கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

கே.எஸ்.சிவகுமாரனின் 'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்ப காலப்படைப்புகளை இங்கே வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukal/kss_writes.html


அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14.

 

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அறிஞர் அ.ந.கந்தசாமி[ - - எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைப்பர். இலக்கியத்தின் பல துறைகளிலும் தன் ஆளுமையினைப் பதித்தவர் அ.ந.க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது பன்முகப் புலமை காரணமாகவே அவர் அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் கலாநிதி க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கணம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்தார். 'அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்' என்னும் 'தினக்குரலில்' வெளியான இச்சிறு கட்டுரையில் புகழ்பெற்ற கலை, இலக்கியத்திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் 'அ.ந.க ஓர் அறிஞரே' என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரை இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அ.நக.வுடனான தனது அனுபவங்களையும் பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் அம்முக்கியத்துக்குக் காரணம். - . - பதிவுகள் -]


INTELLECTUAL என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அகராதியொன்றின் படி "" AN INTELLECTUAL IS ONE WHO THINKS AND ACTS PREDOMINANTLY TO SERVE THE PURSUIT OF KNOWLEDGE AND APPRECIATION OF FINE THINGS IN LITERATURE AND THE ARTS, AND IS LESS CONCERNED WITH THE MUNDANE AND MATERIAL ASPECTS OF LIFE' தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட அகராதியொன்றின் விளக்கம்:  - " அறிவுத் திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர்' மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது. அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறன் நோக்கிய ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை'. இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக இன்டலெக்ஷ?வல் என்பதனை ""புத்திஜீவிகள்' என்றே எழுதிவிடுகிறார்கள். அர்த்தம் தெரியாமல் ஆங்கிலமொழிப் பரிச்சயம் இல்லாததால் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் ""புத்திஜீவிகள் என்று எழுதிவிட கண்மூடித்தனமாக நமது பத்திரிகையாளர்கள் சிலரும் ""புத்திஜீவிகள்' என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறக்கி விடுவது போலாகிவிடும்.புத்தியை மாத்திரமே முதலாகக்கொண்டு ஜீவிப்பவர்கள் தான் ""புத்திஜீவிகள்' ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள் ""ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே "" ஆய்வறிவாளர்' ஆவர்.

அ.ந.க.
அமரர் அ.ந.கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர்/படைப்பாளி ஆவர். அவர் உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.

இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந.கந்தசாமி அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டிடத்தில் செயற்பட்டது.எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டிடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன "ரெயின்போ' கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்துவந்தார்.

கொழும்பு கோட்டையிலேயே இப்போதைய கொமர்ஷல் வங்கிக்கருகிலுள்ள ஓர் சிறிய அலுவலகத்தில் அமரர் சில்லையூர் செல்வராசன் "copy writers' என்றொரு தனியார் விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர்களும் மற்றொரு மார்க்சியவாதியான மறைந்த இராமநாதன் ஸ்டனிஸிலோஸ்' சிவதாசன் போன்றோரும் எனக்கு மார்க்சியம் சார்ந்த தமிழ் எழுத்துகளை அறிமுகப்படுத்திவந்தனர். மதியபோசன இடைவேளைகளில் நாம் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு. அந்நாட்களில் (25 வயது இருக்கும்) எனக்கு ஈழத்துதமிழ் எழுத்து பற்றியொன்றுமே தெரியாமல் இருந்தது. முற்கூறப்பட்டவர்களே நவீன ஈழத்து/ தமிழ்நாட்டு மார்க்சிய எழுத்துகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். தமிழ் இலக்கியத்தை விட ஆங்கில/ உலக இலக்கியங்கள் பற்றியே நான் அதிகம் அறிந்து வைத்திருந்தேன். அந்நாட்களில் புறக்கோட்டை FRONT வீதியில் ""பாரதி' புத்தகசாலை இருந்தது. அது இப்பொழுதில்லை.அங்கே நிறைய மார்க்சியம் சார்ந்த தமிழ் புத்தகங்கள் இருந்தன. அவற்றை வாங்கி ஆர்வத்துடன் படித்து வந்தேன்.

மேற்சொன்ன நண்பர்களுடன் நா.மு. குமாரசிங்கம்,முத்துராசன், மானாமாக்கீன், பாலுமகேந்திரா போன்ற மாற்றுக் கருத்துகளைச் கொண்ட நண்பர்களுடனும் பழகிவந்தேன். இந்த உறவுகள் தவிர ஆய்வறிவாளர்கள், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரேம்ஜி போன்றவர்களின் வழிகாட்டல்களும் எனக்கு ஆரம்பகாலத்தில் உதவின.

