[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்திபூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது. இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.

 

பண்டை நாள்களில் பூம்புகார் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு உள்ளது இதாவது, புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, சோழப்பட்டினம் மற்றும் காவேரிப் பண்டப்பெருநிலையம் (Kaberis Emporium) என்று.

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியனவும், பிராகிருத ஆக்கங்களான மிலிந்தபனகா, அபிதம்மவதரம், புதோஹவகட்டகதா, பௌத்த சாதகங்கள் தவிர அயலார் குறிப்புகளான தாலமியின் நிலநூல், எரித்திரியக் கடலைச் சுற்றிச்சூழ்ந்த கடற்செலவு குறித்த மொட்டைச் செய்திகள் மற்றும் பிளைனியின் ஆக்கங்கள் போன்றனவும் இந்நகரின் தொல்பழமை குறித்தும், இந்நகர் மீதான மக்களிடையான மதிப்பு குறித்தும் ஒரு ஒளிவெள்ளத்தை எறிகின்றன.

பூம்புகார் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு இருந்தது. மருவூர்ப்பாக்கம் கடற்கரை மீதும் அதனை ஒட்டியும், பட்டினப்பாக்கம் மேற்குப் பக்கத்திலும், அதே நேரத்தே நாளங்காடி முன்னை இரு வட்டாரங்களுக்கு நடுவேயும் என இடம் கொண்டு இருந்தன.

மருவூர்ப்பாக்கம் அயல்நாட்டு வணிகரது குடியிருப்புகள், மணச்சரக்குகள் (spices), நறுமணப் பொருள்கள் (perfumes), மலர்கள் ஆகியன விற்கும் விற்பனையாளர்கள், பருத்தி பட்டு ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள், அருமணிகள் (precious stones)  மற்றும் இறைச்சிவடிநீர் (gravy) விற்கும் கடைகளைக் கொண்ட தெருக்கள் தவிர கைவினைஞர்கள், இசைவாணர்கள், சிற்பிகள் மற்றும் வலைஞர்களால் அணிசெய்யப்பட்டுக் கிடந்ததாக வண்ணிக்கப்பட்டு உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் சிவன், முருகன், விண்ணன் முதலாயோர் கோவில்கள், அரண்மனைகள், அரசகுடி மரபினர், அமைச்சர்கள், படை அதிகாரிகள், செல்வச் சீர்மையுள்ள வணிகர்கள், பெரு நிலக்கிழார்கள் தவிர நடனமாடிகள் ஆகியோர் உறையும் பெரிய தெருக்கள் ஆகியன இடம்கொண்டிருந்தன.

நாளங்காடி மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையே ஒரு இயற்கையான சோலையில் இடங்கொண்டிருந்தது. இது  இரு பகுதி குடியிருப்பாளருக்கும் எளிதில் அணுகத்தக்கதாய் இருந்தது.

மேலே குறித்துச்சொல்லப் பெற்ற பிரிவுகள் தவிர அங்கே இலவந்திகைச் சோலை, உய்யவனம், கவேரவனம், சம்பாபதிவனம் மற்றும் உவவனம் என்று அழைக்கப்பட்ட  எண்ணற்றச் சோலைகளும் தோட்டங்களும் இருந்தன. வெள்ளிடைமன்றம், இளஞ்சிமீனபூமி மற்றும் பாவைமன்றம் எனப்படும் மன்றங்களும் அங்கிருந்தன.

அங்கு நோக்கர்களையும் (visitors) மகளிரையும் வரவேற்கின்ற தோரணவாயில் எனப்படும் மேற்புடைப்பு நுழைவாயில்களும், முத்துப் பந்தல் எனப்படும் முத்துக் கொட்டகைகளும் இருந்தன. இந்நகர் இளஞ்சேட் சென்னி, நளங்கிள்ளி, கரிகால்வளவன் என அடுத்தடுத்து அரசப்பட்டம் ஏற்ற சோழ அரசர்களால் ஆளப்பட்டு வந்ததாக நம்பப்படுகின்றது. பின்வரும் தமிழ்ப் புலவர்கள் இந்நகரைப் பிறந்தகமாகக் கொண்டவர்கள். அவருள் அடங்குவோர் காரிக்கண்ணனார், சேந்தன்கண்ணனார் மற்றும் மிகப் பலர் ஆவர். இத்துறைமுக நகரம் சங்க இலக்கியத்தில் தெள்ளிதாக வண்ணிக்கப்பட்டு உள்ளது. இது வாணிகச்சரக்கை சரியாக அளவிட்டு முறையாகச் சோழ முத்திரையிட்டு ஏற்றுமதி செய்யும் ஒரு சுறுசுறுப்பான துறைமுக நகரம். இதையொப்பவே, வட பகுதிகளினின்றும் அதேபோல் தெனகிழக்கு ஆசிய நாடுகளினின்றும் வாணிகச்சரக்குகள் (merchandise) இந்நகரில் குவியலுற்றன. கங்கைத்துறை வட்டாரம், ஈழம், சாவா ஆகிய இடங்களிலிருந்தும்  இடையிடையே வந்து சேர்ந்த கப்பல்கள் மணச்சரக்குகள் முதலாய இறக்குமதிகளை ஏந்திவந்தன என்பதுவும்  திரட்டப்பட்டு உள்ளது. இந்நகருக்கு வட இந்தியாவில் இருந்து, குறிப்பாக மராட்டியத்தில் இருந்து கலைஞர்களும், கட்டடக்கலைஞர்களும் கோவில்களையும் அரண்மனைகளையும், கட்டடங்களையும் பெருமனைகளையும் உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டனர் என்பதை நோக்குவதற்கு ஆர்வமாகவே உள்ளது.

