- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின  – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.

தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை ! சுவாசிக்கக் காற்றும் பசிபோக்க உணவும்
சுத்தமான இடமும் அத்தனையும் அவசியமே
சூழல்பற்றிப் பேசுகிறோம் சூழலைநாம் பார்ப்பதில்லை
சூழல்நிலை மாசுபடின் வாழ்வுநிலை என்னாகும் !

நகரமய மாக்கலினால் நம்சூழல் என்னாச்சு
நச்சுத்தன்மை சூழலினை தன்வசமாய் வைத்திருக்கு
பெருந்தெருக்கள் பேருந்து பெருமளவில் வந்தாச்சு
அருந்திநிற்கும் குடிநீரும் அசுத்தமுடன் கலந்தாச்சு !

மேல்நாட்டு வண்டியொடு கீழ்நாட்டு வண்டியுமாய்
பாதையிலே விடும்புகையால் பலநோய்கள் வருகிறது
கவனிப்பார் கவனிக்கா நிலையிவை இருந்துவிடின்
கண்டிப்பாய் கஷ்டகாலம் காலனென வந்துநிற்கும் !

இயற்கைவழி அத்தனையும் இலாபம்தரா எனவெண்ணி
செயற்கைவழி கையாண்டு சேர்க்கின்றார் பலநோய்கள்
விளைகின்ற பயிரனைத்தும் வேகமாய் வளர்ந்தாலும்
விரும்பியுண்ணும் யாவருக்கும் வில்லங்கம் விளைக்குதல்லோ !

தொழிற்சாலைக் கழிவுகளால் தூய்மையுடை நீர்நிலைகள்
அழுக்கேறி நிற்கையிலே அதைப்பருகும் மக்கள்தமை
கணப்பொழுதும் நினையாமல் காசையெண்ணும் கயமையெனும்
குணம்மாறி நின்றுவிடின் கொண்டிடுமே தூய்மையங்கு !

மரம்வெட்ட நினைக்கின்றார் மரம்வளர்க்க  வாருங்கள்
நிலம்காக்க நினைக்கின்றார் செயற்கைமுறை தவிருங்கள்
உரமான வாழ்வினுக்காய் உள்ளமதைத் திருப்புங்கள்
தரமான நற்சூழல் தானமைக்க வந்திடுங்கள் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R