1

பேராசிரியர் நுஃமான் அவர்கள்,, மஹாகவி குறித்து 1984இல் எழுதிய,, தனது அறிமுகத்தில்,, அவரது உள்ளடுக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும்,, போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21

இறுதியில் குறிப்பார்:

“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம்

எடுத்துக்காட்ட

முடியும்… ஆயின் அவை புறநடைகளே.

புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக்

கொண்டு ஒரு

கவிஞனை நாம் மதிப்பீடு

வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும்

முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய

ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்

கொண்Nடுன்”;. ப-45

மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.


“புறநடைகளை நாம் ஒதுக்கி விடுவும்

முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும்

விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.

அதாவது,, ஏன் இப்படி,, ஒரே வீச்சில்,, „ஒதுக்கி விடுவும் முடியாது‟ என்று கூறும் அதே கணத்தில் „ஒதுக்கியும்
விடு;Nடுன்‟ என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.

ஆனால்,, சற்று நிதானித்துப் பார்க்கும் போது,, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது,, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடுயம்.

இருந்தும்,, மேற்படி “புறநடையை ஒதுக்கிவிடும்” அணுகுமுறைக்கு நேரெதிராக திரு. முருகையன் அவர்கள் மஹாகவி பொறுத்து எழுதியுள்ள “மஹாகவியின் சிறு நாடகங்கள்” என்ற தனது அறிமுகக் குறிப்பைப் பின்வருமாறு நிறைவு செய்வதும் அவதானிக்கத்தக்கதே:

“மஹாகவி எனும் கவிஞனின் இயல்பான வளர்ச்சியின் இன்றியமையாத ஓர் அங்கமாக அவரின் சிறு நாடகங்களும் அமைந்து விடுகின்றன என்பதில் ஐயமில்லை”ப-120

(முருகையன்,, சிறுநாடகங்கள் பொறுத்தே குறிப்பிட்டிருப்பினும்,, 'ஒதுக்குவது' என்ற ஒரு கேள்வியின் பின்னணியில்,, சிறுநாடகம்,, பா நாடகம்,, காவியங்கள்,, தனிப்பாடல்கள் - அவற்றின் உள்ளடக்கங்கள் - உருவங்கள் - இத்தியாதி - இவை அனைத்தும்,,
ஏதோ ஒரு வகையில் கைக்கோர்த்து விடு செய்யும் என்பதும்,, அஃது,, கவிஞனின் ஆளுமையில் இருந்து பிரித்தெடுக்க முடியாத
சங்கதிதான் என்பதும் மறுதலிக்க முடியாதபடி புலனாகிவிடும்).

அதாவது,, மஹாகவியின் குறித்த சில கவிதைகளை,, ஒருவர் “புறநடை”,, “தேவையற்றது” என்று கருதத் துணிகையில் மற்றவரோ அவை “இன்றியமையாத அங்கம்” தான் என்று கூற முனைவது அவரவர் பார்வை வித்தியாசங்களை எடுத்துரைப்பதாக உள்ளது.


இருந்தும்,, இத்தகைய,, விமர்சகர்களுக்கிடையிலான முரண்பட்ட

நிலைமையினை சம்பந்தப்பட்ட

கவிஞன்

மாத்திரமே தோற்றுவிப்பவனாக இருக்கின்றானா அல்லது சம்பந்தப்பட்ட விமர்சகர்களுக்கிடையே
முகிழ்க்ககூடிய வேறுபட்டதான கருத்துநிலைகளும்,, இப்பார்வை வித்தியாசங்களுக்கான ஊக்குவிப்பு காரணிகளாக அமைந்து போகின்றனவா அல்லது இவை இரண்டு காரணிகளும் ஏதோ ஒரு வகையாக சம்பந்தமுற்ற நிலைமையில் இம்முரண் காணக்கிடக்கின்றதா என்பதுவும் கூட நிதானித்து நோக்கத்தக்க ஒன்றேயாகும்.

மஹாகவியின் கவிதைகளின் உள்ளடக்கம் அல்லது அவரது கவிதை வெளிப்பாடு முறைமையானது.

