கவிதை வாசிப்போமா?

ஆதாம் ஏவாள் உதிரத்தில் ஓருயிராய் ஓருடலாய் நான் கருவுற்றிருந்தபோது,
அன்பும் மனிதமும் இவ்வுலகில் உருப்பெறத் தொடங்கின.
ஆதாமின் கொடுங்கோலற்ற அன்பும்-பரிவும்-களவும்-காமமும்
ஆணாதிக்கச் சாயலை ஒருபோதும்
ஏவாளின் உடலையும்+உள்ளத்தையும்=ஏன் உயிரையும் சிதைக்கவேயில்லை;
மாறாக, ஏவாள் பூப்பெய்தும்போதும் தாய்மையுறும்போதும்
மிக அனுரசணையாக ஆதாம் நடந்துகொண்ட விதம்
பூமித்தாய் மட்டுமன்று; உலகத்தார் உள்ளமும் குளிர்ச்சியுற்றது.

அதனால்தான், நான் இத் தலைமக்களுக்குப் பாலகனாகப் பிறப்பெடுத்தேன்.
ஆதாம்போல், ஏவாளும் இவ்வுலக உயிர்களெல்லாம்
எமதுக் குழந்தைகளென்றுக் கருதியமையதால்,
தமது முலைகளிரண்டில் ஒன்றை எனக்கும், மற்றொன்றைப்
பிற உயிர்களுக்கும் சரிசமமாகப் பாலூட்டி உலக உயிர்களை ரட்சித்தாள்.
அன்று முதல் இன்று வரை உலகத்தார் மனத்தில் அன்பும் மனிதமும்
மானமுமாக, ஓங்கித் தழைக்கின்றனென்று இயேசு கிறித்துவராகிய நான்,
புது தில்லியிலுள்ள ஓரழகியச் சோலைவனத்தில் எமது சீடர்களுடன்
பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது அவ்விடத்திலிருந்த பஞ்சாபிக் கோயில்-
சிவன் கோயில்-அனுமன் கோயில்-துர்க்கை கோயில்-மசுதிக் கோயிலென
கோயில்களின் நாற்புற வாயில்களும் திறந்தே இருந்தன.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R