பெரேட் சொல்லுவான்
ஒன்றுமே இல்லை என இரவின் மார்புகளில் தலையை புதைத்துக்கொண்டே


(சால்வடார் டாலிக்கு )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R