முக்கியமாக அன்றாட

வாழ்க்கை அல்லது அன்றாட

வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்பதனை சிக்கென

பற்றிப் பிடித்துக் கொண்டுதாகவும்,, „பேச்சோசையை‟ அதன் முதன்மை வெளிப்பாடுhகக் கொண்டு

இயங்குவதாகவும்,,

கடுபு; ல

காடு;சியை

கடுடு;

மைப்பதாகவும் விபரிக்கப்பட்ட வருகின்றது.

இத்தகைய ஒரு அடித்தளத்திலிருந்தே,, ஓர் சமூகத்தின் ஆசாரங்களை அவர் எதிர்ப்பதும்,,

சமத்துவத்தையும் மானுடு

நேயத்தையும் போற்றுவதும்

நடுந்தேறுவதாகக் கூறப்படுகின்றது (அல்லது

கடுடி; யெழுப்பப்படுகின்றது). அதாவது,, மஹாகவியின் முக்கியத்துவம் ஆசாரங்களை எதிர்;ப்பதிலும்,,
சமத்துவத்தை நாடுவதிலும்,, மானுடு நேசத்தை வழிமொழிவதிலும் உள்ளடுங்குகின்றது என்பதனை விடு
அவர் அன்றாடு நிகழ்ச்சி அனுபவத்தைத் தமது கவிதையில் சித்திரிப்பதில் வெற்றி கணடுhர் ;. அதன்

வாயிலாகப் பேச்சோசையை அல்லது ஓர் விவரண

நடையை

சென்றடைந்தார் என்பதிலேயே அவரது

முக்கியத்துவம் அடுங்குவதாக கூறும் போக்கு இன்று தலையெடுக்கின்றது.

இத்தகைய ஒரு பயணத்தின் போதே,, மஹாகவி,, பாரதியையும் விஞ்சும் ஒரு கவிஞனாக,, தனது

பேச்சோசை மூலமாகவும்,, தன் விவரண

நடையின் மூலமாகவும்

காடு;சி

தருவதாக பேராசிரியர்

நுஃமானாலும் திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்களாலும் ஒருங்கு சேர விதந்துரைக்கப்படுகின்றது.

 

2

திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கூறுவார்:

“இந்த அன்றாடு நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிவுதிறனும் கண்டுப்பிடிப்பாற்றலும் (வாய்க்கப்) பெற்றது”.ப-58

இக்கூற்றானது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததே.

ஏனெனில்,, இந்நகர்வே மேலே கூறியது போன்று,, அடிப்படையில்,,மஹாகவி அவர்கள் பாரதியை தாண்டுவதற்கும் கால்கோளாகின்றது என்பது திரு. சண்முகம் சிவலிங்கத்தின் கருத்தாகின்றது.
திரு. சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:


“தமிழ் நாடு;டில் விருத்தப்பாவில் இருந்து வசனக் கவிதைக்கு வந்து,, அதிலிருந்து அன்றாடு

வாழ்க்கையை நோக்கி திரும்பாமல்

அதிலிருந்து (அன்றாடு வாழ்விலிருந்து) பெற்ற கருத்துக்களை நோக்கி திரும்பி,, கருத்து தளத்தில் தமது கவிதையை இயக்க

(தமிழ்நாட்ட

கவிஞர்) முற்பட்டனர்”


“இது அவர்களை,, தனிமையும் விரக்தியும்

கொண்டு

ஒரு „கருத்துமுதல் வாதத்திற்குள்‟ ஆழ்த்தி விட்டது.”

மேலும் கூறுவார் சண்முகம் சிவலிங்கம்:

“(ஆனால்) கருத்துமுதல் வாதத்துக்குள் அகப்படுhமல் யதார்த்த நிகழ்ச்சி அனுபவங்களுக்குள் வந்து சேர்ந்தார் மஹாகவி”ப-58 மேற்படி கூற்றுக்களில் முக்கியத்துவப்படும் மூன்று விடுயங்கள் வருமாறு:

i. ஒன்று,,

அன்றாடு

நிகழ்ச்சி அனுபவம் என்பது மஹாகவியின் தலையாய கவிதை

பரப்பாகின்றது என்பது.
ii. இரண்டுhவது,, இவை யதார்த்த நிகழ்ச்சி என்று வரையறை செய்யப்படுவது.
iii. மூன்றாவது,, இத்தகைய அடிப்படையில் பிறப்பெடுக்கா கவிதைகள் கருத்துமுதல்வாத கவிதைகள் என வகைப்படுத்தப்படுவது. (கருத்து தளங்களில் இயங்குபவை.)

