-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

கார்மேகம் கம்பன் என்கக்
கட்டியம் கூறி மண்ணில்;
ஓர்கவி உண்டோ இல்லை
ஒடிசியும் ஷெல்லி இன்னும்
பார்கவி சேக்ஸ்பி யர்க்கும்
படைத்ததோர் ராமா யணத்தின்
நேர்கவி யோடு வைத்து
நிறுத்திட முடியா தையா !

இலக்கியத் தோட்டம் தோன்றி
எழிற்பிர சாந்தன்; பேரார்
முழக்கிய கம்பன் பாட்டு
முத்தமிழ்க் கீடு இல்லாப்
பழமறை யாகும் வையப்
பட்டறைத் தேனார் பாக்கள்
இளம்புவி கொடுக்கும் என்றும்
இறப்பிலாக் கவிதை என்றார் !

கம்பனைக் கற்றேன் அந்நாள்
காட்டிய காண்டம் முற்றும்
கும்பிடக் கொடுத்த காதை
குவிந்தனள் போற்றும் சீதை
இந்திர சித்தே மைந்தன்
இராவணர்க் கென்ற போதும்
வந்ததே அறத்தின் சாயல்
வரலாறே சொல்லும் காயல்!

பிரசாந்தன் முனைவர் என்ற
பேராத னைக்கோர் ஆயன்
குரலேசெந் தமிழே என்றே
கோலோச்சும் அறிவின் நேயன்
அறமேயாம் கம்பன் பாட்டு
அழியாதே வையம் முற்றும்
நெறியாக நிற்கும் அன்றோ
நீள்நிலம் வரைக்கும் என்றார்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R