அத்தகையதொரு வியப்பார்ந்த, பெருஞ்சிறப்புள்ள நகரம் இயற்கைப் பேரிடர் காரணமாக அடிக்கடலில் அமிழ்ந்துப் போய்விட்டதாகச் சொல்லப்படுகின்றது, அதோடு இந்தப் பேரழிவு சங்க இலக்கிய ஆக்கங்களில் அடிக்கடி குறித்துச்சொல்லப்பெற்று உள்ளது.

இருந்தபோதிலும், முழுவதுமாக நகரம் அமிழ்ந்துவிடவில்லை ஆனால் ஒரு பகுதி மட்டுமே கடலால் விழுங்கப்பட்டு எஞ்சிய பகுதி கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் பழுதுபடாமல் (intact) மிஞ்சிநின்றதற்கு கல்வெட்டுகள் மற்றும் அப்பர் போன்ற சைவக் குரவர் தேவாரங்களில் இருந்து சான்றுரைக்கப்பட்டுள்ளது. அதைமுன்னிட்டு, புகார் நகரம் தன் புகழை, பெருஞ்சிறப்பை, முன்மேலாண்மை நிலையை (predominant status) 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட இருத்திக் கொண்டிருந்தது என்ற கருத்து திரட்டப்பட்டு உள்ளது.

இத்தளத்தில் கடற்கரை மேல் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் கிள்ளையூரில் துறைக்களத்தையும் (wharf) , வானகிரியில் நீர்த் தேக்கத்தையும், மேலையூரில் பௌத்த விகாரையின் மீந்த எச்சங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததானது கடற்கரையின் நிலத்தடியில் ஒரு செழுமையானத் துறைமுக நகரம் நிலைப்பட்டிருந்ததற்கு சான்றுறுதி ஏந்துகிறது என்பதையோ அல்லது ஒரு நகரின் துறைமுக ஓதநீர் பகுதி (tidal zone)  அல்லது ஓதவிடைப் பகுதி (intertidal zone) இருந்ததையோ தள்ளுவதற்கு இயலாது.

இதுகாறும் பூம்புகாரில் செய்யப்பட்ட அடிக்கடல் புலனாய்வுகள்:

1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும், கோவாவில் உள்ள தேசியப் பேராழியியல் நிறுவனமும் இணைந்து பூம்புகாரின் புறக்கடற்கரைக் (off shore) கடல் மேல் ஒரு முதனிலை அளக்கை (preliminary survey) மேற்கொள்ளப்பட்டது.

முதனிலைப் புலனாய்வுகள் பக்கத் தடவியறி ஒநீநெ (side scan sonar > [sonar - Sound Navigation and Ranging - ஒலிவழி-நீரடி நெடுக்கமீடு]), எதிரொலி எழுப்பி (Echo sounder), காந்தமானி (Magnetometer) ஆகியனவற்றை அமர்த்தி மேற்கொள்ளப்பட்டன. இப் புலனாய்வுகள் வரைவிகளில் (graphs) சில திடமானச் சான்றுகளைக் காட்டின. மூன்று முகடுகள் அல்லது கட்டமைப்பு போன்ற மேடுகள் 2 முதல் 3 மாத்திரி (meter) உயரத்திற்கு நீருக்கு அடியில் இடம் அறியப்பட்டன. அதைமுன்னிட்டு, கடலின் தரைப்பரப்பிற்கு மூழ்கிகளை (divers) அனுப்பி முனைப்பானதும் விரிவானதுமான துருவியகழ்தல்களை (explorations) மேற்கொள்வதென முடிவுகொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மாநில அரசிடமிருந்து நிதியும் ஒப்புதலும் பெற்ற பிறகு அடிக்கடல் துருவியகழ்தல்கள் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் தொடங்கின.