அறிஞர் அ.ந.கந்தசாமிஅமரர் கனசபாபதி கைலாசபதி மூலம் மறைந்த சிறந்த படைப்பாளி "இளங்கீர' னுடன் (சுபைர்) தொடர்பு ஏற்பட்டு வந்தது. 1960/61 வாக்கிலே மடிந்துபோன இதழான "மரகதம்' சஞ்சிகையை இளங்கீரன் வெளியிட்டு வந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய நாவலாசிரியர்கள் சிலரை""மரகதத்தில் அறிமுகஞ் செய்து வைத்தேன். அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் மறைந்துபோன பிரென்சு எழுத்தாளரும் ஆய்வறிவாளருமான அல்(ரு)பேர் கெமு ( ALBERT CAMUS) ஆவார். இக்கட்டுரையைப் பார்த்த அ.ந.க. ""மரகதம் ' தொடர்பாக ஒரு மதிப்புரையை இலங்கை தகவற் திணைக்களம் நடத்திய ""ஸ்ரீலங்கா என்ற தமிழ் ஏற்பாட்டிலே எழுதியிருந்ததுடன் எனது ""மரகதம்' கட்டுரையையும் விசேஷமாகக் குறிப்பிட்டிருந்தார். அ.ந.க.வும் இன்னும் சிலரும் மறைந்துபோன முதலியார் குல சபாநாதனை பிரதம ஆசிரியராகக் கொண்ட " ஸ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அ.ந.க. என்னைச் சந்திக்க விரும்பி, எம்.எஸ்.எம். இக்பாலிடம் அது பற்றிக் குறிப்பிட அன்று "அறியாப்பிள்ளை' யாக இருந்த இளைஞனான என்னை அ.ந.க. வின் அலுவலகத்துக்கு (கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இருந்தது) இழுத்துச்சென்று அ.ந.க.விடம் அறிமுகஞ் செய்துவைத்தார்.

அவரைப் பார்த்தவுடனேயே அவருடைய ஆளுமை எனக்கும் பளிச்சென்று உணர்த்திநின்றது.சிரித்த முகம்,முத்துபல்வரிசை, கரியநிற மும், yankee bump தலைமுடியும் smart dress வயது வித்தியாசம்பாராமல் என்போன்றவர்களையும் சரிசமமாகப் பாவித்து சகஜமாக உரையாடல் யாவுமே என மனத்திரையில் பதிவாகின.
பின்னர் அவருடைய ""மதமாற்றம்' நாடகம் பற்றி ஆங்கில வானொலியில் மதிப்பீடு செய்ததுடன் TRIBUNE (எஸ்.பி. அமரசிங்கம் நடத்தியது) என்ற ஆங்கில வார அரசியற் சஞ்சிகையிலும் அந்நாடகம் பற்றி எழுதினேன். குறிப்பிட்ட அந்த இதழும் மார்க்சியச் சார்பு கொண்டதாகவே இருந்தது.

"அ.ந.க. ஒரு சகாப்தம்' என்றொரு சிறு நூல்

"அ.ந.க. ஒரு சகாப்தம்' என்றொரு சிறு நூல்"அ.ந.க. ஒரு சகாப்தம்' என்றொரு சிறு நூல்"அ.ந.க. ஒரு சகாப்தம்' என்றொரு சிறு நூல் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. அதனை எழுதியிருப்பவர் சுயதேடல் மூலம் அறிஞராக விளக்கிவரும் படைப்பாளியும் நாடகக்கலைஞரும் பத்தி நூலாசிரியரும் எழுத்தாளருமான உற்சாகம் மிகுந்த நமது அந்தனி ஜீவா தான், அவருடைய புத்தகத்தைப் படிக்கும் முன்னர், அ.ந.க.வை மீண்டும் நினைவுறுத்திப் பார்த்ததன் விளைவுதான் இக்கட்டுரையின் முற்பகுதியில் இடம்பெற்ற நான் சம்பந்தப்பட்ட தகவல்கள்.  இவை கூட வரலாற்றுச் செய்திகளடங்கியவைதான்.மலையக வெளியீட்டகத்தினரின் அ.ந.க. ஒரு சகாப்தம் என்ற சிறு நூலின் ஆசிரியர் அந்தனி ஜீவா முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இது 48 பக்கங்களைக் கொண்டது.

"உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசை கொண்ட காலத்தில்' வாழ்ந்த அ.ந.க. பல பரிமாணங்களை கொண்டிருந்தார் என்பதனை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

தனது பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் நாடகங்கள் மூலமும் நூல்கள் சஞ்சிகை மூலமும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வரும் அந்தனி ஜீவா ஒரு சிறந்த இதழியலாளர் என்பதற்கு நிரூபணமாக இந்த புத்தகத்தின் எழுத்து நடை அமைகிறது. அ.ந.க.வை இன்றைய வாசகர்களுக்கு சிறந்த முறையில் அறிமுகப்படுத்தும் வகையில் தமது நூலில் பின்வரும் தலைப்புகளில் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர் .

இலக்கிய வானில் சுடர் நட்சத்திரம் துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் எழுத்துத்துறையின் ஆரம்பகாலம் தொழிலாளர் நலனில் அக்கறை, தகவற் பகுதி, பத்திரிகைத் துறை முதல் சந்திப்பு, கவிதையும் கந்தசாமியும், இலக்கிய மலடர் சிறுகதைத் துறையில் நாவல் துறை நாடகத்துறை இலக்கிய விமர்சனம் , சீர்திருத்தத்துறை வெற்றியின் இரகசியம் அ.ந.க.ஒரு சகாப்தம். அந்தனி ஜீவா அமரர் அ.ந.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். உள்ளார்த்த நட்பு அவர்களிடையே இருந்தது. அதன் வெளிப்பாடாக இந்தக் கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான non -academic ரீதியான நூல்கள் தான் மக்களிடையே பிரபல்யம் பெறுகின்றன. சகலருக்கும் பயனளிக்கின்றன. அந்த விதத்திலே ஆற்றல் மிகு அந்தனி ஜீவா பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் . 48 பக்கங்களில் நூலாசிரியர் பற்றிய பல விபரங்கள் நேர்த்தியாக தரப்பட்டுள்ளன.

கலாபூஷணம் புன்னியாமீன் இவ்விபரங்களை எழுதியுள்ளார். அ.ந.க.வை மறந்துவிட்ட நாம் அவருடைய ஆய்வறிவுப் பங்களிப்புக்களை நினைவுகூர இச்சிறு நூல் பெரிதும் உதவுகிறது.

நன்றி: தினக்குரல் மார்ச் 25, 2009


 

முகநூல் எதிர்வினைகள்:

Sivanesaselvan Arumugam A Na Ka is great personality

Vadakovy Varatha Rajan நல்ல தகவல்கள். Intellectual ஐ ஆய்வறிஞர் என்னலாமா? இவாறே கதை சொல்லி என்று ஒரு சொல்லு தப்பாக பாவிக்கப்பவதை அவதானித்தீர்களா ?

Giritharan Navaratnam இக்கட்டுரையில் அ.ந. க மற்றும் அக்கால இலக்கியச்சூழல் பற்றியெல்லாம் பல அரிய தகவல்களைக் கே.எஸ்.எஸ் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையிலும் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது.

K S Sivakumaran Thank you VNG. Today I am being ignored by present day writers.the main reason is that they don't bother to know the past contributions of the older generation. You have done something for me to highlight me. I am obliged to you.

Maana Mackeen · ஆய்வறிஞர் அ.ந.க. கட்டுரையில் தங்களுடனான என் இளமைக்கால குறித்தமைக்கு நான் நன்றியுடையேன்..

யோ புரட்சி ஆவணமாக்க வேண்டியவை.

Maana Mackeen 'விஎன்ஜி' - அறிவதற்கு: 'அநக'வின் அன்றையத் தமிழாக்க நவீனம் "எமிலி ஸோலா" சுதந்திரனில் சிவநாயகம் அவர்களால் 50களால் தொடராகப்பிரசுரமாகி விற்பனையை எக்கசக்கமாக்கியது! வானொலி நாடக அரங்கு உயர்ந்த தரமானது. மேடை புரட்சிகர நாடகங்களைக் கண்டது (மதமாற்றம்).கலைஞர் லடீஸ்லாஸ் வீரமணி நெருங்கிய நண்பர். இல்லறத்திலேயே தொய்வு..

Maana Mackeen ·திருத்தம்: எமிலிஸோலா என்ற எழுத்தாளரின் உலகப்புகழ் "நாநா"!

K S Sivakumaran My review of "Matha Maarram" appeared in now defunct political magazine Tribune somewhere in the mid 1961. Thamilium enathu manathirai paththyil (Thinakaran Vaaramanjari) kurippiddu irnthen.

Maana Mackeen · அறிவேன். படித்து ரசித்திருக்கிறேன்(தமிழில்).

Maana Mackeen · என்னைப்பற்றி எழுதியது எத்தனையோ! மறப்பதெப்படி? நன்றியை சிறிதளவே செழுத்திய குற்ற உணர்வுள்ளது..


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here