குமரன் கவிதைகள் எனக் கூறப்பட்டவற்றை எடுத்துக்கொண்டுhலும் கூடு,, அவை பெருமளவில் நேரடி
அன்றாடு நிகழ்ச்சியனுபவத்தையோ அல்லது பேச்சோசையையோ வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவு.
இருந்தும் இக்காரணத்தினாலேயே இவை கருத்துமுதல் வாத கவிதைகள் என வகைப்படுத்தப்படு முடியுமா என்பது கேள்வியாகின்றது.

அதாவது,, அவை அன்றாடு வாழ்க்கை நிகழ்ச்சியில் இருந்து நேரடியாக முகிழ்க்காமல்,, அவ்வாழ்க்கை
நிகழ்ச்சிகள் ஏற்படுத்தித் தந்த கருத்து கோலங்களிலிருந்தே பிறப்பெடுப்பதாய் உள்ளன என்பதாலேயே
இவற்றை இங்கே நாம்,, கருத்துமுதல் வாத கவிதைகள் எனப் பொருள் கொள்ளலாமா என்பதே கேள்வி.

இருந்தும்,, கருத்துதளங்களில் இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் கருத்துமுதல்வாத கவிதைகள் என்பதுமில்லை – அதுபோல யதார்த்த நிகழ்வுகளில் இருந்து இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் பொருள்முதல்வாத கவிதைகள் என்பதும் இல்லை என்பதெல்லாம் தெரிந்த விடுயங்களே.


உதாரணமாக,, இன்குலாப்பின் கவிதைகள் சில,, கூறுமாப்போல்,,

அன்றாடு

வாழ்க்கை நிகழ்ச்சிகளில்

இருந்தும்,, பேச்சோசை கொண்டும் உருப்பெற்றிருக்கவில்லை என்பதனால் மாத்திரம் அவற்றை கருத்துமுதல்வாத கவிதைகள் என எப்படி வகைப்படுத்தப்படு முடியாதோ அப்படியே,, மேற்படி தர்க்கத்தின் அடிப்படையும் அமைகின்றது. மொத்தத்தில் கருத்துமுதல் வாதத்தின் தோற்றுகைக்கான வேர்கள் எப்படி வேறுவகைப்பட்டவையாக இருக்கின்றனவோ அதேப்போன்று பொருள்முதல் வாதத்திற்கான தோற்றுவாய்களும் வேறுபட்டவையே.

சுருங்க கூறின்,, வரலாற்றில்,, கருத்து முதல்வாதம் என்பதும் பொருள்முதல் வாதம் என்பதும் மிக தெளிவாகவே வரையறை செய்யப்பட்ட வந்ததாய் இருக்கின்றது. இவற்றை குழப்பிக் கொள்வது பொருந்தாதது.

இவை அனைத்தையும் ஒன்று கூடு;டிப் பார்க்குமிடுத்து,, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டம் ஒரு வகை

தெளிவின்மையும் ஒருவிதமான தள்ளாட்டமும் மிகத் தெளிவாகவே
இருக்கின்றது.

அடையாளம் காணக்கூடியதாக

இருந்தபோதும்,, பேச்சோசைக்கும் (அல்லது அன்றாடு நிகழ்ச்சி அனுபவம் என்பதற்கும்) கருத்துமுதல்
வாதத்திற்குமான மேற்படி தொடுர்பாடுல்களை ஒரு கணம் ஒதுக்கிவிட்ட,, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டம்,, யதார்த்தம் பற்றிய புரிதல்களை தெளிவுபடுத்திக் கொள்வது,, விடுயங்களை மேலும் சரியாக வகைப்படுத்திக் கொள்ள உதவுவதாக அமைதல் கூடும்.