அப்பருவத்தின் போது பொருள்களையும், வேலைப்பாடமைந்த பொருள்களையும் (artifacts) முதலில் இடம்காண நிலப்பூதியல் அளக்கையும் (geophysical survey) மேற்கொள்ளப்பட்டது. இவ் அளக்கை வால்டெய்ரில் உள்ள தேசியப் பேராழியியல் நிறுவனத்தின் (NIO) வட்டார நடுவத்தில் இருந்து வந்த ஒரு அறிவியலாளர் குழுவால் நடத்தப்பட்டது. இந்த அளக்கைப் பணி நாலரை அயிரி மாத்திரி (km)   கடல்நோக்கில் (seaward) 70 அடி ஆழத்தில் ஒரு கலமுடவைக் (shipwreck) கண்டறிந்தது. இந்த உடைந்த கலம் எண்ணிறைந்த ஈய வார்ப்புக்கட்டிகளை வெளிப்படுத்தியது. அவற்றுள் சில ஒரு பக்கத்தில் ஆங்கிலத்தில் W. Blakett என்றும், மறுபக்கத்திலும் 1971 அல்லது 1972 என்றும் பொறிப்புகளைத் தாங்கி இருந்தன என்பது இக்கலமுடைவு சற்றொப்ப 1971.- 1972 ஆம் ஆண்டுகளில் அல்லது அதற்கும் சற்றே பின்னீடாக நேர்ந்திருக்கலாம் என்பதைச் சுட்டுகின்றது.

மேலும், இந்த அளக்கை கடற்கரையில் இருந்து 200 முதல் 300 மாத்திரிகள் (meters) தள்ளி ஆழமிலாநீரின் அடிக்கடலில் ஒரு கட்டமைப்புத் தொடரணியை கண்டுபிடிக்க வழிகோளியது. காவேரி கடலோடு கூடும் இடத்திலும் ஒரு கட்டமைப்புத் தொகுப்பும், அதோடு மற்றொன்று கலங்கரைவிளக்கத்திற்கு முன்பாகவும் இடம்காணப்பட்டன. மூழ்கிகளால் அது கவனமாக ஆயப்பட்ட போது அக் கட்டமைப்பு கடற்படுக்கைக்கு ஒரு மாத்திரி அடியில் கடல்மணலால் முற்றாக மூடப்பட்டுக் கிடந்தது அறியப்பட்டது. ஆனால் ஓத மணல் (tidal sand) இடப்பெயர்வு காரணமாக, அங்கே தெளிவான காண்புநிலை (visibility) இருக்கவில்லை. இருந்தபோதிலும், சில மணற்கல் பலகைகளும், ஒரு செங்கல்லும் சில பானைச்சில்லுகளும் திரட்டப்பட்டன. இக் காண்டல்கள்(finds), கடற்கரைக்கு அருகமைந்த அடிக்கடலில் தொன்மையான வாழிடம் ஒன்று நிலைப்பட்டிருந்ததற்கு சான்று தாங்குகின்றன.

மீளவும் மேல்தொடர்ந்த அளக்கைகள் சங்க காலப் பெருங் கட்டமைப்பு ஒன்று நிலைப்பட்டிருந்ததைச் சுட்டின. இம்முனைப்பான அளக்கை அது கடற்பாறை அல்ல ஆனால் மாந்தரால் செய்யப்பெற்ற கட்டமைப்பு என்பதை வெளிப்படுத்தியது. இது குறித்த அளவீடுகளும் (measurements), வரைவோவங்களும் (drawings) அணியமாக்கப்பட்டன, அதோடு ஒரு கட்டமைப்பின் சில கற்பலகை மாத்தரிகள் (samples) தரைப்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டன.

இக்கட்டமைப்பு ஒரு கவியக்கோண (apsidal) நிலத்தளத் திட்டவரை உடையது. இதன் சுவர் 5 முதல் 6 மாத்திரிள் உயரமும் அதோடு 1 முதல் 2 மாத்திரிகள் திண்மமும் கொண்டதாக அளவிடப்பட்டது. கட்டமைப்பின் மொத்த நீளம் 20 மாத்திரிகள் மன்றும் அதன் அகலம் 15 மாத்திரிகள். அதைமுன்னிட்டு, இக்கட்டமைப்பு 15 X 20 = 300 சதுர மாத்திரிகள் உள்ளடக்கி இருந்தது. இது ஆழத்தில் 23.5 மாத்திரிகள் இருந்தது. இவ்விடம் மரபுவழியாக கரைப்பார் என அழைக்கப்பட்டது. இத்தளம் நாலரை அயிரி மாத்திரி (Km) கடல்நோக்கில் குறித்தறியப்பட்டது.அதைமுன்னிட்டு, இக்கட்டமைப்பு பண்டை நாள்களில் இந்நகரின் ஒரு பகுதியாய் இருந்திருக்குமானால் இங்கு நிலைப்பட்டிருந்த பூம்புகார் நகரம் உண்மையில் நாலரை அயிரி மாத்திரிகள் வரை விரிந்ததாய் இருக்கும். மீண்டும் 1993 ஆம் ஆண்டின் போது துருவியகழ்தல்கள் 28.01.1993 முதல் 28.02.1993 வரை ஒரு மாதத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.

