1. தாந்தேவின் நரகத்தில் நான்

 தாந்தேவின் நரகத்தில் நான்அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி

(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )


2. மொழிபெயர்ப்புக் கவிதை: தீர்க்கதரிசியின் உணவு -

- மூலம்: குந்தர் கிராஸ்:  தமிழில்: வே.நி/சூர்யா -


வெட்டுக்கிளிகள் நமது நகரத்தை ஆக்கிரமித்திருந்த போது
மேலும் அருந்த கூடுதல் பால் நமது வீட்டுக்கு வந்து சேரவில்லை ,
செய்திதாள்கள் மூச்சு திணறி போயின
சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன, தீர்க்கதரிசிகள் சுதந்திரமாக்கப்பட்டனர்
தற்போது 3,800 தீர்க்கதரிசிகள் தெருக்களின் ஊடே ஊர்வலம் போகின்றனர்
அவர்களால் இழப்பின் பயமின்மையுடன் பேச முடியும்
மேலும் தங்களை துள்ளிக்குதிக்கக் கூடியதும்
சாம்பல் நிற உறையை உடையதுமான
நம்மால் ப்ளேக் என அழைக்கப்படுவதால் நிறைத்துக் கொள்கின்றனர்
யாரால் வேறெந்த பயனை இனி எதிர்பார்க்க முடியும்
விரைவில் மேலும் அருந்த பால் நமக்கு கிடைத்துவிடும்,
செய்திதாள்கள் மூச்சு விட தொடங்கிவிடும்
தீர்க்கதரிசிகள் சிறையில் அடைக்கப்படுவர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R