தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?

2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இவ்விரண்டு கேள்விகளுமே பிரதானமானவை. இக்கேள்விகளுக்கு இல்லை என்பது பதிலாக இருப்பின் அதற்கான பதில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களியுங்கள் என்பதே. உண்மையில் ஜேவிபியின் அநுரா திசாநாயக்காவுக்கம், கோத்தபாயா ராஜபக்சவுக்குமிடையில்தான் போட்டி என்றால் நிச்சயம் அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் இங்கு கடுமையான போட்டி நிலவுவது சஜித் பிரேமதாசாவுக்கும், கோத்தபாயா ராஜபக்சவுக்குமிடையில். இந்நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதே சிறந்தது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R