1. புனல் வாதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக் 
கப்பலாக ஓடவிட்டேன்

தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்

மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை

2. விடியலை நோக்கி…

கவிதை வாசிப்போம் வாருங்கள்!போதும் போதும்
சிந்தனையற்ற சூனியக்காரியிடமும்
வீண்பேச்சு சூனியக் காரனனிடமும்
நாட்டை இழந்தது போதும்
தேர்தல் வாக்கை  - உன்
தாத்தன் வீணடித்தான் – உன்
தகப்பன் பணத்திற்காக
விற்று விட்டான்
நீயாவது விழித்துக்கொள்
நாளை
விடியலாக அமைய….
     

3. தன்னம்பிக்கையில்லா கூட்டம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!தகுதியற்ற தலைவனுக்குத்
தரையில் விழுந்து தலைவணங்கி – தனது
பதவி தாகத்தைத் தனித்துக்கொள்ளும்
தன்னம்பிக்கையில்லா
தன்மானமற்ற – சில
மனிதக் கூட்டம் இதுவோ

பாவப்பட்டவர்கள்
பாவப்பட்டவர்கள் – ஏழைகள்
மட்டுமல்ல
விலங்கு மரம் செடி கொடிகளும்தான்
யார் என்ன செய்தாலும்
யாரும் கேளார்!

காகித-பேனா உறவு
உரசாத
காகிதமும் பேனாவும்
பெருமையுற்றதில்லை
பேனாவினால் எண்ணத்தைக்
காகிதத்தில் உரசும் போதுதான்
உயிரற்ற காகிதமும்
உயிரோட்டம் பெறுகிறது
பேசுவது என் மனசு
மட்டுமல்ல
பேனாவும் காகிதமும் தான்

4. என்ன அழகு

கவிதை வாசிப்போம் வாருங்கள்!முகிலினங்கள் முட்டும் வெள்ளியங்கிரி
ஆர்ப்பரிக்கும் அருவியாய்
கோவைக் குற்றாலம்
தெளிந்த நீரோடையாக ஒன்று
சேரும் சிறுவானி
இயற்கை வளம் கொழிக்கும்
பசுமைக்காடுகள்
மரம் செடி கொடிகள் – அங்கு
அரசியல் கொடிமரங்களில்லை
இலைத் தழைகளை உண்ணும்
விலங்கினங்களின்
ஒன்றுபட்ட வாழ்க்கை
காடே உலகமென்று
இயற்கையோடு
உறவாடும் பழங்குடிகள்
இயற்கையே தெய்வம்
கள்ளம் கபடமில்லா மக்கள்
அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும்
யார்க்கும் அடிபனியாமல் – இயற்கைக்கு
அடிபனியும் பழங்குடிகள்
மாற்றம்விரும்பா மக்கள்
மாற்றம் இயற்கைக்கா?
தொழில் நுட்பத்திற்கா?
என்றபொழுதிலும்
இயற்கையை விரும்பும்
தொல் பழங்குடிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R