3

மஹாகவியின் எழுத்துக்களில் மேலோங்கும் „யதார்த்த பண்பு‟ என்ற விடுயம் பொதுவில் சண்முகம்
சிவலிங்கத்தாலும் பேராசிரியர் நுஃமானாலும் மிக அழுத்தமாகவே பல்வேறு இடுங்களில் பதியப்பட்டள்ளது.

நுஃமான் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

“மஹாகவி,, புனைகதைக்குரிய யதார்த்தத்தைக் கவிதைக்குள் கொண்டு வந்தவர். அவரது „யதார்த்தம்‟ கருத்து ரீதியானது

அல்ல

காடு;சி ரீதியானது”.ப-17

“கிராமிய வாழ்வை „யதார்த்தப10ர்வமாக‟ சித்தரிக்கும் இப்படைப்புகள் (மஹாகவியின் படைப்புகள்) தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன” ப-10


“மஹாகவியின் கிராமிய சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட

நிலைகளை காண முடியும்… ஆரம்ப காலத்தில்

காணப்பட்ட

கற்பனாவாதமும் (சுழஅயவெiஉளைஅ) பிற்காலத்தில் அவரிடும் வலுப்பெற்ற „யதார்த்தவாதமும்‟ (சுநயடளைஅ) இந்த

வேறுபாட்டக்குக் காரணம்…”


மேற்பட்ட

கூற்றுகளில் „யதார்த்தப10ர்வமான சித்தரிப்பு‟ என்பதும் „யதார்த்தவாத பாற்பட்டது‟ என கூறவரும்

போக்குகளும் சகஜமாக மீள மீள இடும்பெறுவது அவதானிக்கத்தக்கதே.

இதேபோன்று சண்முகம் சிவலிங்கம் அவர்களும் மஹாகவியை ஓர் யதார்த்தவாதியாக பின்வரும் வழிகளில் காணுகின்றார்:


“மஹாகவி போல்,, தமிழ் நாடு;டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்றாடு

வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்ற

பௌதீக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்படையை வேறாக இருந்திருக்கும்…” ப-58

நோக்கி திரும்பியிருந்தால் இன்று தமிழ்நாடு;டின் கவிதை சரித்திரம்


“மஹாகவி…. கருத்து முதல்நிலைக்கு உடு;படுhமல்,, கால்குத்தி நின்றார்…” ப-58

திடுமான,, மெய்மையான,, யதார்த்தமான அன்றாடு

நிகழ்ச்சி அனுபவங்களில்

“மஹாகவி தமிழ் கவிதைக்கு உருவாக்கிய கலையம்சம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என்கிறோம்…” ப-178


“மஹாகவியின்,,„ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்‟ யதார்த்த நெறியையும்,, கொண்டுள்ளது”.

இடையீடு

இட்ட

அமைப்பு முறையையும்

சுருக்கமாகக் கூறினால்,, பேராசிரியர் நுஃமான் - திரு.சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரது பார்வையிலும் மஹாகவி ஓர் யதார்த்தகநெறியை பின்பற்றிய கவிஞன் எனக் கணிப்பிடுவது தெளிவாகின்றது.


இக்கூற்றுக்களே எம்மை யதார்த்தநெறி பொறுத்த வரைமுறை சார்ந்த கேள்விகளுக்கு அமைந்து விடுகின்றது.

 

4

இட்ட செல்வதாய்

இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும்,, கைலாசபதியாலும்,,
கார்க்கியாலும்,, லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டக்காட்டப்படு;Nடு வந்துள்ளது.

கற்பனாலங்காரத்திற்கும் (சுழஅயவiஉளைஅ),, இயற்பண்பு வாதத்திற்கும் (யேவரசயடளைஅ) யதார்த்த வாதத்திற்கும்

(சுநயடளைஅ)

இடையே

உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படும் பிடித்துக்

காட்டப்பட்டள்ளன.

