'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ்
ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று.
இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது?
சொல்வ தெல்லாம் உண்மை தானா?
இதுவரை நாங்க கண்ட தில்லை
இந்த வைரசை என்ற போதும்
அச்சம் பெரிய வியாதி அன்றோ
அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.

கொரோனா என்றாலும் கோவிட் என்றாலும்
அஞ்சோம். அஞ்சோம் அடிநாம் பணியோம்.
எதிர்த்து நின்று வென்று நிற்போம்.
மானுட குலத்தை இதுபோல் நோய்கள்
நாசம் செய்வது புதிது அல்ல.
அதனால் முடங்கி இருப்பதும் இல்லை.
இருப்பின் முடிவு நியதி அன்றோ?
இதற்குக் கவலை எதற்கோ இன்று ?

வருவதை எதிர்த்து துணிந்து நிற்போம்.
வைரசை வென்று சாதனை புரிவோம்.
எதுவந்த போதிலும் ஏற்போம் எதற்கும்
கலங்கிட மாட்டோம் உறுதி எடுப்போம்.
எம்மையும் அயலையும் உலகையும் காப்போம்
அதற்குரிய செயல்களை செய்வோம் வெல்வோம்.
மரணத்துள் வாழ்ந்த நமக்கு இந்த
'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R