நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க காலத்தில் மன்னர் ஆட்சி நடந்தேறிக் கொண்டிருந்தது. அவர்கள் மக்களைச் சீரும் சிறப்புமாகப் பேணிக்காத்து நாட்டை அரசாண்டு வந்தனர். நாடு செழித்தது, வளம் பெருகியது, அறம் நாட்டில் நிலைத்தது, மக்கள் இன்புற்றிருந்தனர். நாட்டு மக்கள் மன்னன் புகழ் பாடினர். இன்னும் படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் செங்கோலையுடைய அரசர்களுக்கு உரியவைகளாக்கினார் தொல்காப்பியர்.

'படையுங் கொடியுங் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய' – (தொல். பொருள். 616)


மேலும; 'நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!' – (மோசி கீரனார்- புறம் 186) என்ற பாடலும் ஆதாரம் காட்ட எழுந்தது. மன்னன் நாட்டுக்கும், மக்களுக்கும், தனக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களை உருவாக்கிச் செங்கோலை நிலைநாட்டினான். இனி, மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை நிலைகள் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
கணவனோடு சேர்ந்து இறந்தாள் மனைவி. இவ்விறப்பைக் கண்டவர்கள் மற்றையோருக்கு எடுத்துக் கூறினர். இவ்வாறு கணவனும், மனைவியும் சேர்ந்து இறந்ததை 'மூதானந்தம்' என்று கூறுவர்.  கொடிய பாலை நிலத்தில் தன் கணவனை இழந்து தனித்து நின்று வருந்திய தலைவியின் நிலையை 'முதுபாலை' என்றழைப்பர். தன் ஆருயிர் மனைவியை இழந்து தனித்து நின்று துயர்படும் கணவன் நிலையைத் 'தபுதார' எனக் கூறுவர். காதலன் இறந்த பொழுது அவன் மனைவி உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் மேற்கொள்வதைத் 'தாபத' நிலை என்றுரைப்பர். இன்னும் காதலைனை இழந்த மனைவி அவன் சிதையில் விழுந்து இறந்துபட முன்வந்த பொழுது அவளைத் தடுத்து நின்றவர்களோடு மாறுபட்டுக் கூறியதைப் 'பாலை நிலை' என்பர்.

 

'.... கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந் தமும்            
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும் - (பொருள். 77-22-25)
.. .. காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும். ..' – (பொருள். 77- 28-31)


1.    மூதானந்தம்    -  கணவன் இறந்த பொழுதே மனைவியும் உயிர் நீத்தல்.
ஒன்றுபட்ட அன்பினால் ஏற்பட்ட சாக்காடு.

2.    பாலை நிலை   -  கணவன் சிதையில் ஏறி மனைவியும் எரியுண்டு இறத்தல்.
உடன்கட்டையேறும் வழக்கம்.
3.    தாபத நிலை    - உடன்கட்டையேறாது, பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து,               
அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக்  கைம்மை                                                          
நோன்புற்று உடலை வருத்தி வாழ்வர்.

4.    முதுபாலை     -   கணவனை இழந்து தனி நின்று புலம்பும் மனைவி.

5.    தபுதார நிலை   -  மனைவியை இழந்து தனித்து நின்று துயருறும் கணவன்.

இதில் முதல் இரு நிலைகளிலும் பெண்கள் தம் உயிரை மாய்த்தலையும், மூன்றாம் நிலையில் அவர்கள் கைம்மை பூண்டு தம்மை வருத்தி வாழ்வதையும், நாலாம் நிலையில் அவர்கள் தனித்திருந்து புலம்புவதையும், ஐந்தாம் நிலையில் மனைவியை இழந்து தனித்திருந்து துயருறும் கணவனையும் காண்கின்றோம்.

மகாபாரதம்
பாண்டு மன்னன் பெண்ணுடன் உறவு கொண்டால் அவன் இறந்துவிடுவான் என்ற சாபத்தை அறிந்திருந்தும் மாத்ரி என்ற அவன் இரண்டாவது மனைவி அவனுடன் உறவு கொண்ட பொழுது பாண்டு மன்னன் இறந்துவிட்டான். மாத்திரியும் பாலை நிலையில் நின்று உடன்கட்டையேறி மடிந்தாள். ஆனால் பாண்டு மன்னனின் குந்திதேவியான முதல் மனைவி தாபத நிலையில் நின்று கைம்மை பூண்டு தன் ஐந்து பிள்ளைகளான தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரை வளர்த்து வந்தாள்.

இராமாயணம்

இராமனுடன் நடந்த போரில் இலங்கை வேந்தன் இராவணன் மாண்டான். அவன் மனைவி மண்டோதரி மூதானந்தம் என்ற நிலையில் நின்று உடன் உயிர் நீத்தாள்.

அயோத்தி மன்னன் தசரதன் இறந்த பொழுது அவன் முத்தேவியர்களாகிய கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியவர்கள் மூதானந்தம், பாலை ஆகிய நிலைகளில் நின்று தம் உயிரைப் போக்காது அரசுடன் ஒட்டிக் கொண்டனர்.

