ராஜகவி ராகில்

1. பெண் பால் ஆலயம் .

வாடாத வரம்
பெறும்
அன்னை மீது
விழுந்த
பூ .

தாயின் நாவிடம்
கொண்டு சேர்க்கத்தான்
பூக்களில்
தேனும் தேனீயும் படைத்தாரோ
கடவுள்

பட்டு
மலர்
பஞ்சு
மெத்தைகள் சாய
ஆசைப்படும் இடம்
அன்னை மடி .

ஓர் ஆலயத்தை விட
புனிதமானது
அன்னை உடுத்த
சேலை .

அம்மா முகம்
பார்த்திடின்
எமனுக்கு
தோணவே தோணாது
அவள் உயிர்
பறிக்க .

தாய் தாலாட்டின்
பின்
கைகட்டி நிற்கும்
புகழ் பூத்த புலவர்
யாத்த
கவிதை .

தாய் வாழுகின்ற
வீட்டுக்குத் தேவையில்லை
விளக்கு .

உயிர்
ஊட்டப்படுகின்ற
புனித தலம்
தாய் கருவறை .

உலகம் என்ற
உருண்டை விருட்சம்
நிற்கிறது
அன்னை வேரில் .

மாதா கண்ணீர்
திரவத் தீ
அது
அழித்துவிடும்
பாறைகளையும் .

அன்னை புன்னகை
அரண்
அது
தடுத்துவிடும்
எந்தச் சுனாமிகளையும் .

அன்னை
பிசைந்தூட்டிய கூழ்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
அமுதத்தை
ஆக்கிவிடும்
வெறும் வைக்கோலாக .

அம்மா சமைப்பது
அரிசியல்ல
பாசம் .

விறகுகள் வென்று
அவள்
எரிகிறாள்
அடுப்பில் .

கடவுள்
அதிசயிக்கின்ற அதிசயம்
அன்னை பிரசவம் .

தன்
தாய்
மறந்த மகன்
இதயத்தால் இறந்த
பிணப் பிரஜை .

தாய்
இருமல் சத்தம்
ஒருதரம் கேட்டாலும்
மருத்துவம் செய்
வைத்தியனைக் கூட்டி வந்து .

ஒரு குயிலிடம்
கேள்
அது சொல்லும்
தன்
குக்கூ
அன்னைக்கான
வாழ்த்தென .

மழைத் துளிகளிடம்
விசாரி
அவை
மொழியும்
தாய் பாதம் தொடத்தான்
பொழிவதாக .

அன்னைக்கு
பணிவிடை செய்கின்ற
கைகளில் இருப்பவை
விரல்களல்ல
வெளிச்சங்கள் .

 



2. சர்க்கரை வாழ்க்கை .

ராஜகவி ராகில்

ஏழைக்குச் சிரிப்புக் கிடைக்கும் வரை
நுரைத்துக் கொண்டே இருக்கும் அலை .

ஏழை உண்பது
வெறுஞ் சோற்றில் கண்ணீர் ஊற்றி .

மலர்ந்த பூ
உதிர்கிறது ஏழை முகத்தில் கவலை கண்டு .

விலையேற்றம்
எரிகின்ற ஏழையைச் சாம்பலாக்கி விடும்.

ஏழையோடு சேர்ந்தழத்தான்
பெய்கிறது மழை .

அடுத்த வேளைக்காகச் சுவாசிக்க
வியர்வையால் மூச்சு விடும் ஏழை .

ஏழை உழைப்புத் திருடும் நரிகளை
போடவேண்டும் சிறையில் .

வீதியோரத்துப் பிச்சைக்காரர் அழுகை வெள்ளத்தில்
மூழ்கித் திணறும் நாகரிகம் .

ஊனமுற்றவர் பசி தெரிந்தால்
காகங்கள் கூட
உணவு பரிமாறும் அவருக்கு. .

சிறுவர் தொழிலாளர் ஆகும்போது
உலகம் நகரும் பாவங்களை நோக்கி .

ஏழை மங்கை விதைவையாகிறாள்
திருமணம் ஆகாமலே .

ஏழை வானத்துச் சூரியனைக் களவாடுகிறது
பண உலகம் .

ஏழை மோட்டார் வாகனத்தில் செல்வது
கண்களால் மட்டும் .

ஓர் ஏழைக்குக் கல்வி இருப்பின்
அவருக்குச் சோறூட்டும் ஒளி இறங்கி வந்து .

ஏழை என்று சொல்லும்போது
கண்ணீர் வடிக்கிறது தமிழ் .

ஏழையின் கதவுகளை வந்து தட்டவேண்டும்
வசதி வாய்ப்புக்கள் .

ஏழைகளுக்கான ஓர் அரசு
இறையரசு மட்டுமே .

இறைவா
ஏழை வாழ்வினை
சர்க்கரை வாழ்க்கை
ஆக்கி விடு!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R