டுhல்ஸ்டுhய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:


“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டம் அவரது…”

சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம்

“டுhல்ஸ்டுhயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு,, ர~;ய தொழிலாளி வர்க்கமானது,, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும்

அதிகமாகக்

கூடு;டிக்

கொள்ளும்…” ப-31 63

இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:


“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும்

கடுமை ப10ண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின்

பிரதான சுழிப்புகளையும்,,

கூடுவே,, அதன் அற்ப

ஓட்டங்களையும்,, அன்றாடு

வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன்

வீறுகளையும்,, எழுச்சிகளையும்,, வீழ்ச்சிகளையும்,, செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும்,, அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…” p-


“கூடுவே,, குறித்த ஓர் நெறிமுறையானது,, அஃது அவனது தனிப்பட்ட

பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம்

இழந்தும் போயிருப்பினும்,, அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு

துண்டுங்களா (குசயபஅநவெள) அல்லது ஒரு புதிய

உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடுமை ப10ண்டுள்ளான்” p-

கார்க்கியினது மேற்படி கூற்றில் யதார்த்தவாதத்தின் அடிப்படை வரையறுக்கப்படுகின்றன என்பது தெளிவு.

பண்புகள் எப்படியாய்


இறுதிகணிப்பில் யதார்த்தவாதம் என்பது,,

இடும்பெறும்

ஓட்டங்களில்,, நாளைய உலகின் நிர்மாணிப்புக்கான

ஓட்டத்தை அல்லது அதற்கான முளைகளைக் கண்டுணர்ந்து தேர்ந்து கொள்வது என்பதனை தனது முன்நிபந்தனையாகக் கொள்வதாய் அமைந்து போகின்றது.


இதுவே,, மறுபுறத்தில்,, இயற்பண்பையும் (யேவரசயடளைஅ),, யதார்த்தவாதத்தையும் (சுநயடளைஅ) வேறுபிரித்து எல்லை கோடுhகவுமாகின்றது.


[தொடரும்]
**************************************************

5

காட்டம்

இருந்தும் பேராசிரியர் நுஃமான் அவர்களும்,, திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்களும் இப்படியான ஒரு

அணுகுமுறையில் இருந்து அந்நியப்பட்ட,, மஹாகவி அவர்களின் பேச்சோசையையும்

அன்றாடு

நிகழ்ச்சி

அனுபவத்தையையும்,, அதனை அவர் படும்பிடித்த நேர்த்தியையும் மாத்திரமே முதன்மைபடுத்தி,, அவரை

ஒரு யதார்த்தவாதி என வரையறை செய்து அமைந்து போகின்றது எனலாம்.

அடையாளப்படுத்த முனைவதிலேயே,, சிக்கலின் தோற்றுவாய்

இவற்றை,, சற்று நின்று நிதானித்து நோக்கும்போது,, „யதார்த்தப10ர்வமாய் சித்தரித்தல்‟ என்பதே
„யதார்த்தவாதமாகும்‟ அல்லது „யதார்த்தவாத நெறியாகும்‟ என வரையறை செய்;து குழப்பி வைத்துக் கொள்ளும் தப்பான போக்கு மேலெழுவதைக் காணலாம்.
இவை அனைத்தும் இரண்டு கேள்விகளை முன்னிலை நோக்கி நகர்த்துகின்றன:

1. யதார்த்தப10ர்வமான வாழ்க்கையை இவர்கள் சித்தரித்தார்கள் எனும் போது,, யாருடைய வாழ்க்கையை இவர்கள் யதார்த்தப10ர்வமாகச் சித்தரித்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
2. மேலும்,, யதார்த்தப10ர்வமான சித்தரிப்பு என்பதே யதார்த்தவாதம் என்பதாகுமா என்ற கேள்வியும் எழுகின்றது.


அதாவது,, அன்றாடு

வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவத்தைக் „கறாராகப்‟ படும்பிடித்ததின் காரணமாக இவரை

(மஹாகவியை) ஓர் யதார்த்த வாதியாக வரையறை செய்து கொள்வதற்கு முன்,, இவர் படும் பிடித்ததாய்க்

கூறப்படும்

அன்றாடு

வாழ்க்கை நிகழ்ச்சியானது மொத்தத்தில்

யாருடைய அன்றாடு

வாழ்க்கை நிகழ்ச்சி

என்பது முதல் கேள்வியாகின்றது.

