- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


* (கிராஞ்சி மீனவர்களின் போராட்டத்துக்குச் சமர்ப்பணம்)

மனசுக்குள்ள மனசுக்குள்ள
குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா
தாத்தன் அப்பன் வேட்டை கொண்ட
கதைகள் சொல்லும் கடலம்மா
விதைத்துக் கிடக்கும் துயரை எல்லாம்
அழித்து எழுதும் கடலம்மா

ஓ... கடலம்மா  
இராவணன் மீசை நடனம் புரிந்த
மணல் மேடெல்லாம் போனதெங்கே
கெளதாரி மடியில் நாவல் பாலை
மருந்துக்கும் இல்லை ஆனதிங்கே
நாவட்டப்பாறை தாமரை காத்தான்
எதுவுமே இங்கு காணவில்லை
என்னடி என்னம்மா
மவுனம் என்ன சொல்லம்மா
மண்ணடி வேரில் எல்லாம்
நெருப்பைக் கொட்டியதாரம்மா

ஏழ்கடல் ஆடும் தீடையின் மேனி
கிழிபடும் கோலம் யார் அறிவார்
சூழ்கலி நீங்க பாடிய காலம்
ஆடிய கோலம் பொய்தானே
ஆழியில் வாழ்வு இருந்தது என்று
இனிவரும் சந்ததி அறிவாரோ
என்னடி என்னம்மா
மவுனம் என்ன சொல்லம்மா
மண்ணடி வேரில் எல்லாம்
நெருப்பைக் கொட்டியதாரம்மா

(கிராஞ்சி மீனவர்களின் போராட்டத்துக்கு சமர்ப்பணம்)

காணொளியில் கேட்க:  

Lyrics : Thamayanthi Simon
Singer : Devarajah Rameshan
Violin : Athisaiyan Suresh
Bass Gitar  : Dolly ( Shiraz Amit )
Music : Mahesan Vicknakumar

https://www.facebook.com/1319608745/videos/3116655035276157

நன்றி;  எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) முகநூல் பக்கம்.