- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

“சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..?” என்று
எங்கிருந்தோ ஒலிக்கும் பாட்டின் விசாரிப்பில் முளைத்த
துன்பியல் புன்முறுவலோடு வழியேகிக்கொண்டிருந்தவளை
இடைமறித்து
வடையும் ஒன்றிரண்டு கடலைமிட்டாயும் தந்தபடி_

“பாவம் பாட்டீ, களைத்துப்போயிருக்கிறாயே –
எங்கள் பண்ணைவீட்டுத் திண்ணையில் படுத்துறங்கிக்கொள்ளலாம் நீ
இன்றிரவு பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணிவரை.
அதன்பின் அலாரம் வைத்து உன்னை அனுப்பிவைத்துவிடுகிறோம்
நள்ளிரவாயிருக்கிறதே என்றெல்லாம் சொல்லக் கூடாது, சரியா?
கையில் அஞ்சு ரூபாய்த் தாள் ஒன்றும்
கொஞ்சம் பிஞ்சு வெள்ளரிக்காயும் கட்டாயம் தருவோம், கவலைப்படாதே.
முன்கூடத்தில் கொஞ்சம் பழைய சோறு வைத்திருக் கிறேன்.
தின்று முடித்துத் திருப்தியாய்க் கட்டையை சாய்த்துக் கொள்”
என்று புரவலர் தோரணையில் கூறும் துண்டுப் பெண் ணுக்குத் தெரியாது
கிழவியின் காலடி நீட்சிகள்; கலைடாஸ்கோப் காட்சிகள்…
முக்காலங்களைத் தாண்டியேகும் அவளுடைய மூன்றடிகளின்
Quantum பாய்ச்சல்;
அவளது கால்நடைகளின் அந்தர மேய்ச்சல்…

துண்டுப் பெண்களும் துக்கிரிப் பையன்களும் அறியார்
மூதாட்டியின் முப்பரிமாண பிரம்மாண்டத்தை.

மௌனமாய் மெதுவே மேலே நடக்கிறாள் மூதாட்டி.
திரிபுரம் எரிக்கவல்ல அவளுடைய மூன்றாவது கண்
சிறிதேதிறந்துகொள்ளப் பார்க்கிறது…..

2
துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
எக்கச்சக்கமாய் இருப்பதுபோலவே
நாட்டாமைகளும் நிறையவே உண்டிங்கே.

துண்டுப்பெண்கள் கண்விரியக் கேட்டுக்கொண்டிருக்க
சாதாரணர்களுக்கும் வாய்க்கும் சாகசவீரர்களாகும் தருணங்கள்!
நாட்டாமையும் மனிதர்தானே…
சுவரோரமாய் ஒயிலாய் நின்றபடி
பிரமிப்பு விரவிய ஓரக்கண்ணால் அவரையே பார்த்தவண்ணம்
கையில் விசிறியோடும் வெற்றிலைச்சுருளோடும் நிற்கும் துண்டுப்பெண்
அவர் மார்பை இன்னும் அகலமாக விரியவைக்கிறாள்!

அனாதிகாலப் பயணத்தில் அந்த வழியே கடந்துசெல்லும்
மூதாட்டியின் மேல் அவர் பார்வை கணநேரம் பதிகிறது.
‘பாவம் கிழவி, பணம் கிணம் வேண்டுமோ என்னமோ…’
அருகிருப்பார்களெல்லாம் பார்க்கும்படியாக, அரைமனதோடு
திறக்கிறார் தன் பணப்பையை.

’கும்பிட்டுக்கோ, நல்லது நடக்கும்’ என்கிறார்கள்
துண்டுப்பெண்ணும் துக்கிரிப்பையனும்.

நிதானமாய் ஏறிட்டுப் பார்த்த மூதாட்டி
”என் நிலத்தில், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் இடையேயான
சூட்சுமத்தை உணர்த்தியவனும்கூட
எனக்கொரு சினேகிதன் தான்; ஆண்டையல்ல.
காணிநிலக் கணக்கெடுப்புகள் காற்றுக்கொரு பொருட்டா என்ன?
நான் இதோ நடந்துகொண்டிருக்கிறேனே –
இதைவிட இன்னொரு நல்லது நடக்குமா?
கோலி விளையாடும் வயதுனக்கு.
காலத்தை எனக்குக் கற்றுத் தரப் பார்க்கிறாயே?
என் கடிகாரத்தில் நாளொன்று ஏழெட்டுத் தொடுவானங்களின் நீளம் தெரியுமா…!
என் தேவையை உன் நாட்டாமையின் செல்வமோ செல்வாக்கோ
 இட்டுநிரப்ப முடியாது. சொல்லிவிடுங்கள்,” என்றபடி
குனிந்து தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு
மெல்ல நடந்துசெல்கிறாள் தன் பாட்டில்.

அந்தக் கழிக்குள் இருக்கும் குதிரைகளையும் பறவைகளையும்
வன வான கடல் சாகர செடி கொடி வித்துகளை யெல்லாம்
அறிய மாட்டாத
துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
‘பொழப்பத்த கிழவி; பிழைக்கத் தெரியவில்லை
என்று இழித்தும் பழித்தும்
வயிறு வலிக்க வலிக்கக் கெக்கலித்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

3
கடற்கரை மணலையெல்லாம் தம்முடையதாகத்
தப்புக்கணக்கு போட்ட துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
ஆங்கே அமர்ந்தபடி இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை யெல்லாம்
எழுந்துநிற்கச் செய்து
அவரவர் காலடிகளைச் சுற்றிக் கட்டமிட்டுக் குறித்து
இதுதான் உங்கள் இடம் என்று
ஒப்பிப்பதாய் எடுத்துரைத்தார்கள்….
அப்புறப்படுத்திவிட்டார்கள் சிலரை….
பின், முகமெங்கும் அப்பிய கர்வத்தோடு
பெருமை பொங்கச் சுற்றிலும் பார்த்தபடி நின்றவர்கள்
மணற்துகள்களுக்கும் வரம்பிட்டு வரையத்தொடங்கினர் கோடுகளை.
அந்தக் கைகளில்தான் எத்தனை தினவு….
இருந்தென்ன?
ஒரே வீச்சில் காற்று அழித்துவிட
காணாமல் போகும் ஆனான ஆணவமும்.


4
பச்சரிசிப்பற்களும், பலாச்சுளை உதடுகளும்
பின்னங் கழுத்தும், பிதுங்கும் மார்பகங்களும்
இடுப்புவளைவும் அரைவட்டப் புட்டங்களும்
மீன் கண்களும் அன்னநடையும் மென்கைகளும்
முழங்காலின் கீழுள்ள ஆடுசதையுமாய்
பார்த்துப்பார்த்துக்
 கைகொள்ளாமல் கிளிஞ்சல்களாய்த் தேடியெடுத்துத்
திரட்டிக்கொண்டதையெல்லாம்
காற்சட்டைப்பைகளுக்குள் திணித்துக்கொண்டு
குவலயம் வென்றுவிட்ட மிகு களிப்பில் திளைத்தபடி
கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்தவாறு காறியுமிழ்பவர்களின்
எச்சில் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது

‘ஸ்லோமோஷன்’ காட்சியாய்…..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R