- * முகநூலில் இக்கட்டுரைக்கான எதிர்வினை -
- வாசகர் கடிதங்கள் -
படகர்கள் திப்பு சுல்தான் காலத்தில் நீலகிரிக்கு வந்தனர் என்பது தவறான பதிவு. ராஜம் கிருஷ்ணன் அவர்களே தவறாக பதிந்துள்ளார். அவரே முழு ஆய்வின்றி எழுதியுள்ளார். படகர்கள் நீலகிரியில் இருந்ததை ஆய்வாளர் பினிசோ அவர்கள் 1602 லியே அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறான பதிவு ஐயா. நிச்சயம் இந்தத் தகவல் திருத்தபட வேண்டும்.... படகர்கள் நீலகிரியின் பூர்வகுடிகள் ஐயா. இந்த நாவலில் இருப்பதாக இந்தக் கட்டுரையின் ஆய்வாளர் சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் முடிந்த முடிபாக சொல்வது தவறு.
 
படகர்கள் உலக பூர்வகுடிகள் என்பதற்கு யுனெஸ்கோவின் சர்வதேச அங்கீகாரம்:
 
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -