தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று. 'நாலு பேரும், பதினைந்து கதைகளும்' என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற 'கோணல்கள்' என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள 'கவுண்டர் கிளப்' என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.
சொந்த வாழ்க்கை அனுபவங்களில் திளைத்து, அதிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து சிறுகதையாக்குவது உவப்பாக இருந்தது. சுய அனுபவமே எழுத்தின் பிரதானம் என்ற மாயை என்னை அழுத்திக் கொண்டிருந்தது. 'அப்பா' தொகுப்பின் கதைகள் இந்த வகையில்.
நிறைய எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, நாம் கிரகித்துக் கொள்ளும் அனுபவங்களைக் கதைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும். இவை எழுதிப் பார்த்து, நமக்கான மொழியை, நடையைத் தேர்வு செய்து கொள்வதற்கான உத்தியாகிவிடும். பழுதென்று பல அமைந்து விடும். ஆனால் உள் மனம் கொட்டிவிடும். அனுபவங்களைக் கொட்டித் தீர்க்க வேறு உபாயம் எதுவும் இருக்காது. இது எழுதுகிறவனை, அவனின் வாழ்க்கையின் இறுக்கத்திலிருந்து தளர்த்தி அவனை சற்றே லகுவாக்கும்.
நவீன உலகத்தில் செய்திகளும், விவரங்களும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளி விடாதபடிக்கு நம்மை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. இச்செய்திகளில் சில கதைத்தன்மைக்கான விஷயமாக இருக்கும். அப்படியான ஒரு செய்தியைக் கருவாக எடுத்துக் கொண்டு நாம் அறிந்திருக்கும் சூழலை மையமாக வைத்து, ஒரு நடைச் சித்திரத்தை உருவாக்கலாம், அதில் செய்தி வெகு பூடகமாகவும், அச்சூழல் சம்பந்தப்பட்ட அனுபவத்தின் வீச்சு சரியான விகிதத்திலும் வெளிப்படுவதில் வெற்றி இருக்கிறது.
படிமங்களால் நிறைந்து விட்டது நம் வாழ்க்கை. வாசிப்பு மூலமும், சக மனிதர்கள் மனதில் பொதிந்து கிடக்கும் தொன்மங்களை எடுத்து மறு பரிசீலனை செய்து பார்க்கலாம். இந்தத் தொன்மங்களைச் சிறுகதையாக்கிப் பார்க்கலாம். 'எதிர்ப்பதியம்' என்ற சிறுகதையில் நான் பயன்படுத்தியிருக்கும் தொன்மை, ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு இடம் பெயர்கிறவர்கள், தங்களின் இஷ்டதெய்வமான சிறு கல்லை எடுத்து வந்து புதுப்பிரதேசத்தில் நட்டு கோயிலாக்குவதை, நதி நீர் பிரச்சினையால் வேறு பிரதேசத்திற்கு இடம் பெயர்கிற மனிதர்களின் சூழலுக்குள் கொண்டு வந்தேன்.
வாழ்க்கை, சீட்டைக் கலைத்துப் போட்டு வேடிக்கை காட்டுகிற விளையாட்டாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்கையில் இலக்கியப் படைப்பு மட்டும் நேர்கோட்டுத் தன்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே சிக்கலான மனநிலையை வெளிப்படுத்தும் நேர்கோட்டுத் தன்மையற்ற கதையினை எழுதிப் பார்ப்பது சவாலாகவும், புதுவிதப் பரிசோதனையாகவும் அமையும்.
'ஆழம்' என்ற என் நீண்ட சிறுகதை ஆறேழு பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வகையான கதாபாத்திரங்கள். வெளிப்படையாக அவர்களுடனான பிணைப்பு இல்லாவிட்டாலும், ஏதோவொரு பாத்திரத்தின் நீட்சியோ, அனுபவ உலகமோ இன்னொரு பாத்திரத்திற்குமென்றாகிவிடும். இதன் மூலம் இவை சிருஷ்டிக்கும் உலகின் அருகாமையை வெகுவாக உணர முடியும். தொடர்பற்ற சிக்கலான கனவைப் போன்று தோற்றமளித்தாலும், கனவு தரும் நினைவை மீட்டுருவம் செய்யும் முயற்சியை இவ்வகையான கதைகள் காட்டும்.
