மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 3) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

அத்தியாயம் 3: மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு: வடிகட்டலும் விசுவாசமும் (The Translation of Translation: Filtered Aesthetics)
முதல் இரண்டு அத்தியாயங்கள் தர்வீஷின் கவிதை உலகிலுள்ள அரசியல் மற்றும் அழகியல் அடுக்குகளைத் தேடிக் கண்டறிந்தன என்றால், இந்த மூன்றாம் அத்தியாயம் நமது ஒட்டுமொத்த விமரிசன ஆய்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையப் போகிறது.
ஏனெனில், இங்கு நாம் கவிஞரைத் தாண்டி, மொழிபெயர்ப்பாளரான பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் உழைப்பையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும், 'மொழிபெயர்ப்பின் அரசியல் மற்றும் ஒழுக்கவியல்' கோட்பாடுகளின் பின்னணியில் சர்வதேசத் தரத்தில் அலசப் போகிறோம்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது முன்னுரையில் மிகவும் நேர்மையாகவும், அறிவுஜீவிக்குரிய ஒழுக்கத்தோடும் ஒரு பிரதான உண்மையை ஒப்புக்கொள்கிறார்:
"நான் அறிந்தவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தர்வீஷின் கவிதைகள் எவையுமே அரபு மூலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல... ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகவே தர்வீஷும் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவ்வகையில் நமது மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகள் தான்."
கோட்பாட்டுத் தளத்தில் இதனை 'இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு' (Indirect or Secondary Translation) என்று அழைப்பார்கள். புகழ்பெற்ற ஜெர்மன் மெய்யியலாளரும் கோட்பாட்டாளருமான வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) தனது The Task of the Translator (மொழிபெயர்ப்பாளனின் பணி) என்ற புகழ்பெற்ற கட்டுரையில், மொழிபெயர்ப்பு என்பது மூலப் பிரதியின் 'மறுவாழ்வு' (Afterlife) என்று குறிப்பிடுவார். மூலப்பிரதி தன் உடலை (சொந்த மொழியை) இழந்து, வேறொரு மொழியில் ஆன்மாவாக மறுபிறவி எடுக்கிறது.


கனடா ஒன்ராறியோவில் வோன் பகுதியில் உள்ள சினிப்ளெக்ஸ் திரையரங்கில் ‘தி ஒடிஸி’ (The Odyssey’) முதல் நாள் முதல்காட்சி பார்ப்தற்கு எனது வாசகர் வட்ட நண்பர் ஒருவர் அழைத்திருந்ததால், அந்தப் படத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் காட்சிக்கான சீட்டுக்கள் விற்பனையாகி முடிந்திருந்தன. அவரும் கனடிய தமிழ் திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர். அவருக்காக அவர் தயாரித்த படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருக்கின்றேன். இப்படியான பிரபலமான பிரமாண்டமான படங்கள் வெளிவரும் போது சென்று பார்ப்பது வழக்கம். பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படம் பார்ப்பேன், ஆனால் இம்முறை முதல் நாளே பார்க்க (17-7-2026) அவர் மூலம் சந்தர்பம் கிடைத்ததால் சென்று பார்த்தேன். பல்லின மக்களாலும் திரையரங்கம் நிறைந்து இருந்தது. படம் முடிந்தபின் அவர்களில் சிலருடன் இந்தத் திரைப்படம் பற்றி உரையாடவும் முடிந்தது.
1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த உலகத்தை தங்கள் கண்களால் காண்பதை உண்மை தோற்றம் என்று நம்பினார்கள். காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது வேறு, அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால், மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இப்படி, பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக் கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.
“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக் கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.
* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.




அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