இராமன் மறைந்திருந்து ஏவிய அம்பால் வாலி இறந்துபட்டான். இதை அறிந்த அவன் மனைவி தாரா அழுது புலம்பிப் பாலை நிலையில் நின்று உடன்கட்டையேற வந்தபொழுது அநுமன், இராமன் ஆகியோர் தாராவை உடன்கட்டையேற வேண்டாமென்று கேட்டுக்கொண்ட பொழுது அவள் அதை ஏற்றுத் தன் உயிரைப் போக்காதிருந்தாள்.

புறநானூறு

பெருங்கோப்பெண்டு என்பவர் பூதப்பாண்டியன் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போரில் மாண்டான். 'எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து' எனக் கூறிக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்பட்டாள். 'நின் கணவனுடன் நீயும் சென்று வருக! என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே! வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டு, பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்து, கைம்மை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம்!   ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம் என் கணவன் இறந்து பட்டனன். ஆதலால், எமக்கு அத்தீயே தாமரைக் குளத்து நீர்போல இன்பம் தருவதாகும்' என்று கூறிப் பாலை நிலையில் நின்று, சிதையிற் பாய்ந்து எரிந்து கருகி இறந்து விட்டாள் பெருங்கோப்பெண்டு.

'பல்சான் றீரே! புல்சான் றீரே!
செல்லெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்
புரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல் எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென  அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே!' (பாடல். 246)


தலைவன் தலைவியர் இளமையோடிருந்த முன் காலத்திலே அவர்களை அழகு செய்யும் தழையாக உதவியது சிறுவெள் ஆம்பல். இன்று அந்தத் தலைவன் இறந்து விட்டான். தலைவி தாபத நிலையில் நின்று கைம்மை நோன்பு புரிந்து வாடுகின்றாள். அவள் உண்ணும் காலமும் மாறித் துயரால் வாடுகின்றவளுக்கு, அந்த அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாக உதவுகின்றன.

'அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.' – (பாடல். 248)


தலைவனை இழந்து தனித்திருந்து தவிக்கின்றாள் ஒரு தலைவி. அவள் 'ஐயோ! என்று கத்தினால், புலி வந்து உன் உடலையும் இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்று பயப்படுகின்றேன். உன்னை அணைத்துத் தூக்கிக் செல்வோமென்றால், உன் விரிந்த மார்பினைத் தூக்கும் ஆற்றல் எனக்கில்லையே! உன்னை இப்படி ஆக்கியதே அந்தக் கூற்றம்! என்னைப் போலவே அதுவும் பெருந் துன்பம் அடைக! தலைவ! என் முன்கைபற்றி எழுந்து மெல்ல மெல்ல நடப்பாயாக! அந்த மலைநிழலை நோக்கி நாம் செல்வோம்.' என்று முதுபாலை நிலையில் நின்று துயருற்றுப் புலம்பினாள்.

'ஐயோ! எனின்யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு எடுக்கல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் - நடத்திசின் சிறிதே!' -  (பாடல். 255)

மன்னன் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பானின் மனைவி பெருங்கோப்பெண்டு மாண்டுவிட்டாள். கள்ளி வளர்ந்த காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின், அழற்பாயலிலே அவளைக் கிடத்தினான் சேரமான் மன்னன். அவளோடு தானும் உயிர் துறக்கவில்லையே என்று மனம் துடித்து உருகி ஊசலாடினான். அவனால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. பெண்கள் தம் கணவர் இறந்தவிடத்து அவன் சிதையிற் பாய்ந்து உயிர்விடும் தீர்மானத்தை உடன் எடுத்துவிடுவர். ஆனால் ஆண்கள் தம் மனைவியர் இறந்த நிலையிலும;, தம் உயிரைக் காத்து நிற்பர் என்பதும் தெளிவாகின்றது. இதைத் தபுதார நிலை என்பர்.

'யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள்,  மடந்தை,
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே!' – (245)


சிலப்பதிகாரம்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் அரசி கோப்பெருந்தேவியின் ஊடலால் கோவலன் மேல் சுமத்தப்பட்ட சிலும்பு திருடல் வழக்கைத் தீர ஆராயாது கோவலன் கள்வன் என்று தீர்ப்புக் கூறிக் கொல்லப்பட்டான். ஆனால் கோவலன் மனைவியான கண்ணகி உடன்கட்டையேற முன்வரவில்லை. கோவலன் காதல் மனைவி மாதவி தானும் உடன்கட்டையேறவில்லை.

