கலைஞர் கருணாநிதி

தமிழ்த்தாயின் தவப் புதல்வா
தானாக எழுச்சி பெற்றாய்
அமிழ்தான தமிழ் மொழியை
ஆசை கொண்டு அரவணைத்தாய்
தமிழ் முரசாய் நீயிருந்தாய்
தமிழெங்கும் முழங்கி நின்றாய்
தவிக்க விட்டுப் போனதெங்கே
தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

சங்கத் தமிழ் இலக்கியத்தை
தானாகக் கற்று நின்றாய்
பொங்கிவந்த தமிழ் உணர்வால்
பொழிந்து நின்றாய் பலவுரைகள்
ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
உள்ளம் அதால் நேசித்தாய்
உனைப் பிரிந்து வாடுகின்றார்
ஓலம் அது கேட்கலையா    !

 

வள்ளுவத்தை  வாழ்வு  எல்லாம்
மனம் முழுக்க நிறைத்தாயே
வள்ளுவத்தை பலர் அறிய
வரைந்தாய் நீ ஓவியத்தை
வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
தெள்ளு தமிழ் அறிவுடையாய்
தேம்பி நின்று அழுகின்றோம் !

வெள்ளித்திரை  உன்  வரவால்
வீறு  நடை  போட்டதன்றோ
அள்ளிவந்த உன் தமிழை
ஆர்வமுடன் பலர்  ரசித்தார்
எதுகை மோனைத் தமிழாலே
எல்லோரும் உனைப் பார்த்தார்
எல்லோரும் ஏங்கி நிற்க
எங்குதான் சென்று விட்டீர்    !

சட்ட   சபை    வரலாற்றி
சாதனைகள் பல படைத்தாய்
திட்டம் இட்டுச் செயலாற்றி
தீரனாய் உயர்ந்து நின்றாய்
கட்டழகு மீசை உடன்
கறுப்பு நிறக் கண்ணாடி
கலைஞர் அதை அடையாளம்
காணாமல் போன தெங்கே  !

மு.க  எனும்  எழுத்தை
முணு முணுக்கும் மக்களெலாம்
முத்தமிழின் சொத்து என
மு.க வை மதிக்கின்றார்
மு.க. வின் துணிச்சலுக்கு
மு.க தான் சமமாகும்
மு.க வை  காணாமக்கள்
மூச் சொழிந்து நிற்கின்றார் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R