அஞ்சலி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்அன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.  அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தில் நான் பார்த்த ஒரேயொரு தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பெரும் வரவேற்புடன் ஓடிய திரைப்படம். அத்திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காகப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை முதன் முறையாகப் பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மானுட வாழ்க்கையில் பிறப்பும், இறப்பும் தவிர்க்க முடியாதவை. அதுபோல்தான் இன்பமும், துன்பமும். மானுடர்களாகிய நாம் இவற்றுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்று சமாதானம் கூறிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'ஆயிரமும் நிலவே' வாவிலிருந்து இன்று வரை இளைய நிலாவாகப் பரிணமித்தவர் எஸ்.பி.பி அவர்கள்.  அவர்கள்  இனி என்றுமே தன் பாடல்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்பார். அவர் இருந்தபோதும் அவர் குரலினூடுதான் அவரை இரசித்தோம். இனியும் அவர் குரலினூடு இரசித்துக்கொண்டிருப்போம்.

அவர் நினைவாக  இளைய நிலாவைப் பாடும் இளைய நிலாவின் நிகழ்ச்சியொன்றினை உள்ளடக்கிய இக்காணொளியினைப் பகிர்ந்துகொள்கின்றேன்:  https://www.youtube.com/watch?v=-lbTHGNqmx8

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R