- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !

நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !

விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

 

வானிடிக்கும் அளவினிலே
வகைவகையாய் கட்டிடங்கள்
தானமைத்து பெருமையுற்று
மாநிலத்தில் திகழுகிறார்
பொறுமையுடை பூமிதனை
பொங்கியெழ வைக்கின்றார்
அழிவுதனை யெண்ணாமல்
ஆடுகிறான் மனிதரிப்போ !


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R