கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.

 

தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியமாக தொண்ணூறுகள் வரை சோவியத் இலக்கியங்கள் மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. யதார்த்தவாதம் ,இயல்புவாதம் என்பதான் படைப்பு உத்திகள் சார்ந்து இப்படைப்பிலக்கியங்கள் பேசப்பட்டன.தல்ஸ்தாய், மக்ஸிம் கார்க்கி, செகாவ், தஸ்தாவெஸ்கி என்பதான் படைப்பாளர்களின் உலகமாக இது தென்பட்டது. தொடர்ந்ததொரு மொழிபெயர்ப்பின் திசையாக லத்தின் அமெரிக்கப் படைப்பாளிகளின் உலகம் வெளிப்பட்டது. அர்ஜென்டைனாவைச் சேர்ந்த ஜோர்ஜ் லூயி போர்ஹே, கொலம்பியாவைச் சேர்ந்த காப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ், என்பதான வரிசையில் ஜெர்மினியின் குந்தர்கிராஸ் போன்ற படைப்பாளிகளும் வெளிப்பட்டனர்.

இந்த இலக்கியப் புனைவுகளில் சாதாரண சம்பவ சித்தரிப்புகள் வினோதமான கனவுஅம்சங்களுடன் புனையப்பட்டன. தொல்கதை மரபுகள் மறு உருவாக்கம் பெற்றன. யதார்த்தம் மாந்திரீக யதார்த்தமாக உருமாறியது. இயல்பான கதை சொல்லல் வினோதம் நிறைந்த கதை சொல்லல்லாக மாறுபாடடைந்தது. மார்க்யுஸுக்கு தனது மூதாதையான தாத்தாவின் கதைகள் அரசியல் சித்தாந்த பார்வையை கொடுத்திருக்கிறது.காலனிய ஆதிக்கத்தின் கீழ் பட்ட துயரங்களும் வரலாறுகளும் போராட்டங்களும் , அவரின் வழியாகவே மார்க்யுஸை சென்றடைந்திருக்கிறது.கார்ஸியா மார்க்யுஸ் சோசலிச சிந்தனையாளராகவும்,அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், நவகாலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்பாளியாகவும் வெளிப்பட இந்த துவக்க கால கருத்தாக்கங்கள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. இதுபோன்றே தனது பாட்டியிடமிருந்து மாயஜாலங்கள் நிறைந்த , நம்பமுடியாத அதிசயங்கள் நிறைந்த கதைகளை கேட்டுப் பழகியதன் விளைவே அவரது பிற்கால நாவல் உலகத்தின்படைப்புமுறையையே மாற்றிக் காட்டியுள்ளது.

மார்க்யுஸின் பிற படைப்புகளில் Leaf Storm, Autumn of the Patriarch , Chronicle of a Death Foretold , Love in the Time of Cholera என நீள்கிறது. 2004 அக்டோபரில் வெளியான Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . இந் நாவல் தொண்ணூறு வயதான ஒரு முதியவரின் காதல் கதை. வாலிப பருவம் அடைகிற ஒரு இளம் பெண் தொண்ணூறு வயது முதியவரோடு திருமணமின்றி கூடிவாழும் சாகசமான காதல் கதை.

1996 களின் வெளியான News of a Kidnapping – போதைப் பொருள் பயங்கரவாத குழுக்களின் ஆட்கடத்தல் அரசியல்கொலைகள் உள்ளிட்ட செய்திகளை நூலாக எழுதிச் சென்றது. திரைத்துறையிலும் மார்க்யுஸின் பங்களிப்பு இருந்தது. பிரிட்டீஷ் இயக்குநர் மிக் நிவெல் Love in the Time of Cholera நாவலை இயக்கினார்.ஹவன்னா திரைப்பட நிறுவன படத்தயாரிப்பாளர் மார்க்யுஸின் Love and Other Demons, நாவலை திரைப்படமாக்கினார்...

கியூப அதிபர் பெடரல் காஸ்ட்ரோஉடனான தனது நட்பின் வலு புத்தகங்களின் அடிப்படையில் உருவானது. காஸ்ட்ரோ மிகவும் பண்பாடுமிக்க நபர், நாங்கள் சந்திக்கும் தருணங்களில் இலக்கியங்கள் பற்றியே பேசியிருக்கிறோம் என்கிறார் கப்ரியல் கார்ஸியா மார்க்யுஸ் . உலக அளவில் படைப்பாளிகள் மார்க்யுஸின் மரணத்திற்கு அஞ்சலி செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R