ஆனால் கண்ணகி தன் ஒரு காற்சிலம்புடன் பாண்டிய மன்னன் அரண்மனை ஏகி, நீதி கேட்டு, தன் சிலம்பை உடைத்துக் காட்டி, கோவலன் கள்வனல்லன் என்று நிரூபித்துக் காட்ட, மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று கூறி விழுந்து உயிர் துறந்தான். மன்னன் உயிர் நீத்தான் என்பதை அறிந்த அரசி கோப்பெருந்தேவி மூதானந்தம் என்ற நிலையில் நின்று தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

'கோப்பெருந் தேவி, குலைந்தனள், நடுங்கிக்,
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று,

இணைஅடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி!' –(வழக்குரை காதை, 79-81)

கண்ணகி தன் கற்புத் தீயினால் மதுரை மாநகரை அழித்துச் சேரநாடு சென்று தெய்வமாகினாள். தமிழ் நாடெங்கும் அவள் பெயரால் பல கோயில்கள் எழுந்தன. மாதவி தாபத நிலையில் நின்று கைம்மை நோற்றுத் தவம் மேற்கொண்டாள்.

மணிமேகலை
மேற்கூறப்பட்ட மூதானந்தம், பாலை நிலை, தாபத நிலை ஆகிய மூன்று நிலைகளையும் மணிமேகலையிலும் பேசப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். கணவன் இறந்தபொழுது கற்புடை மனைவியின் துயரத்தீயானது மூண்டு, அனல் பெருகி, உள்ளத் துன்பம் அடக்கப்பெறாது உடன் உயிர் துறப்பதை மூதானந்தம் என்பர். அவ்வாறு இறவாராயின் குளிர்ப் பொய்கையில் நீராடுபவர்போலக் கணவன் ஈமத்தீயிற் புகுந்து உயிர் துறப்பர். இதைப் பாலை நிலை என்பர். அவ்வாறும் உயிர் துறவாராயின் தம் இறந்த காதலருடன் மறுமையில் சேர்ந்து வாழும்பொருட்டுக் கைம்மை நோன்புற்று உடலை வருத்துவர். இதைத் தாபத நிலை என்பர். உலகின் கற்புடைத் தமிழ்ப் பெண்டிர் இம்மூவகையில் அடங்குவர்.

'காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகா அர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று, உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து ...' – (ஊரலர் உரைத்த காதை 42-48) 

நிறைவுரை
இதுகாறும், தலைவன் இறந்தபொழுதே தலைவியும் உயிர் துறக்கும் 'மூதானந்தம்'  நிலை, மனைவியானவள் தன் கணவன் ஈமச்சிதையில் ஏறித் தானும் உடன்கட்டையேறும் 'பாலை' நிலை, கணவன் இறந்தபொழுது மனைவி உடன்கட்டையேறாது தவம் மேற்கொண்டு கைம்மை நோன்பு நோற்கும் 'தாபத' நிலை, கணவனை இழந்து தனித்து நின்று புலம்பும் மனைவியின் 'முதுபாலை'  நிலை,  மனைவியை இழந்து தனி நின்று துயருறும் கணவனின் 'தபுதார' நிலை ஆகியவை பற்றி, தொல்காப்பியம், மகாபாரதம், இராமாயணம், புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க இலக்கியங்களிற் பேசப்பட்டுள்ளதை விரிவுபடுத்திப் படித்தோம்.

நம் மகளிர்தான் மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை ஆகிய நிலைகளில் நின்று தம் கணவர்களை நினைந்து அவருக்காக இறந்து படுவதும், உடன்கட்டையேறுவதும், கைம்மை நோன்பு நோற்றுத் தம்மை வருத்தி வாழ்வதும், தனித்து நின்று புலம்பிக் கொள்வதும் ஆகிய நால்நிலைகளில் அவர்கள் படும் துன்பத்தை ஆண்கள் உணரவில்லையென்றே தோன்றுகிறது. இவர்கள் இவ்வண்ணம் வாடி மடியும் பொழுது, ஆண்கள் தம் மனைவியர் மாண்டவிடத்து தபுதார நிலையில் நின்று துயருறுவதோடு நின்றுவிடுகின்றனர்.

இவ்வண்ணம் மகளிர் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாண்டு மடிந்து கொண்டு வருவதை யாரும் கணக்கிலெடுக்காது, அதற்குரிய பரிகாரம் தேடாது, வாளாவிருந்தனரே என்பது விந்தைக்குரியதாகும். ஆனால் நாளடைவில் இம்முறைகளில் சற்றுச் சரிவு ஏற்பட்டு, அருகிய நிலைக்கு வந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இன்றும் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் கணவன் ஈமத்தீயில் புகுந்து உடன்கட்டையேறுவதையும் காண்கின்றோம்.

இனி, மகளிர் துயர் துடைக்க ஆண்கள்தான் முன்வந்து உதவ வேண்டும். வீணே மடிந்து போகும் மகளிர் வாழ வேண்டியவர்கள். அவர்களுக்கு இயற்கை வழி காட்டுங்கள். செயற்கை வழி ஒரு பலனும் தராது. ஆண் துணையை நம்பி வந்த பெண் வாழுமட்டும் வாழட்டும் நம்மைப்போல். ஆண்கள் ஆகிய நாம் மகளிர்க்கு உதவுகரம் கொடுப்போம். இருவர் வாழ்வியலையும் சிறப்புற்றோங்கச் செய்வோம் இவ்வுலகில். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here