துரப்பணச் செயற்பாடுகள் கடலின் தரை ஆய்வுகளுக்காக எதிரொலி எழுப்பி மற்றும் பக்கத் தடவியறி ஓநீநெ ஆகியவற்றின் துணையோடு மேற்கொள்ளப்பட்டன. இருப்புநிலையைப் பொருத்துவதற்காக சிறுதூர நெடுக்கன் (Mini ranger) மற்றும் கோள் இருப்புநிலை முறை (GPS> global positioning system) ஆகியனவும் கூட அமர்த்தப்பட்டன. துருவியகழ்தல்கள் ஓதவிடைப் பகுதியிலும் அதேபோல் தெற்கில் உள்ள வானகிரி மற்றும் வடக்கில் உள்ள மாயக்கன்குப்பம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியின் கடற்புறத்தே 5 முதல் 7 மாத்திரிகள் நீர்ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் முன்பு இடம்காணப்பட்ட கலமுடைவு (shipwreck) மற்றும் 23 மாத்திரி நீர்ஆழத்தில் உள்ள கல் கட்டமைப்பு ஆகியன குறித்து சில மேலதிக விளக்கங்கள் திரட்டப்பட்டன.

ஓதவிடைப்பகுதியில் நிகழ்த்திய துருவியகழ்தல்கள் (explorations) வானகிரியிலும் புகாரிலும் உறைகிணற்றின் மீதங்களை வெளிப்படுத்தின. சங்க காலத்துச் செங்கல் சுவர் ஒன்று கண்ணகி சிலைக்கு சில மாத்திரிகள் தெற்கே வெளிப்பட்டது. செங்கற்களின் அளவு 36 X 18 X 6 செ.மீ. என அளவிடப்பட்டது.  இக்காண்டல்கள் (finds) கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையினதாக நாள்குறிக்கப்ட்டுள்ளன.

மீளவும், புகாரின் ஆழமிட்டுச் செய்கின்ற பணிகள் இரு தளங்களில் ஆயப்பட்டன (1) வானகிரிக்கு அருகே  இற்றைக் காவேரியின் தொடுவாய் (2)  புகாருக்கு வடக்கே காரைக்குடிக்கு எதிரில். 7 மாத்திரி ஆழத்தில் நிகழ்த்திய காற்றுயர்த்திச் செயற்பாடுகள் வானகிரியின்  மூன்று கல்கட்டுமானத் தொடர்கோவைகளை வெளிப்படுத்தின.

கற்பலகைகள் 30X20X5 செ.மீ. இருந்து 65X40X10 செ.மீ, மற்றும் 60X35X10 செ.மீ. வரையான அளவின. ஒரு சில கருப்பு- சிவப்பு நிற மட்கலம், சிவப்புநிற மட்கலம், சாம்பல்நிற மட்கலம் மற்றும் வெளிர்மஞ்சள் மட்கலம் (buffware) ஆகியவற்றின் துண்டுகளும் திரட்டப்பட்டன, இவை மேற்சொன்ன இரு தளங்களது கட்டமைப்பு வளாகத்தின் சேர்ந்தபகுதியாய் ஆகுவன. புலனாய்வாளர்கள் கட்டமைப்புகளை மேற்குறித்த மட்கலங்களின் அடிப்படையில் நாள்குறித்துள்ளனர். அவர்தம் கருத்துப்படி, அவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையானவை, ஆயினும் கருப்பு - சிவப்புநிற மட்கலத்தின் நாள்குறிப்பு, மார்ட்டிமர் வீலரது1944 ஆம் ஆண்டைய புதுச்சேரியின் அரிக்கமேட்டு ஆகழாய்வுகளுக்குப் பின்பு தமிழ்நாட்டில் அகழாய்ந்த எண்ணிறைந்த இரும்புக் கால மற்றும் முந்து இரும்புக் கால தளங்களின் ஒளிவெளிச்சத்தில் மாற்றப்பட்டுவிட்டது. அதைமுன்னிட்டு, கட்டமைப்பு மீதிமிச்சங்களுக்குக் குறித்தொதுக்கிய (assign) நாள்குறிப்பு திருத்திக்காட்ட வேண்டி உள்ளதோடு அதை கி.மு. 1 ஆம் ஆயிரஆண்டின் (millenium) தொடக்கம் முதல் கி.மு. 1 ஆம் ஆயிரஆண்டின் இடைக் காலம் வரை கொண்டு செல்லலாம். காட்டாக, கொற்கையின் கருப்பு - சிவப்புநிற மட்கலம் கி.மு. 795 க்கும், ஆதிச்சநல்லூரின் கருப்பு - சிவப்புநிற மட்கலம் கி.மு.1550 க்கும் நாள்குறிக்கப்பட்டுவிட்டன. 

இத் துருவியகழ்தல்கள் முன்னர் குறிப்பிட்ட கலமுடைவு குறித்து இன்னும் சில விளக்கங்களை வெளிப்படுத்தின.  புலனாய்வுகளின்படி கலமுடைவு 50 X 15 மாத்திரிகள் அளவுபட்டதாக இருந்திருக்க வேண்டும், அதோடு இது பிந்து நடுக்காலத்தாக குறித்தொதுக்கப் பட்டுவிட்டது. புகாருக்கு மூன்று காலம் சார்ந்த கட்டமைப்பு மீதிமிச்சங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. காலம் I - உயர் அலை வரிக்கு மேல் (HWL). காலம் II - ஒரு மாத்திரி ஆழம் வரை. காலம் III - 5 முதல் 7 மாத்திரி வரையான ஆழம். இது பண்டைய புகார் நகருடைய விரிவுபட்ட அழுந்திய நிலையைச் (extensive submergence) சுட்டுவதோடு நாயக்கன்குப்பம் முதல் தரங்கம்பாடி வரையான வட்டாரம் துருவியகழப்பட வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.  

1994 ஆம் ஆண்டில் மேலும் துருவியகழ்தல்கள் (explorations) மேற்கொள்ளப்பட்டதில் கடலானது கடற்கரையையும் காவிரி ஆற்றின் தொடுவாயையும் மிகக் கடுமையாக அரிக்கின்றது என்பதை அவை வெளிப்படுத்தின. வானகிரிக் கோவிலின் தெற்கிலும் வடக்கிலுமாக  கடற்கரை நெடுகலும் ஒரு அயிரி மாத்திரி நீளத்திற்கு ஓதவிடைப் பகுதியில் சில அகழிகள் போடப்பட்டன. இந்த அகழாய்வுகள் ஒரு சில உறைகிணறுகள், ஒரு பாவுதரை மற்றும் செங்கல், ஒரு செவ்வக  மேடை கொண்ட ஒரு வீட்டின் தரை ஆகியவற்றை வெளிச்ச்த்திற்கு கொண்டு வந்தன.

மேற்சொன்ன துருவியகழ்தல்கள் கடலானது பண்டைய நகர் மேல் உள்நுழைவதையும் அதோடு அது கடற்கரை நெடுகலும் அந்நகரின் சற்றொப்ப 5 அயிரி மாத்திரி பரப்பையும், கடல்நோக்கில் இருந்து 2 அயிரி மாத்திரி காரைக்குடி முதல் சின்னவானகிரி வரையிலும் அதற்கும் மேல் தெற்காக உள்ள நிலப்பரப்பையும் கடலுள் அமிழ்த்திவிட்டிருப்பது தெரிகின்றது..  

துருவியகழ்தல்கள் 23 மாத்திரிகள் வரையான ஆழ்ந்த ஆழத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும், அது மட்டுமே புகார் நகருடைய அமிழ்ந்த தன்மை குறித்த உண்மைப் படத்தை வெளிப்படுத்த முடியும்.

1994 ஆம் ஆண்டு ஆகத்து 18 இல் தொடங்கிய புறக்கடற்கரை (offshore) துருவியகழ்தல்கள் தோதில்லாப் பருவநிலையாலும், ஏற்பேயாத (unfavourable) வானிலையாலும்,சுன்ன காண்புநிலையாலும் (zero visibility) தொடரவியலாமல் போனது.

கடல்நீரோட்டமும் முரண்மையான வானிலையும் காற்றுயர்த்தச் செயற்பாடுகளையும் ஒளிப்படப் பிடிப்பையும் தடுத்துவிட்டன. அதைமுன்னிட்டு, புலனாய்வுகள் இடைக்காலத்திற்கு துருவியகழ்தல்களை நிறுத்துவைத்தன அதோடு அதை 1995 ஆம் ஆண்டில் பிப்ரவரி மார்சு மாதங்களில் தொடரத் திட்டமிட்டன. ஆனால் கெடுவாய்ப்பாகப், புலனாய்வுகள் இந்நாள் வரை தொடரப்படாமலேயே போயின.


மேல் உள்ள கட்டுரையை Under  Water Archaeological Investigations at Poompucar என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). இதை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி. பின் வரும் கட்டுரை பூம்புகார் தொடர்பான ஆழிப்பொறியில் சார் கட்டுரை என்பதால் இதனுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.

பக்கத் தடவியறி ஓநீநெ, எதிரொலி எழுப்பி, காந்தமானி ஆகியவற்றுடன் 1993 இல் பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள்

பக்கத் தடவியறி ஒநீநெ, எதிரொலி எழுப்பி மற்றும் காந்தமானிஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் (marine) தொல்லியல் துருவியகழ்தல்கள் பூம்புகாரில் நிகழ்த்தப்பட்டன, இவை சில மாந்தர்ஆக்கப் பொருள்களையும், கட்டமைப்பு மீதிமிச்சங்களையும், உள்தட்டடுக்கில் (inner shelf) ஒரு கலமுடைவும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தின. விளக்கமான அகழாய்விற்காக உணர்வைக்கிளறும் பெருந்தளங்கள் பின்வருமாறு அடையாளங் காணப்பட்டன:

தென் காவேரி ஆற்றுக்கரைப் புறக்கடல் (5.5 முதல் 8 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி) 
புதுக்குப்பம் புறக்கடல் (6.5 முதல்10 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி)
நாயக்கன்குப்பம் புறக்கடல் (8.5 முதல் 9.5 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி)

வண்டல்படிந்த மண்ணுக்கு அடியில் வேலைப்பாடமைந்த பொருள்கள் திரட்டபட்டதானது மூழ்கியதாக ஐயுறப்படும்,  வண்டல் படிவுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படும் புகார் நகரத்து மாந்தர் வாழிடம் நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது. சிதைவுற்றுள்ள கட்டமைப்புகள் வண்டல்படிவின் அடியில் 5 மாத்திரி திண்மத்திற்கு (5 meters thickness) அமிழ்ந்திருப்பதால் இந்நிலப் பரப்பின் வண்டல்படிவு தகைவேகம் (rate of sediment) குறித்து அறிய உயர்நேர்த்தியான ஆழமிலா நிலநடுக்க முன்னுந்தி அளக்கை (high resolution shallow seismic propelled survey) தேவைப்படுகின்றது. மேலும், ஒலிப்பதிவுக் கருவி (sonographs) மற்றும் காந்தமானி ஆகியவற்றின் பதிவுகள் 17.5 மாத்திரி நீர் ஆழத்தில் ஒரு கலமுடைவைக் காட்டின. மூழ்குபணிகள் ஒரு கலமுடைவை உறுதிப்படுத்தின.

பக்கத் தடவியறி  ஒநீநெ (Side Scan Sonar > [sonar - Sound Navigation and Ranging - ஒலிவழி-நீரடி நெடுக்கமீடு]):

இப்புலனாய்வுகளில் இவ்வினைக்கருவி பெரும் பங்கு ஆற்றுகின்றது.  இது கடற்படுக்கைப் படமவரைவில் (mapping) பயனார்ந்ததொரு உயர்நேர்த்தியான கேட்பொலி அமைப்பு (high resolution acoustic system) ஆகும். பக்கத் தடவியறி ஒநீநெ வின் பதிவுகள் ஒலிப்பதிவுகள் என அழைக்கப்படுகின்றன. அவை கடல்  தரையைப் படம்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, இது வானவொண்படத்தை (aerial photograph) ஒத்தது. இதில் குறிப்பிட்ட சிறப்பியல்புகள் கொண்ட ஒலி அலைகள் நீர் ஊடகம் மூலம் கடற்படுக்கைக்குச் சென்று மீளவும் மேற்பரப்பிற்கு எதிரடிக்கும் அல்லது சிதறித் திரும்பும். அவ்வாறு பெறப்பட்ட இயல்வுக்குறிகள் (signals) ஒரு வரைபடப் பதிவானில் (graphic recorder) பதியப்படுகின்றன. கடல்தரை மேல் கிடக்கும் ஏதொரு இயற்கைக் கட்டமைப்பானாலும் அல்லது மாந்தர் ஆக்கப் பொருளானாலும் இந்த அமைப்பின் உதவியோடு துப்பறிய முடியும். இந்த ஆக்கப்பாடு (advantage) காரணமாகவே இந்த அமைப்பு ஆழித் தொல்லியல் புலனாய்வுகளில் விரிவாகப் பயன்கொள்ளப்படுகின்றது. அளக்கை நேரத்தையும், துருவியகழும் பரப்பைக் குறுக்கி அதன்வழி அளக்கைச் செலவையும் சிறுமையாக்குகின்ற பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் தவிர்த்து வேறு எவ்வகை முறையிலும் ஒரு தளத்தை ஆழித் தொல்லியல் துருவியகழ்தலுக்காகத் தெரிவு செய்தல் என்பது மிகக் கடினமானது.

எதிரொலி எழுப்பி (Echo sounder):

எதிரொலி எழுப்பி கடற்படுக்கையின் ஆழத்தைத் தெரிவிக்கின்றது, இதன் மூலம் கடற்படுக்கையின் கண்டறியப்படாத பொருள்களின் உயரம் தீர்மானிக்கப்படுகின்றது. இது அமிழ்ந்துபோன வேலைப்பாடமைந்த பொருள்களைத் துப்பறிய உதவுகின்றது.

காந்தமானி (Magnetometer):

அமிழ்ந்துபோன பொருள்களைத்  துப்பறிவதில் நன்கு அறியப்பட்ட விரைவானதும் செலவு குறைந்ததுமான தொல்- நிலப்பூதியல் (archaeo - Geophysical) பயன்முறைகளுள் இவ் வினைக்கருவியும் (Equipment) ஒன்று.  காந்த அளக்கைகள் மண்காந்தப் (terro magnetic) பொருள்களைத் துப்பறிவதற்கு பயனார்ந்தவை. மேற்சொன்ன வினைக்கருவிகளிலேயே பக்கத் தடவியறி ஒநீநெ ஒன்றே அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகளில் விளைவுறு அமைப்பாக (effective system) உள்ளது ஏனெனில் அதுவே கடல்தரை மேல் கிடக்கும் பொருள்கள் குறித்த நேரடித் தெரிசெய்தியை (information) வழங்குகின்றது.  உரோசன்கிராவுட்சு, கிளீன் மற்றும் எட்கர்டன் ஆகியோர் (1972) இவ் வினைக்கருவியை  புதிதாய்ப்புனைந்தனர் (invented).

பூம்புகாரில் பக்கத் தடவியறி ஒநீநெ :

முன்னமே சொன்னது போல இவ் அளக்கைகள் (surveys) 1993 ஆம் ஆண்டின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், தேசிய பேராழியில் நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) கூட்டாக மேற்கொள்ளப்பட்டன. எதிரொலியெழுப்பியும்,  பக்கத் தடவியறி ஒநீநெ 260 மாத்தரியும் (Model)  அளக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த வினைக்ககருவி இருபக்கங்களிலும் இயக்கங்காட்டி (transducer)  தொகுதியை பொருத்திய ஒரு கட்டி இழுக்கும் மீன்பொறி'யையும் (tow fish), ஒரு எஃகுக் கம்பி வடமும் அதோடு ஒரு இரட்டைக் கடற்கால் பதிவானும்  (dual channels recorder) பெற்றிருப்பதாக வண்ணிக்கலாம். இந்த அமைப்பை 25 முதல் 600 மாத்திரிகளுக்கு இடைப்பட்ட நெடுக்கத்தில் (range) செயற்படுத்தலாம்.  வேறு சொற்களால் குறிப்பதானால்,  ஒரு வட்டார அளக்கைக்காக ஒரே நேரத்தில் பெரும பரவெல்லையாக (maximum swath) 1.2 அயிரி மாத்திரி (Km) வரையான பரப்பை இதனால் உள்ளடக்க இயலும். இந்த அமைப்பு ஒரு அலைபரப்பியின் எதிரொலியைத் (Echo of Transmitter) துப்பறியவும்  அதோடு அவற்றை ஒலிப்பதிவுக் கருவி (Sonograph) எனப்படும் நேரோவப் பதிவுருவில் (facsimile record) வழங்கவும் முனைகின்றது.  முதல் எதிரொலியே அடிமட்ட எதிரொலி, பிந்திய (subsequent) எதிரொலிகள் கடல், முதலாயவற்றின் குறுக்கே இருந்து எதிரடிப்பன (reflect) ஆகும்.

SIMRAD  Ey Echo Sounder:

இந்த அமைப்பு கடலாழவளவியல் (Bathymetry) குறித்த விளக்கங்களைப் பெற அமர்த்தப்படுகின்றது. இந்த முறைமை கடற்படுக்கையின் ஆழத்தையும் இயல்பையும் குறித்த விளக்கங்களை வழங்குகின்றது.

பர்ரிங்கர் புரத்துரான்அச்சுச்சுழலோட்ட காந்தமானி (Barringer Proton Precession Magnetometer):

இவ் அமைப்பு ஒரு எடுத்துச்செல்லத்தக்க உணர்கருவியையும் (portable sensor) குறைவெடை முன்னுந்து வடங்களையும் (tow cables) உள்ளடக்கியது. இது புரத்துரான் அச்சுச்சுழலோட்ட நெறிமுறையில் முழுச் செறிவு அளவீட்டுக்காக ஒரு நீரகக்கரிப் பாய்மத்தில் (hydrocarbon fluid) செயற்படுகின்றது.  காந்தமானியின் உள்வாங்கல் தகைவேகம் (reception rate) ஒவ்வொரு 5  நொடிகளுக்கு ஒரு அளவெடுப்பு (reading) என்பதிலிருந்து ஒரு நொடிக்கு 3 முறைகள் என்ற உயர் தகைவேகத்திற்கு தெரிவுறத்தக்கது (selectable).  இச் செய்ற்பாட்டில் உயர் உள்வாங்கல் தகைவேகமே அறிவுறுத்தத்தக்கது. பதிவானுக்கான தரவு ஒரு ஒப்புமை வார்ப்பட்டை வரையம் பதிவானில் (analog strip chart  recorder) பெறப்பட்டு இலக்கமுறையாக காட்சிப்படுத்தப்படுகின்றது (digitally displayed).

1993 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளின் போது பெரியவானகிரிக் கோவிலுக்கும் நாயக்கன் குப்பத்திற்கும் இடையே  5 முதல் 10 மாத்திரிகள்  நெடுக்கமுடைய  நீராழத்தில் ஒலிப்பதிவுக் கருவிகள் ஒரு வட்டாரத்தில் களிமண் வைப்புகளைக் காட்டுகின்ற மாறுபாடற்ற முடிவுகளைப் படமிட்டு விளக்கின.

