பதிவுகள்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

கடந்த வாரம் 'டொராண்டோ' மாநகரினைத் துவம்சம் செய்த உறைமழைப்புயல் காரணமாக ஏற்பட்ட மின்சார இழப்பு நீங்கி, மின்சாரம் அடுத்த நாளே எமக்குக் கிடைத்துவிட்டபோதும் (இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிடைக்காமலிருப்பது துரதிருஷ்ட்டமானது) இன்றுதான் - டிசம்பர் 28, 2013 -  இணையத்தொடர்ப்புக்கான சேவை மீண்டும் கிடைத்தது. இதன் காரணமாக கடந்த ஒருவார காலமாகப் பதிவுகள் இணைய இதழுக்கான பராமரிப்புப் பணி தடைப்பட்டுப்போயிருந்தது. படைப்புகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் படைப்புகள் பதிவுகளில் விரைவில் பிரசுரமாகும்.

தவிர, உறைமழைப்புயலால தரையெங்கும் பனிக்கட்டியாகிவிட்ட நிலையில் முகம் குப்புற விழுந்து சிறிது காயமும் ஏற்பட்டது. வாய்ப்பகுதி, மணிக்கட்டை  அண்மித்த வலது உள்ளங்கைப்பகுதி, வலது முழங்காலுக்கு மேற்பட்ட தொடைப்பகுதி ஆகியவற்றில் ஏற்பட்ட உட்காயங்கள் காரணமாக ஏற்பட்ட வலி இன்றுதான் சிறிது குறைந்தது. நல்லவேளையாக எந்தவித எழும்பு முறிவுகளோ, பல் உடைவுகளோ ஏற்படவில்லை. வந்த ஆபத்து வலியுடன் போனதென்று கூறலாம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R