நம் புராணங்கள், இதிகாசங்களும்; அவற்றின் மரபான, வழித்தடத்திலான இலக்கிய வகைகளும் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றின் கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான நாவல்கள். எந்த ஒரு பகுதியையும் சிறுகதைக்கான கருவாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றை எழுதிப் பார்ப்பதென்பது ஒரு வகைப் பயிற்சியாகவும் கைக்கொள்ளலாம்.
எடுத்துக் கொள்ளும் அவ்விஷயத்தை விசாரணைக்குட்படுத்துவதும், கேள்வியாக்குவதும், நவீன வாழ்க்கையின் ஒரு அம்சமாக்கி எழுதிப் பார்ப்பதும் சுவாரஸ்யம் தரும். நான் படித்த ஒரு சமஸ்கிருத நூல் என்னைப் பல வருடங்கள் உறுத்திக் கொண்டே இருந்தது. அதிலிருந்த ஒரு கேள்வியும்: "ஆத்மா என்று ஒரு உண்டா? மரணத்திற்குப் பிறகு அது வேறு தேசத்தைச் சேர்கிறதா?" -நசிகேதனின் இந்தக் கேள்வி யமதர்மனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நரகத்தின் தொனி எங்குமில்லாதபடி சொர்க்கத்தின் ராஜ்யம் பரவலாகிவிட்டது நசிகேதனால், அவனைத் தீர்த்துக் கட்ட யோசனைகள் கிளம்புகின்றன.
அப்போது பூலோகம் பற்றியும், அங்கு நடக்கும் உயிர்க் கொலைகள் பற்றியும் பேச்சு வருகிறது. அப்போது கதை நவீன உலகத்திற்கு சட்டென இடம் பெயர்ந்து மனித குண்டுகள் பற்றியும் பேசுகிறது. இது தர்க்கரீதியான முரணாகக் கூட இருக்கலாம். ஆனால் சுவாராஸ்யமான கற்பனையாகக் கொள்வதில் எவ்வித நேர்மையற்ற தன்மையும் இருக்காதே!
வெறும் உரையாடல் மூலமே கதையை முழுமையாக்கி விடலாம். உரையாடல்கள் காலத்தைச் சுலபமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டு விடும். உரையாடல் தவிர்த்த மற்ற இடங்களில் ஆங்கில மற்றும் பிற மொழி வார்த்தைகளைத் தவிர்த்தல் தமிழுக்குச் செய்யும் பெரிய சேவையாகக் கூட இருக்கும். கதையின் தலைப்பை, கதையின் மையத்தோடு சம்பந்தப்படுத்துகிற விதமாய் சில வார்த்தைகளுக்குள் அமைய வைக்கலாம். கதை எழுதுகிற நேரத்தைப் போலவே கதைக்கான தலைப்பைத் தீர்மானிப்பதிலும் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
எந்தப் படைப்பும் எழுதி முடித்த பின்பு படைப்பாளியோடு சம்பந்தம் கொண்டதா என்பது கேள்விக்குறியே! 'புணர்ந்து முடித்த பின், தள்ளிப்படு' என்ற அலுப்பு கி.ரா. வார்த்தைகளில் படைப்பை முடித்த பின் ஏற்படலாம். படைப்பாளி அதன் பின் கழுத்தை நெறித்துக் கொண்டு மூச்சை விட்டு விலகிவிடலாம்.
பிரதி வாசிக்கிறவனின் அனுபவத்திற்கேற்ப இன்னொரு பிரதியை உருவாக்கலாம். இன்னொரு பிரதியை உருவாக்கும் சாத்யத்தை, வாசிப்பு அனுபவத்தை உயிர்ப்புள்ளதாக ஆக்குவதே ஒரு படைப்பின் வெற்றி.
கிணற்று வெடிக்காக மருந்தைத் திணித்துத் திணித்து வெடிக் குழியை நிரப்புவது போல் இறுக்கமான வடிவத்தில் சிறுகதையை எழுதுவது என்பது பெரும் வெடிச் சத்தத்தைக் கற்பனைத்து ஈடுபடுவது போலத்தான்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems