யமுனா ராஜேந்திரன் -பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை தொடர்பான ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளை ஹாலிவுட் சினிமா என்கிறார் நிலாந்தன். நிலாந்தனின் மேதைமை கொண்ட புரிதல் அது; இருக்கட்டும். முன்போலவே வரவிருக்கும் ஜெனிவா நடவடிக்கையை ஹாலிவுட் படம் போல் பார் என்கிறார் நிலாந்தன். ஜெனிவா நடவடிக்கைகளில்  அவர் படித்த பாடம் என்ன என்பது குறித்தோ அல்லது பிறர் படிக்க வேண்;டிய பாடம் என்ன என்பது குறித்தோ ‘நடைமுறையில்’ எதுவும் நிலாந்தன்; கட்டுரையில் இல்லை.

மகிந்த சிங்கள மொழிச்சினிமா காட்டுவதைப் போல இருக்கிறது நிலாந்தனின் கட்டுரை.

மேற்கத்திய நாடுகள் மனித உரிமையின் பேரில் தன்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி செய்கின்றன என ஒரு முறை அழுதார் மகிந்த. ஜெனிவா மனித உரிமைத் தீர்மானங்கள் இலங்கைக்குத் தவிர்க்க முடியாதபடி ஆபத்தான பொறிமுறை என்றார் பிரான்சின் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. ஐநா மனித உரிமைத் தீர்மானத்துக்கான போராட்டம் என்பதும் ஐநா அங்கீகாரம் பெறுவது என்பதும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தவர் முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் வரையிலும் ஒரு போராட்ட முறையாக உள்ளது. பிரான்சஸ் ஹாரிசன் முதல் மே பதினேழு இயக்கத்தவர் வரை ஐநா சபையைக் குற்றம் சாட்டுவது, அதன் அலுவலகங்கள் முன்பாகப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது ஐநா சபையின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை நேர்பட திரும்பச் செய்வதற்குத்தான்.

ஐநா சபையின் அலகொன்றில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் நிராகரிப்பை மீறித்தான் பாலஸ்தீனம் இடைக்கால அரசுக்கான அங்கீகாரத்தைப் பெருவாரியான வாக்குகள் மூலம் பெற்றிருக்கிறது. இது மிக மிகச் சமீபத்திய நிகழ்வு.

சே குவேரா ஐநாவில் உரை நிகழ்த்தினார். அரபாத் நிகழ்த்தினார். நேபாளத்தின் பிரசன்டா நிகழ்த்தினார். நிலாந்தனின் பாஷையில் இவர்களெல்லாம் ஹாலிவுட் கதாநாயகர்கள். அல்ஜீரிய-பாலஸ்தீன-நேபாள மக்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள்.

மகிந்த எந்தவித விசாரணைக்கும் உட்பட முடியாது என்கிறார். நிலாந்தன் ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளே ஹாலிவுட் சினிமா போல மாயை என்கிறார். சேனல் நான்கின் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்துத் தேடி அதனை ஆவணப்படுத்துகிறார். ஜெனிவா நடவடிக்கைகள் இருக்கட்டும்; மகிந்தவின் பேச்சுக்கள் இருக்கட்டும்; ஹாலும் மக்ரேவின் விசாரணைகள் நாசமாகப் போகட்டும்; தமிழராக நீங்கள் படித்த பாடம் என்ன நிலாந்தன்? நீங்கள் படித்த அந்தப் பாடத்திலிருந்து தமிழராக நீங்கள் முன்வைக்கும் அரசியல் அல்லது தேர்ந்து கொண்ட அரசியல் பாதை என்ன நிலாந்தன்?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R