எழுத்தாளர் சீர்காழி தாஜின் 'அமெரிக்கா' தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதப்பட்ட கடிதம். - தமிழகத்தில் 'ஸ்நேகா' பதிப்பகத்தாரால் 1996இல் வெளியிடப்பட்ட எனது சிறுகதைகளும், குறுநாவல் 'அமெரிக்கா'வும் அடங்கிய தொகுப்பான 'அமெரிக்கா' பற்றி எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனக்குத் தொகுப்பு பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்துக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இன்னுமொரு கடிதத்தினை எனது நல்லூர் நகர அமைப்பு ஆய்வு பற்றிய நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  பற்று எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்த கடிதமது. என்னை யாருக்குமே தமிழக்த்தில் தெரிந்திருக்கச் சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், என நூல்களை வாசித்துவிட்டுச் சீர்காழியிலிருந்து எனக்குக் கடிதங்கள் சில அனுப்பியிருந்தார் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அக்குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. அவரது இன்னுமொரு கடிதமான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய கடிதம் பின்னொரு சமயம் பதிவுகளில் பிரசுரமாகும். மேற்படி கடிதத்தில் ஒரு சில சொற்கள் தெளிவாகத் தெரியாததால், அவை கூறும் கருத்துக்கு இடையூறு செய்யாமலிருப்பதால் தவிர்த்திருக்கின்றேன்.  - வ.ந.கி -

'மனித மூலம்' தத்துவம் பேசினாலும் இனிக்கும் தகவல்கள் ஓர் ஆறுதல். 'சுண்டெலிகள்' அப்படியல்ல. மிக உயர்ந்த கதை வடிவம். சரியான குறியீட்டுத்தளத்தில் நேர்த்தியான பின்னல். உயரத்துக்குகாகப் போராடும் கீழ்த்தட்டு நசிந்த உடல்களைப் படம் பிடித்துக் காட்டும் முற்போக்குக் கதைவடிவம். 'கணவன்' நெகிழ்ச்சி கூடிய கதை.  மானிட வர்க்கத்திற்குச் சந்தேகம் ஒரு பாணி. குடிக்கிறபோதுதான் இந்தத் தடுமாற்றமென்பதில்லை. நல்ல நிலையில் கூட  நாலுகால் பாய்ச்சலில்  மூளையைப் பற்றும்.  கதை தெரிவு  தேடிகொண்டிருக்கிற வாதம் பெண்ணியத்தை மதிப்பதாக இருந்தது. 'இல்லாள் வருவதற்கு ' என்றொரு சொற்சிலம்பு இந்தக் கதையில் ருசிக்க வைத்த நடை. 'ஒரு முடிவும் விடிவும்' யமுனா தி.ஜானகிராமனின் மோகமுள் ஜமுனாவை ஞாபகமூட்டியது.  மறு பிறவி போலும். பெண்கள் எப்பவும் பாவங்கள்தாம்.

தாய்த் தமிழகத்தில் நவீன நவ சிறுகதைகளின் வளர்ச்சி மஹா உச்சம். புலம் பெயர்ந்து தமிழகத்தில் வந்து தங்கிய சில யாழ் தமிழ் எழுத்தாளர்கள் இங்கும் இந்த உச்சத்தை உரசியுள்ளார்கள்.  தவிர உங்களையொத்த புலம் பெயர்ந்து தமிழ் மண்ணுக்கு பல நூறு மைல்களுக்கு அப்பால் வசிக்கும் சிலரும் நவீன நவ - சிறுகதைகளில் முகம் காட்டியிருக்கிறார்கள்.  அன்றைக்கு உங்களது பெயரும் அந்த வரிசையில் இடம்பெறும் நாள் தூரமில்லையென நம்புகிறேன்.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் , ஈடுபாடும் - புதுக் கவிதையில் பங்களிப்பும் செய்து இருப்பவன் என்ற வகையில் உங்களது சிறுகதைகளை நேர்கோட்டில் காண முடிந்தது.

தவிர ஈழத் தமிழர்களின் கடலளவான கண்ணீர் துயரத்தை அறிந்தவுடன் உங்களையொத்தவர்களின் கதைகளில் வெடிக்காது வெடிக்கும் மன உளைச்சலை புர்ரிந்துகொள்ளக் கூடியவனென்பதால் என் பார்வை கதைகளில் கூர்மையாக நகர்ந்தது.

உங்களது சிறுகதையைத்தாண்டி குறுநாவலாய் மலர்ந்திருக்கும் 'அமெரிக்கா' தீவிரமான முயற்சி. பதிவு செய்ய வேண்டிய நிகழ்வுகளை அதன் காலத்தில் பதிவு செய்து இருக்கின்றீர்கள். கொஞ்சம் கலை வேலைப்பாடும், மனோ உளைச்சல்களின் உள்ளார்ந்த நிலையை ஒரு உருகிய மொழியியில் சொல்லி இருக்கும் பட்சம் அமெரிக்கா இன்னும் உன்னதம் பெற்றிருக்கும். என்னாலும் என்னையொத்த மேற்கு நாடுகளில் விருப்பம் கொண்டவர்களுக்கு பூரண் , நடுபக்க , தகவல் களஞ்சியமாக உள்ளது. பயணத்தின்போது நிகழும் இருண்ட பகுதியின் விளக்கமாக இருந்தது. நன்றி.

மொத்தத்தில் உங்களது இலக்கிய முயற்சிகள், உங்களைத் தமிழ் இலக்கிய உலகம் முதல் வரிசையில் வரவேற்கும் என்பதற்கான அடிப்படை இந்தத் தொகுதியில் மிளிர்கிறது.

24.8.1998


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R