1.  எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

வேதா இலங்காதிலகம்அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கௌரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு '' பணம் '' என்எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

மனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன்  ஐயா
கேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.
சரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.
பிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.

(பிரவாளம் - பவளம்.)

2  எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்


முருக பக்தர் எம்.எஸ்.வி
வறுமையிலிருந்து பெருமை பெற்றார்.
வெறுமையறு நிறைவிசை சமைத்தார்.
பெருமையுடை துணைவி ஜானகியம்மாள்.
கல்விச்சாலைசெல்லாத இசைமேதை.
கண்ணகியிலிருந்து பத்துப் படநடிகர்.
கடும் வயோதிபத் துன்பமேக(ஏகல்)
கண்மூடினார் அமைதி கொள்ளட்டும்.

எண்பத்தேழு வருடங:களில் எத்தனையிசை!
எகிப்து இசை பட்டத்துராணி
மெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ
ரஷ்ய இசை கண்போன போக்கிலே
லத்தீன் இசை யார் அந்தநிலவு
யப்பானிசை பன்சாயி காதல்பறவைகள்
பெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்!
பெருமை!..இனிமை!..தமிழே!....

3, துர்க்காதேவி.

சிம்மவாகினி தாயே எம்
அம்மா துர்க்கா தேவி
தீய சக்தி ஒளிக்க
தீயாய் துணை வருவாய்.

நவராத்திரி ஒன்பது நாட்கள்
தவமான முதல் மூன்றும்
நவசக்தி நாயகி உன்னை
நலம் வேண்டி வணங்குவோம்.

மகிஷாசுரமர்த்தனி அகிலாண்ட ஈசுவரி
மங்களசண்டிகையே அருள் வடிவே
ஆதிபராசக்தி அன்பின் உருவே
ஆபத்தைத் தடுப்பாய் போற்றி.

திரிசூல நாயகியே போற்றி
திரிபுர சுந்தரியே அருள்வாய்
பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
பக்தியுடன் உன்னைப் பணிகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R