- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !

சங்கத் தமிழே சாத்திரமே
சரிதம் போற்றும் தமிழ்கலையே
கங்குல் வெளித்துக் கதிரெழுதும்;
கன்னற் பொழுதே காவியமே
தெங்கின் இளநீர் மாமதுரைத்
தேவி வரைந்த திருமுறையே
பொங்கும் நீரே பேரணியே
பூத்துக் குலுங்கும் மாமரமே !

ஆழம் பரந்த அலைகடலே
அதற்கும் ஆழம் தமிழ்க்கடலே
கீழடி கண்ட குடிமனையே
கீர்த்தி படைத்த அரண்மனையே
சோழம் தென்னைச் சிதம்பரமும்
சித்திரங் காட்டும் பதிணெண்கீழ்க்
காழம் உரைத்த கணக்குஎலாம்
கண்ணுக் கெட்டாக் தூரமடி!

சிலம்பும் கதையின் காப்பியமும்
சேயிழை பஞ்ச பாண்டவரும்;
விளங்கும் கம்பர் விடுத்தகவி
வேராம் அண்டம்; பிரபஞ்;சம்
நிலங்கள் தோறும் நின்றுலவும்
நித்திலம் தமிழாய் நிலைத்தவளே
இலங்கும் மகளே ஏடுகண்ட
இயற்கைக் குரலே இளந்தாயே!

பொங்கும் பூமி வைகாசிப்
பூக்கள் தொடுத்த பூமாலைத்
திங்கட் கெழிலாம் சோதியொடும்
சேர்ந்து பிறந்தாய் தமிழ்த்தாயே
மங்கை குலவும் மணிநாட்டில்
மாதர் தினமே வரைகின்றோம்
செங்கை எழிலுஞ் செம்பவளம்
சிந்தும் தமிழே வாழியவே !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R