1. மறந்த கதை

தம்பாதலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.

ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.

மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்
நாசியத்தை மனச்சட்டியில் வைத்து
எரிக்கும் அயலவன்
முறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து
சேனை படைக்கு
கவசம் தயாரிக்க தவமிருக்கின்றான்..

மத்திய கிழக்கில்
தொடங்கிய போர்கள்
மூன்றாம் உலக மாகாயுத்தத்திற்கான
அறிகுறியாக இருக்கலாமோ என
யூகிக்க சிரமப்பட்ட போதெல்லாம்
இல்லவே இல்லை
இவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்
நீட்சி தான் என
அறைந்து சொல்கின்றன
இரசாயன குண்டுகள்.

´அவுஸ்விட்ச்´ நாசி வதைமுகாம்
வரலாற்றின் முடிவல்ல,
அது சிரியாவில்
நடமாடும் முகாம்களாக மீளமைக்கப்படுகிறது.



2. ஐ போனில்´சுட்ட வடை

தம்பாகாற்றை கிழித்து
கிழிந்த சட்டை போட்ட
நெளிந்த சைக்கிள்
சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.

சைக்கிள் பாருக்குள்ளால்
அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக
மூச்சிரைக்கும் தலையும் உடலும்.

வறண்ட வாய்க்கால் மதகில்
படுத்தபடி
உச்சி வெய்யிலுக்கு புகை போடும்
உயர் தர மாணவனைக் கண்டு
வெறுங்காலை டயரில் தேய்த்து
எட்ட நின்று நிதானித்து சைக்கிள்
உருண்டு வந்து கேட்டது
" பொட்டலமா? போத்திலா?" .

எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து
`குடு´ பொட்டலம் வெளிவந்து
பணப்பொட்டலம் உள்ளேறிக் குந்தியது.

கொடுத்தும் வேண்டியும்
உயிர் பரிமாறும் காலம் இது.

கிழிந்த சட்டைக்கோ
ஐ போன் வேண்டக் கனவு,
தெளிந்த சட்டைக்கோ
ஐ போன் விட்டு
வெளி நாடு போகக்கனவு.

வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த
பெரிய வாத்தியார்
கண் காது மூச்சு எல்லாவற்றையும்
உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி
கரையால் ஒதுங்கிப் போனார்.

சந்தியில் பட்ட நால்வரிடம்
`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல
`ஊரோட மனச்சாட்சி´ என
சரணம் சொன்னது சாராய நாற்றம்.

ஓயாத தேசியம்
ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.
வறுமையின் இயலாமை
வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,

"கறையான் அரித்த தண்டவாளமும்
காண்பாயோ ?,
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?"

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R