புதுப்பாக்கம் புறக்கடல் அளக்கை ஒலிப்பதிவுக் கருவியில் 6.5 மாத்திரி நீராழத்தில் விரிந்து பரந்த கலமுடைவின் வெளிதோற்றத்தை  வெளிப்படுத்தியது. இந்த பரப்பெல்லையின்(area) எதிரொலி வரையம் (echogram) மீண்டும் ஒரு அமிழ்ந்து போன தொல்கால்வாயைச் சுட்டியது. நாயக்கன் குப்பம் அளக்கைகள் 6.5 மாத்திரி ஆழத்தில் மணற்கூழாங்கற்களுடன்  கூடிய கட்டமைப்புகளை வெளிப்படுத்தின.

மூழ்கிகளால் மேற்கொள்ளப்பட்ட பார்வைசார் உண்ணோட்டம் (visual inspection) பேரெண்ணிக்கையான கிளிஞ்சல் சிப்பிகளைச் சுட்டின.  இத்தகு சிறப்புக்கூறு நிலத்தின் மேல் அமைந்த ஒரு மண்மேட்டை ஒத்த  ஒரு உயரமான இடக்கிடப்பு ஏற்றத்தைச் (topogaphic elevation) சுட்டின.

மேற்கொள்ளப்பட்ட காற்றேற்றச் (airlift) செயற்பாடுகள் ஒருசில பானைச்சில்லுகளையும் கட்டமைப்பு மீதிமிச்சங்களையும் வெளிப்படுத்தின. இஃது கடற்படுக்கைக்கு அடியில் மாந்தர் குடியேற்றத்திற்கான சான்றைச் சுட்டியது.

பூம்புகாருக்கு 6 அயிரி மாத்திரி (Km) தெற்கே கிடக்கின்ற தரங்கம்பாடியில் 1989 இல் நிகழ்த்தப்பட்ட பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் ஒரு அமிழ்ந்து போன  உறைகிணறு போன்ற கட்டமைப்பு, முதலாயவற்றை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அது போலவே, சின்ன வானகிரி புறக்கடலில் 9 முதல் 11 மாத்திரிக்கு இடைப்பட்ட நீராழத்தில் அரைவட்ட வடிவில் ஏற்படுத்திய  கட்டமைப்பின் மீதிமிச்சங்களும் குறிப்பறியப்பட்டன (noticed).

பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் பூம்புகார் புறக்கடலில் 16 முதல் 18 மாத்திரிக்கு இடைப்பட்ட ஆழத்தில் 30 X 15 மாத்திரிகள் அளவீடு உள்ள  கலமுடைவு ஒன்று நிலைப்பட்டிருப்பதை பதிவு செய்தன. அது 2 முதல் 3 மாத்திரிகள் உயரமுடையதாக இருந்தது. இந்த பரப்பெல்லையில் மேற்கொண்ட மூழ்குசெயற்பாடுகள் ஒரு கலமுடைவு பாதி அமிழ்ந்தும் மற்றொரு பாதி ஆழித் தரையின் மேல் வெளிக்காணத் தோன்றுமாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஏற்கெனவே கண்டறிந்தது போல் W . Blacket 1972  என்ற ஒரு பொறிப்பு தாங்கிய சில ஈய வார்ப்புக்கட்டிகள் மீட்கப்பட்டன.

புலனாய்வுகளின் முடிவுகள் அமிழ்ந்த நகருடைய கட்டமைப்புகளின் இருப்பு இன்னமும் சிதைந்துபோன புகாரில் 5 மாத்திரிகள் திண்மை உடைய வண்டல்படிவு வரை அடிப்பகுதியில் நன்றாகக் காப்புறுத்தப்பட்டிருக்க (preserved) வேண்டும் என்பதை சுட்டின.  அதைமுன்னிட்டு, முறைப்பட்ட உயர்நேர்த்தியான ஆழமிலா நிலநடுக்க அளக்கைகள் (systematic high resoution shallow seismic surveys) பூம்புகார் வட்டார கடற்கரைக்கு அருகில் விளக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அடிக்கடல் அகழாய்வுகள்  அமைதியான கடல் நிலைமையின் போது உயர் அழுத்த காற்றேற்று செயற்பாடுகளின் உதவியோடு விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.  வேற்றுமைப்பாட்டு கோள் இருப்புநிலை முறை (DGPS - Differential Global Positioning system) ஒரு மாத்திரி (1 Km) வரை துல்லிய விளக்கம் தரும். ஆதலால், இந்த முறை புதையுண்ட கட்டமைப்புகளை ஊசிமுள்ளென சுட்டுவதற்கு பயனார்ந்ததாய் இருக்கும்.

சேசாத்தரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R