கொரோனாவால் இவ்வுலகு
பட்டழிதல் கொஞ்சமல்ல
பரிதவிப்பும் கொஞ்சமல்ல
கெட்டழிந்து போனாலும்
கெடுமதிக்குக் குறைவுமில்லை
ஒட்டிஉலர்ந்த வயிறு
தட்டுத்தடுமாறும் வயது
பொட்டென்று போவதென்ன
இத்தனையும்தாங்கி இன்னும்
உயிர்வாழும் இப்பூமி கோட்டைமதில் வீடுகட்டி
கொண்ட மலர்மஞ்சத்தில்
நீட்டி நிமிர்ந்தமர்ந்து
நிறைவாகத் தின்றவரும்
அடுத்தவேளைச் சோற்றுக்கே
ஆலாய்ப் பறந்தவரும்
நின்று நிதானித்து- தம்
நிலையுணர்ந்தார் இப்புவியில்

பழந்தமிழர் பண்பாடு
மறந்திருந்த எம்பாடு
திண்டாடிப் போனதைத்தான்-கொரோனா
துண்டாடி வைத்தகதை
சொல்லுதிப்போ
ஓடித்திரிந்த உறவு
கூடிவாழ்ந்த கதை-மீண்டும்
வெல்லுதிப்போ

கண்ணுக்குத் தெரியாக் கடவுளென்பார்- அதே
கண்காணா வைரஸை என்ன சொல்ல- ஞானக்
கண்ணுக்குத் தெரியும் கடவுளென்போம்- பூதக்
கண்ணுக்குத் தெரியும் வைரஸென்பார்
விண்ணுக்கும் மண்ணுக்கும் விளங்காததிந்த
விந்தையை என்னவென்று சொல்வேன்!

அணுவைத் துளைத்து ஆயுதம் செய்வார்
வைரஸ் துளைக்க வல்லமை இல்லார்
எல்லாம் முடியும் தம்மால் என்பார்
எமக்கும் மேலே சுமக்கும் ஒருவன்
இருப்பதை மறந்து மனிதம் துறந்தார்
பாடம் படிக்க பாரினில் இன்று
கோவிட்தான் கோட்(GOD)டாய் வந்ததோ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R