திரு. சண்முகம் சிவலிங்கம் போன்றோரால்,, பெரிதும் உவந்து போற்றப்படும்,, இவரது படைப்புகளில் ஒன்றாகிய,, „ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்‟ பிறப்பு தொடுக்கம் இறப்பு வரையிலான ஒரு மத்தியதர வர்க்கத்து மனிதனின் ஸ்தீரமற்ற நிலைமையினை சித்திரித்து „உயிர் ஒரு நெடுந்தொடுர் பரிணாமம்‟ என்பதனை உணர்த்துவதாய் உள்ளது எனக் கூறப்படுகின்றது. ப-158 - 176

“இளமை,, வாலிபம்,, ஆண்-பெண் உறவு,, முதுமை முதலியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாக காணும் முயற்சியே அது…”

“வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போக,, அதனை ஒரு உயிர்ப்பு இயக்கமாக காணும் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அதனை குறிப்பிடுலாம்”என மேலும் விஸ்தரிப்பார் திரு. சண்முகம் சிவலிங்கம்.


இங்கே,, மேலே குறித்தவாறு,, „யாருடைய

வாழ்விது‟ எனும் கேள்வி பிரதானமானதாய் இருக்க,, மறுபுறம்,,

“வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போவதாய்” பார்ப்பதில் உள்ள “யதார்த்த நெறி”
யாதாயிருக்கக் கூடும் எனும் சிக்;கல் மிக்க கேள்வி இங்கே உருவாவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஏனெனில் சகல முரண்பாடுகளும் உள்ளடுங்கி போன ஒரு நிலையில்,, யதார்த்த நெறி கோரும்
„முரண்களின் தேர்வு‟ என்பது அவசியமற்ற ஒன்றாகின்றது. சுருங்கக் கூறினால்,, கார்க்கியும் லெனினும் டுhல்ஸ்டுhயும் கைக்கொண்டு யதார்த்த வாதத்திற்கும் மஹாகவி பின்பற்றிய யதார்த்த நெறிக்கும் எவ்வித ஒட்டறவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

„சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போன நிலையில்‟ „வாழ்வை ஒரு உயிர்ப்பு இயக்கமாக‟ காணும் முயற்சி ஒன்றே இங்கே விதந்துரைக்கப்படுகின்றது.
சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:

“ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கை சரித்திரம்” கதாநாயகனாகிய முத்தையனுடைய “வாழ்க்கை” ஓர் உழல்வின் அச்சிலே சுழல்வதாக தெரிகின்றது(ஓர் கட்டத்தில்). நெடுக அவனுடைய வாழ்க்கையிலே ஓர் அர்த்தமற்ற தன்மையும்,, தனிமையும்,,

ஒதுங்கியலும் நிச்சயமின்மையும் விரவி சொல்லப்பட்டள்ளது… ப. -141

கிடுக்கக் காண்கின்றோம்… அவனது வாழ்க்கையில் தென்பட்ட

வெறுமை… பலபடு


இப்படிப்பட்ட

ஓர் சித்தரிப்பிலேயே,, யதார்த்த நெறி கோரக்கூடிய „வாழ்வின் எழுச்சிகளையோ‟ அல்லது „புதிய

உலகின் முளைகளின் தேடுகையோ‟ அர்த்தமிக்க முயற்சியாக இருக்க போவதில்லை என்பது தெளிவு. அதாவது,, யதார்த்த நெறி கோரும் விதிகளுக்கும் வெறுமையையும் தனிமையையும் ஒதுங்கியலையும் முன்வைக்கும் மேற்படி கவிதைக்கும் இடையில் எந்த ஒரு ஒட்டறவும்,, உறவு முறையும் இல்லாது போய் விடுகின்றது.

அப்படியென்றால் இக்கவிதையின் முக்கியத்துவம்தான் யாது?